Category: தேவ செய்தி

என்றென்றும் அவரைப் புகழ்ந்து போற்றுங்கள்

தானியேல்(இ) 1: 29, 30 – 31, 32 – 33 ”என்றென்றும் அவரைப் புகழ்ந்து போற்றுங்கள்” தானியேல் இணைப்புப் புத்தகத்தில் மூன்று இளைஞர்களைப் பற்றிய நிகழ்வை முதல் அதிகாரத்தில் வாசிக்கிறோம். அந்த மூன்று இளைஞர்கள் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபெத்நெகோ. இவர்கள் உண்மையான தெய்வமாகிய “யாவே“ இறைவனை வணங்கிக்கொண்டிருக்கிறவர்கள். வேற்றுத்தெய்வத்திற்கு ஆராதனை செலுத்த, அரசரால் வற்புறுத்தப்படுகின்றனர். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் இந்த இளைஞர்கள், கடவுளின் மாட்சியையும், மகிமையையும் புகழ்ந்து பாடுகிறார்கள். அதைத்தான் இந்த பாடல் நமக்கு உணர்த்துகிறது. கடவுள் இன்றோ, நேற்றோ கண்டுபிடித்து வழிபடக்கூடியவர் அல்ல. மாறாக, பல தலைமுறைகளாக வழிபட்டு வரக்கூடிய கடவுள். இந்த கடவுள் அவர்களின் மூதாதையரின் கடவுள். அவர்களை பல தலைமுறைகளாக வழிநடத்தி வந்த கடவுள். இன்றைக்கு இஸ்ரயேல் மக்களின் உயர்வுக்கு அவர் தான் காரணமானவராக இருக்கிறார். கடவுளின் அன்பையும், அருளையும் பெற, இஸ்ரயேல் மக்கள் தகுதியற்றவர்களாக இருந்தும், கடவுள் அந்த தகுதியை அவர்களுக்கு வழங்கியிருக்கிறார். கடவுள்...

அவனது வழிமரபு என்றென்றும் நிலைத்திருக்கும்

திருப்பாடல் 89: 1 – 2, 3 – 4, 26 – 28 ”அவனது வழிமரபு என்றென்றும் நிலைத்திருக்கும்” பொதுவாக, திருப்பாடல்கள் வேண்டுதல்களோடும், விண்ணப்பங்களோடும் தொடங்கும். இறுதியில் கடவுள் புகழ்ச்சியோடு முடிவடையும். ஆனால், இந்த திருப்பாடல் சற்று வித்தியாசமானது. புகழ்ச்சியோடு தொடங்குகிறது. வேண்டுதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து முடிவடைகிறது. தாவீதோடு கடவுள் கொண்டிருந்த உடன்படிக்கையை இது நினைவுபடுத்துவதாக அமைகிறது. கடவுள் தாவீதோடு என்ன உடன்படிக்கையை ஏற்படுத்தினார்? 2சாமுவேல் 7 வது அதிகாரத்தில், கடவுள் தாவீதோடு செய்து கொண்ட உடன்படிக்கைப் பற்றி தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. அதில் தாவீதின் வழிமரபு என்றென்றும் நிலைத்திருக்கும் என்கிற வாக்குறுதி வழங்கப்படுகிறது. அந்த உடன்படிக்கையைக் கேட்டவுடன் நிச்சயம் தாவீது கடவுளின் அன்பை எண்ணி உள்ளம் மகிழ்ந்திருப்பார். ஏனென்றால், கடவுள் தாவீதை உயர்வான இடத்தில் வைத்திருந்தார். ஆடு மேய்க்கிற சாதாரண இடையனை, இஸ்ரயேல் மக்களை வழிநடத்தக்கூடிய அளவுக்கு உயர்த்தியிருந்தார். ஆனால், தாவீதோ அந்த நன்றியுணர்வு இல்லாமல், தவறு செய்தான். கடவுளுக்கு...

கோதுமை மணியின் மாட்சி …

தம்மைத் தேடிவந்த கிரேக்கர்களுக்கு இயேசு சொன்ன அருமையான போதனை கோதுமை மணி உவமை. கிரேக்கர்கள் அறிவுஜீவிகள். அவர்கள் ஞானத்தைத் தேடியவர்கள். எனவே, ஞானம் நிறைந்த இயேசுவின் போதனைகளையும், அருங்குறிகளையும் கேள்விப்பட்டு அவரைக் காணவந்தார்கள். அவர்களுடைய அறிவாற்றலுக்கு ஏற்றவகையில் இயேசு அவர்களிடம் உரையாடுகிறார். கிரேக்கர்களுக்குத் தோல்வி, துன்பம் இவற்றில் நம்பிக்கை இல்லை. துன்பத்தின் வழியாக இன்பமும், வெற்றியும் கிடைக்கும் என்பதெல்லாம் அவர்களின் அறிவாற்றலுக்கு ஒவ்வாத செய்திகள். எனவேதான், ஞானத்தை நாடும் கிரேக்கருக்கு சிலுவை மடமையாய் இருக்கிறது என்றார் பவுலடியார். பவுலைப் பொறுத்தவரையில், சிலுவையில் அறையுண்ட கிறிஸ்து “கடவுளின் வல்லமையும், ஞானமுமாய் இருக்கிறார்” (1 கொரி 1: 22-24). அந்த ஞானத்தைத்தான் தம்மைத் தேடிவந்த கிரேக்கர்களுக்கும், அவர்களோடு நின்றுகொண்டிருந்த தம் சீடர்களுக்கும் இயேசு கற்றுக்கொடுக்க முன்வந்தார். “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும். தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம்...

ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்

இந்த உலகத்தில் வாழக்கூடிய மக்கள் ஒவ்வொரு விதத்தில், ஒவ்வொரு இடத்தில் அடைக்கலம் புகுகிறார்கள். ஒருசிலர், புகழுக்கு மயங்கி, புகழிடத்தில் அடைக்கலம் புகுகிறார்கள். ஒரு சிலர், வாழ்க்கை முழுவதும் செல்வம் சேர்க்க வேண்டும், செல்வம் தான் வாழ்க்கை என செல்வத்திடம் தங்களையே கையளிக்கிறார்கள். ஒரு சிலா் அதிகாரம் தான் எல்லாமே, என்று அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் தங்களது வாழ்க்கையை செலவழிக்கிறார்கள். இவர்கள் அனைவருமே எப்போதும் நிறைவைக் காணப்போவதில்லை. புகழும், பணமும், அதிகாரமும் எவருக்கும் நிறைவைத் தந்ததில்லை. நிம்மதியின்மையைத்தான் கொடுத்திருக்கின்றன. கடவுளிடம் நாம் அடைக்கலம் புகுவதுதான், நமக்கு நிறைவையும், மகிழ்வையும் தரும் என்று, திருப்பாடல் நமக்கு அழைப்புவிடுக்கிறது. கடளிடம் தஞ்சம் கொள்வதே நமக்கு நலம் என்பது திருப்பாடல் ஆசிரியரின் கருத்து மற்றும் வாழ்க்கைப்பாடம். கடவுளிடம் ஏன் நாம் அடைக்கலம் புக வேண்டும்? ஏனென்றால், கடவுள் தான் நமக்கு எல்லாமுமாக இருக்கிறார். கடவுள் தான் நம்மைப்படைத்தவர். கடவுள் தான், நமக்கு வழிகாட்டியாக இருக்கிறவர். நமக்கு வாழ்க்கைநெறிகளை வகுத்துத்தருகிறவர்....

ஆண்டவரே உமது இரக்கத்திற்கு ஏற்ப என்னை நினைவுகூறும்

திருப்பாடல் 106: 19 – 20, 21 – 22, 23 ”ஆண்டவரே உமது இரக்கத்திற்கு ஏற்ப என்னை நினைவுகூறும்” இந்த திருப்பாடல் “அல்லேலூயா” என்கிற வார்த்தையோடு தொடங்கி, அதே வார்த்தையோடு முடிவுறுகிறது. அதாவது, கடவுள் போற்றப்படுவாராக என்பது, இதனுடைய பொருளாக இருக்கிறது. புகழ்ச்சிக்குரிய இந்த இரண்டு வார்த்தைகளுக்கு இடையே, இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கு எதிராக செய்த பாவங்கள், கடவுளின் பொறுமை தெளிவாக விளக்கப்படுகிறது. மனிதர்களின் பாவங்களும், கடவுளின் அளவுகடந்த இரக்கமும் இந்த திருப்பாடலில் வெளிப்படுகிறது. இஸ்ரயேல் மக்கள் கடவுளிடமிருந்து ஏராளமான நன்மைகளைப் பெற்றிருந்தனர். நன்மைகளைப் பெற்றதற்கு மாறாக, அவர்கள் கடவுளுக்கு எதிராக பாவச்செயல்களில் ஈடுபட்டனர். படைத்தவரை மறந்தனர். படைக்கப்பட்ட பொருளை வணங்க ஆரம்பித்தனர். அதாவது, உண்மையான தெய்வத்தை விட்டுவிட்டு, தாங்களாகவே படைத்த தெய்வங்களை வணங்க ஆரம்பித்தனர். இறைவன் எகிப்திலிருந்து அவர்களை விடுவித்த அந்த நிகழ்ச்சிகளையெல்லாம் மறந்துவிட்டு, தங்கள் மனம்போன போக்கில் வாழ ஆரம்பித்தனர். ஆனாலும், கடவுள் அவர்கள் மட்டில் பொறுமையாக...