Category: தேவ செய்தி

துன்பத்தில் தாழ்ச்சி

வரலாற்றிலே, எத்தனையோ மனிதர்களுக்கு, சிலுவைச்சாவை பரிசாகக் கொடுத்திருக்கிறார்கள். இயேசுவைவிட கொடுமையான தண்டனையைக் கொடுத்திருக்கிறார்கள். இவர்கள்பட்ட பாடுகளைவிட இயேசுவின் பாடுகள் எவ்வாறு உயர்ந்தது என்கிற கேள்வி நம்முள் எழலாம். ஒருவேளை, இயேசு எந்தவித பாவமும் செய்யாதவர், இருந்தாலும் தண்டிக்கப்பட்டார், எனவே அவருடைய பாடுகளை நாம் நினைவுகூர்வது சாலச்சிறந்தது என்று நாம் பார்த்தோமென்றாலும்கூட, இயேசுவைப்போல் எத்தனையோ மனிதர்கள், தாங்கள் செய்யாத பாவங்களுக்காக, பொதுவாழ்விலே ஈடுபட்டதற்காக, அநியாயமாக தீர்ப்பிடப்பட்டு, தங்களுடைய உயிரை ஈகம் செய்திருக்கிறார்கள். இயேசுவினுடைய பாடுகள் ஒரே ஒருநாள். முந்தைய இரவு கைது செய்யப்படுகிறார். அடுத்தநாள் சிலுவையிலே அறையப்பட்டு இறந்து விடுகிறார். ஆனால், தொழுநோயினால், புற்றுநோயினால், காசநோயினால் வாழ்வு முழுவதும், உடல்வலியிலும், மனஉளைச்சலிலும், வாழ்ந்தும் இறந்துகொண்டிருக்கின்ற மனிதர்கள் மத்தியில், இயேசுவின் பாடுகள் எப்படி தனித்துவம் மிக்கதாக இருக்க முடியும் என்பதை நாம் சிந்தித்துப்பார்ப்போம். பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலே 2: 7 ல் பார்க்கிறோம்: ‘கிறிஸ்து தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார்....

சுயநலம் அகற்றுவோம்

சதுசேயர்கள் சுயநலவாதிகளாக வாழ்ந்தனர். யாரையும் மதிக்காதவர்களாகவும், தங்களுக்கே உரித்தான் கர்வத்தோடு வாழ்ந்து வந்தனர். இது வெளியாட்களுக்கு மட்டுமல்ல, மற்ற சதுசேயரோடு கூட அவர்கள் இப்படித்தான் முரட்டுத்தனமாக இருந்தனர். அவர்கள் எப்போதும் தங்களது நலன் தேடுகிறவர்களாகவும், தங்களது நிலைக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்கிற எண்ணத்தில் தான் தங்களின் அன்றாட வாழ்வை அமைத்துக்கொண்டனர். அவர்களின் முரட்டுத்தனத்திற்கு தலைமைக்குரு கயபாவின் வார்த்தைகள் சிறந்த எடுத்துக்காட்டு. இயேசு மீது மக்கள் நம்பிக்கை கொள்வதால், இவர்களுக்கு என்ன இழப்பு? என்ற கேள்வி நிச்சயம் நமக்குள்ளாக எழும். மக்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டு அவருக்குப் பின்னால் அணிவகுத்து நின்றால், தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும். இந்த நிலையை அவர்களை ஆளுகின்ற உரோமையர்கள் நிச்சயம் விரும்பமாட்டார்கள். இந்தச்சூழ்நிலை உரோமையர்களின் கைப்பாவைகளாக இருக்கிற இந்த தலைமைச்சங்கத்தின் அதிகாரத்திற்கும், ஆணவத்திற்கும் முடிவு கட்டுவதாக அமைந்து விடும். எங்கே தங்களின் சொகுசு வாழ்க்கை இயேசுவின் பெயரால், அழிந்துவிடுமோ? என்கிற எண்ணம் தான், எப்படியாவது இயேசுவைத்தடுக்க வேண்டும் என்கிற...

விசுவாசத்தை அதிகரிக்க…

இயேசு தான் உண்மையில் கடவுளிடமிருந்து தான் வந்திருக்கிறேன் என்பதை, யூதர்களுக்கு பல வழிகளில் வெளிப்படுத்த முயன்றிருக்கிறார். எப்படியாவது அவர்கள் உண்மையை அறிந்துவிட வேண்டும் என்று, தன்னால் இயன்றதைச் செய்திருக்கிறார். ஆனால், யூதர்களின் மனம் கல்லாகத்தான் இருந்தது. இன்றைய நற்செய்தியிலும் இயேசு, தனது வாதத்திறமையினால், அவர்களுக்கு தான் யாரிடமிருந்து வருகிறேன்? என்பதை உணர்த்த விரும்புகிறார். அதற்கான முயற்சியை எடுக்கிறார். ”தந்தையின் சொற்படி பல நற்செயல்களை உங்கள் மீது செய்து காட்டியிருக்கிறேன்” என்று சொல்கிறார். பொதுவாக, வார்த்தைகளில் போதிக்கிறபோது, அது வாதத்திற்கு உட்பட்டது. நாம் சொல்லக்கூடிய வார்த்தைகளை ஒவ்வொருவரும் அவரவர் பிண்ணனியிலிருந்து புரிந்து கொள்வார்கள். அது நாம் சொல்கிற அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்படுமா? என்றால், அது நிச்சயம் இல்லை. ஆனால், செயல்பாடுகளைப் பொறுத்தவரையில், வாதத்திற்கு அப்பாற்பட்டது. இயேசு ஒரு சிறந்த போதகர். காரணம், வார்த்தையினால் மட்டுமல்ல, நற்செயல்களால், தான் யார் என்பதை, மற்றவர்களுக்கு உணர்த்த முயற்சி எடுத்தவர். இதுவரை யாரும் அப்படிப்பட்ட நற்செயல்களை, மக்கள்...

கீழ்ப்படிதல்

யூதர்கள் இயேசுவிடம், ”நாங்கள் பரத்தைமையால் பிறந்தவர்கள் அல்ல. எங்களுக்கு ஒரே தந்தை உண்டு. கடவுளே அவர்” என்று சொல்கிறார்கள். இயேசு தனது சொல்லாற்றலின் மூலமாக, அவர்களுடைய வாழ்க்கை முறையினாலும், நடத்தையினாலும், ஆபிரகாமின் பிள்ளைகள் அல்ல என்பதை, தெளிவாக அவர்களுக்கு உரைத்துவிட்டார். உடனே யூதர்கள், அடுத்ததாக, தாங்கள் கடவுளின் பிள்ளைகள் என்று விவாதம் செய்ய ஆரம்பிக்கிறார்கள். இயேசு அதனையும் உடைத்தெறிகிறார். அதனைத்தான். இந்த நற்செய்தியின் கடைசிப்பகுதி நமக்கு தெளிவுபடுத்துகிறது. விடுதலைப்பயணம் 4: 22 ”இஸ்ரயேல் என் மகன்: என் தலைப்பிள்ளை”. இவ்வாறு கடவுள் இஸ்ரயேலை தனது முதல் பிள்ளையாக தேர்ந்தெடுக்கிறார். இஸ்ரயேல் மக்கள் கீழ்ப்படியாமையோடு பாலைவனத்தில் மோசேயோடு சண்டையிடுகிறார்கள். அப்போது மோசே அவர்களிடம் சொல்கிறார்: ”ஞானமற்ற மதிகெட்ட மக்களே! ஆண்டவருக்கு நீங்கள் அளிக்கும் கைம்மாறும் இதுதானா? உங்களைப் படைத்து உருவாக்கி நிலைநிறுத்திய உங்கள் தந்தை அவரல்லவா? இவ்வாறு இஸ்ரயேலை தனது பிள்ளையாக கருதிய இறைவனை, இஸ்ரயேல் மக்கள் வேற்று நாட்டினரோடு தொடர்பு வைத்து,...

வாய்ப்புக்களைப் பயன்படுத்துவோம்

இன்றைய நற்செய்தியை (+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 21-30) நாம் வாசிக்கிறபோது, இயல்பாகவே ஏழை இலாசர் உவமையில் வரும் செல்வந்தனின் நிலை நமக்கு நினைவுக்கு வருகிறது. இயேசு சொல்கிறார், ”நான் போன பின் நீங்கள் என்னைத் தேடுவீர்கள். நான் போகுமிடத்திற்கு உங்களால் வர இயலாது. நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள்”. இழந்த வாய்ப்புகளை நாம் திரும்பப்பெற முடியாது, என்று பொதுவாகச் சொல்வார்கள். கிடைக்கிற வாய்ப்பைப்பயன்படுத்தி, நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ள முயற்சி எடுக்க வேண்டும். இல்லையென்றால் நமக்கு வருகிற அழிவை யாராலும், தடுக்க முடியாது. ஏழை இலாசர் உவமையில், அந்த செல்வந்தன் தனது சகோதரர்களுக்காக இலாசரை திரும்ப அனுப்புவதற்கு, ஆபிரகாமிடம் மன்றாடுகிறார். ஆனால், ஆபிரகாமோ அவர்களை வழிநடத்துவதற்கு இறைவாக்கினர்கள் இருப்பதாகக்கூறுகிறார். அப்படி செவிசாய்க்காதவர்கள் யாருக்கும் செவிசாய்க்க மாட்டார்கள் என்றும், அவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது என்பதாகவும் நாம் புரிந்து கொள்ளலாம். கடவுள் நமக்கு நாம் திருந்தி வாழ்வதற்கு பல வாய்ப்புகளைத் தருகிறார். அந்த வாய்ப்புக்களை...