Category: இன்றைய சிந்தனை

செல்வத்தின் பயன்பாடு

செல்வத்தை எப்படி சரியான முறையில் கையாள வேண்டும் என்பதை, லூக்கா நற்செய்தியாளர் தன்னுடைய நற்செய்தியில் எழுதுகிறார். செல்வம் என்பது ஆசீர்வாதமாகவும் இருக்கலாம். அதேவேளையில் நமக்கு சாபமாகவும் மாறலாம். செல்வத்தை நாம் எப்படி கையாளுகிறோம் என்பதைப் பொறுத்துதான், நமது செல்வம் நமக்கு ஆசீர்வாதமா? அல்லது சாபமா? என்பதை நாம் முடிவு செய்யலாம். செல்வத்தை நமது சுயநலத்திற்காக, நம்மை பலப்படுத்துவதற்காக பயன்படுத்தினால், அது நமக்கு சாபம். மாறாக, செல்வத்தை மற்றவர்கள் பயன்பெறக்கூடிய வகையில் பயன்படுத்தினால், அது மிகப்பெரிய ஆசீர்வாதம். செல்வத்தை எப்படி பயன்படுத்தக்கூடாது என்பதை, அறிவற்ற செல்வந்தன் உவமை 12 வது அதிகாரத்திலும், ஏழை இலாசர் உவமை 16 வது அதிகாரத்திலும் நாம் பார்க்கலாம். செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை நல்ல சமாரியன் உவமை 10 வது அதிகாரத்திலும், சக்கேயு நிகழ்ச்சி 19 வது அதிகாரத்திலும் நாம் பார்க்கலாம். இந்த இரண்டு வெவ்வேறான தலைப்புகளுக்கு நடுவில் சற்று புரிந்து கொள்ள கடினமான பகுதிதான்,...

தேடு! கண்டுபிடி! கொண்டாடு!

லூக்கா 15:1-10 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். பரிசுத்த குழந்தையாய் வந்த நாம் வளர வளர பரிசுத்த தன்மையில் இருந்து விலகிவிட்டோம். அதனால் நல்ல பல குணங்கள், செயல்பாடுகள் நம்மை விட்டு விலகி விட்டன. காணாமல் போய்விட்டன. நல்ல குணங்கள் நம்மைவிட்டு காணாமல் போனதால் நாம் பெயரிழந்து நிற்கிறோம். இன்றைய வாசகம் உங்களிடமிருந்து காணமல்போன நல்ல குணங்களை தேடுங்கள்! கண்டுபிடியுங்கள்! கண்டுபிடித்து அதை அனைவரோடும் கொண்டாடுங்கள் என்கிறது. இரண்டு விதங்களில் நாம் அதை செய்யலாம். 1. கண்டுபிடி உங்கள் கையில் ஒரு பேப்பரும், பேனாவும் எடுங்கள். எழுத தயாராகுங்கள். நான் வைத்திருந்த நல்ல குணங்கள் என்னென்ன? இப்போது நான் எதையெல்லாம் தொலைத்திருக்கிறேன்? அனைத்தையும் பொறுமையாக இருந்து கண்டுபிடிக்க...

உட்காருவதனால் உண்டாகும் பலன்கள் அதிகம்

லூக்கா 14:25-33 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். பரபரப்பான உலகில் வாழும் நாம் வாழ்க்கையில் எதையும் நிதானமாக உட்கார்ந்து சிந்திப்பதில்லை. உட்கார்ந்து சிந்திக்கும் போதுதான் நம்மைப் பற்றிய உண்மை நிலவரங்கள் வெளிப்படுகின்றன. அதிலே தான் நாம் நம்மை முன்னேற்றுவதற்கான செயல்பாடுகளைச் செய்ய முடிகிறது. உட்காருவதால் உண்டாகும் இரண்டு முக்கிய பலன்களை சொல்லித் தர வந்திருக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். 1. பலம் கிடைக்கிறது நாம் உட்கார்ந்து சிந்திக்கும்போது கடினமான வாழ்க்கையை சந்திப்பதற்கான பலம் கிடைக்கிறது. உட்கார்ந்து ஒரு சில மணித்துளிகள் சிந்திக்கும்போது நம் மனது பலவிதமான, புதுமையான யோசனைகளை அள்ளி அள்ளி வழங்குகிறது. இயேசுவின் பின்னால் செல்லும் போது ஏற்படும் துன்பங்களை எப்படி சளி்க்காமால் சமாளிக்க வேண்டும்...

கிறிஸ்துவின் மனநிலை

பிலிப்பியர் 2: 5 – 11 ”கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்”. கிறிஸ்து இயேசு இந்த உலகத்திற்கு வந்தபோது, எப்படிப்பட்ட மனநிலை கொண்டிருந்தார்? ”காலம் நிறைவேறி விட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” (மாற்கு 1: 15). இது தான் இயேசுவின் மனநிலையாக இருந்தது. இயேசு இந்த உலகத்திற்கு வந்தது, மக்களை மனம் திருப்பி, இறைவனின் பக்கம் அவர்களைக் கூட்டிச் சேர்க்க வேண்டும் என்பது தான் ஆகும். எந்த மக்கள்? லூக்கா நற்செய்தியாளர் இதற்கான பதிலைத் தருகிறார். ”ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றவர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்..”. இயேசு வருவதற்கு முன்னால், மேற்சொன்ன அனைவருமே, மற்ற போதகர்களால் விலக்கி வைக்கப்பட்டிருந்தனர். இனி அவர்களுக்கு இறையாட்சியில் இடமில்லை என்கிற நிலையே நீடித்தது. அவர்கள் சமூகத்திலிருந்து முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டனர். அவர்களைத் தீண்டுவாரும் எவருமில்லை. ஆனால், இயேசு...

அனைத்து ஆன்மாக்கள் திருவிழா

கல்லறைகளை கண்முன்னே வை யோவான் 6:37-40 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் அனைத்து ஆன்மாக்கள் திருவிழா திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அனைத்து ஆன்மாக்களின் பரிந்துரை உங்களுக்கு இந்த நாளில் கிடைப்பதாக! இறந்தவர்களை நினைத்துப் பார்க்கும்விதமாக `அனைத்து ஆன்மாக்கள் தினம்’ அல்லது `கல்லறைத் திருநாளை” நாம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகிறாம். இறந்தவர்கள் அனைவரையும் இன்று நாம் நினைத்து அவர்களுக்காக ஜெபிக்கிறோம். நம் அன்னையாகிய திருச்சபை, மோட்சத்திலிருக்கும் தன் மக்களை நினைத்தபின் வேதனைப்படும் தன் மக்களை நினைக்கிறது. அவர்களுக்காக பரிந்து பேசுகிறது. அவர்களுக்கு தன்னாலான உதவி செய்ய முயற்சிக்கிறது. மோட்சத்தில் வாழும் தன் மக்களுடன் அவர்களை சீக்கிரம் ஒன்றிக்கும்படி மன்றாடுகிறது. இன்று ஒவ்வொரு குருவும் மூன்று திருப்பலிகள் வைக்கிறார்கள். முதல் திருப்பலி உத்தரிக்கிற ஸ்தலத்தில்...