Category: இன்றைய சிந்தனை

படைகளின் ஆண்டவரே! மீண்டும் வாரும்

திருப்பாடல் 80: 8 – 11, 12 – 13, 14 – 15, 18 – 19 ”படைகளின் ஆண்டவரே! மீண்டும் வாரும்” திருப்பாடல்களில் பெரும்பான்மையான பாடல்கள் விண்ணப்பங்களாகவும், தங்களது துன்பத்தை வெளிப்படுத்தும் பாடலாகவும் அமைந்துள்ளன. இந்த பாடலும் இதிலிருந்து விதிவிலக்கான பாடல் அல்ல. ஆண்டவரின் உதவியைக் கேட்கிற ஒரு மனிதரின் கேவல் குரலாக இந்த பாடல் அமைந்துள்ளது. இது மன்னிப்பாகவும் வெளிப்படுகிறது. இஸ்ரயேலின் ஆண்டவர் அவர்களுக்கு பலவிதமான நன்மைகளைச் செய்தார். அந்த நன்மைகளை எல்லாம் மறந்துவிட்டு, இஸ்ரயேல் தவறான பாதைக்குச் சென்றது. அதற்கான பலன்களை மிக விரைவிலேயே பெற்றுக்கொண்டது. உண்மை உரைத்தவுடன், வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கச்செய்கிறது. அதனுடைய விளைவு: மீண்டும் கடவுளிடம் திரும்பி, திருந்தி வர வேண்டும் என்கிற எண்ணம். அந்த எண்ணத்தைத்தான் இங்கு நாம் பார்க்கிறோம். கடவுள் செய்த நன்மைகளையெல்லாம் மறந்தவிட்டதற்கான் தண்டனையாக இப்போதுள்ள நிலையை, ஆசிரியர் பார்க்கிறார். இப்போது இருக்கிற மோசமான நிலைக்கு தாங்கள் முழுக்க...

உங்கள் பெயர் இருக்கிறதா?

லூக்கா 10:17-24 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நமது பெயர் திருமண அட்டையில் வர வேண்டும், திருவிழா அழைப்பிதழில் வர வேண்டும் மற்றும் மேடையில் நம் பெயர் உச்சரிக்கப்பட வேண்டும் என்று நாம் ஆசைப்படுவது உண்டு. அதுவெல்லாம் உயர்வல்ல. நம் பெயர் விண்ணத்தில் இருக்கிறதா? அதுதான் மிக முக்கியம். இன்றைய நற்செய்தி வாசகம் விண்ணகத்தில் உங்கள் பெயர் இருக்கிறதா? என்பதை பரிசோதித்துப் பாருங்கள். பெயர் இல்லையென்றால் எழுத முயற்சி எடுங்கள் என நம்மோடு பதமாக பேசுகிறது. மண்ணகத்தில் நாம் செய்யும் சிறப்புமிக்க செயல்கள் தான் விண்ணத்தில் நம் பெயர்கள் எழுதப்பட மிகச் சிறந்த காரணிகளாக உள்ளன. மண்ணகத்தில் நாம் இரண்டு செயல்களின் மீது கவனம் செலுத்தினால் அதுதான்...

குழந்தை இயேசுவின் புனித தெரசா – விழா

வாழ்வை மாற்றுங்கள் சீடர்கள் இயேசுவிடத்திலே யார் பெரியவர்? என்ற கேள்வி கேட்கிறார். இயேசு அவர்களிடத்தில் ”நீங்கள் மனந்திரும்பிச் சிறுபிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால், விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று பதில் சொல்கிறார். சீடர்கள் நிச்சயம் இந்த பதிலை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இதை, இதை எல்லாம் செய்யுங்கள், நீங்கள் விண்ணரசிற்குள் நுழைய முடியும் என்ற பாணியில், இயேசுவின் பதில் அமைந்திருக்கும் என்று சீடர்கள் நினைத்திருந்தார்கள். ஆனால், இயேசு முற்றிலும் மாறுபட்ட ஒரு பதிலைத் தருகிறார். அவர்களை மனம் மாறுவதற்கு, மாற்றம் பெறுவதற்கு அழைப்புவிடுக்கின்றார். இதனுடைய அர்த்தம் என்ன? இயேசு எதற்காக மனமாற்றத்தைப் பற்றி இங்கு பேசுகிறார்? அப்படி மனமாற்றம் இல்லையென்றால், விண்ணரசிற்கான வாய்ப்பே இல்லை என்பதையும் உறுதியாகச் சொல்கிறார். ஏன்? இயேசுவோடு இருந்து, அவருக்குப் பின்னால் அவருடைய பணி செய்யக்கூடிய சீடர்கள் தங்களுக்குள் யார் பெரியவர்? என்று சாதாணமானவர்கள் கேட்கக்கூடிய கேள்வியை கேட்டு, தங்களுக்குள் சண்டையிடுவது இயேசுவுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள்...

பின்பற்றுவேன், ஆனால்… !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே, இயேசுவிடம் வந்து அவரது சீடராய் வாழ விருப்பம் தெரிவித்த மூன்று மனிதர்களைப் பற்றி இன்றைய நற்செய்தி வாசகத்தில் பார்க்கிறோம். இவர்கள் மூவரும் நம்மையே பிரதிபலிக்கின்றார்கள் என்பதை உணர வேண்டும். நாமும் இயேசுவின் சிறந்த சீடர்களாய் வாழ விரும்புகிறோம். நமக்கும் நல்ல எண்ணங்கள், உயர்ந்த சிந்தனைகள் அவ்வப்போது எழுகின்றன. ஆனால், பல தடைகள் நம்மை ஈர்க்கின்றன. சீடராய் வாழவிடாமல் தடுக்கின்றன. எனவே, நாமும் அந்த மூன்று மனிதர்களைப் போல சாக்குபோக்குகளைக் கண்டுபிடிக்கிறோம். முதலில் என்னுடைய வீட்டுக் கடமைகள் முடியட்டும், அல்லது இந்தப் பணிகளை ஆற்றிவிட்டு அதன்பின் நான் முழு நேரமாக இறைபணியில் ஈடுபடுவேன் என்றெல்லாம் எண்ணுகின்ற நல்ல உள்ளங்கள் பல இருக்கின்றன. ஆனால், இயேசு ஒரு தெளிவைத் தருகின்றார்: அனைத்திற்கும் மேலாக ஆண்டவரைத் தேடுங்கள். அவருக்குப் பணி புரியுங்கள். மற்ற அனைத்தையும் அவரே பார்த்துக்கொள்வார். எனவே, பல்வேறு பணிகளுக்கு மத்தியில் இயேசுவின் சீடராய் வாழ விரும்புவோர்...

தூய மிக்கேல், கபிரியேல், ரபேல் – அதிதூதர்கள் விழா

உடனிருக்கும் தூதர்களாவோம்! யோவான் 1:47-51 இறையேசுவில் இனியவா்களே! அதிதூதர்கள் திருவிழாவிற்கு ஆனந்தத்தோடும் ஆர்ப்பரிப்போடும் வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அதிதூதர்களான மிக்கேல், கபிரியேல், இரபேல் ஆகியோரின் திருநாளைக் இன்று நாம் கொண்டாடுகிறோம். அதிதூதர்களின் சிறப்பு என்ன? கீழே பார்க்கலாம். தீமையிலிருந்து காப்பாற்றும் மிக்கேல், மங்கள வார்த்தை சொல்லும் கபிரியேல், நலம் நல்கும் இரபேல் என மூன்று அதிதூதர்கள் இருக்கின்றனர். நம் கத்தோலிக்க நம்பிக்கை மரபில். தூதர்கள் என்பவர்கள் இசுலாம், யூத, மற்றும் பாரசீக சமயங்களிலும் காணப்படுகின்றனர். இறைவனுக்கும், மனிதருக்கும் இடைப்பட்டவர்கள் இவர்கள். இரண்டு இயல்புகளையும் உடையவர்கள் இவர்கள். கடவுளைப் போல காலத்தையும், இடத்தையும் கடந்து நின்றாலும், மனிதர்களைப் போல காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டவர்கள் இவர்கள். நிறைய நாள்கள் நாம் கடவுளையும், புனிதர்களையும் நினைத்துப் பார்க்கிறோம்....