Category: இன்றைய சிந்தனை

பிற இனத்தாரே! ஆண்டவரைப் போற்றுங்கள்!

திருப்பாடல் 117: 1, 2, மாற்கு 16: 15 கடவுள் ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கு மட்டும் சொந்தம் என்கிற மாயையை உடைக்கிறது இந்த திருப்பாடல். இஸ்ரயேல் மக்கள் கடவுள் தங்களுக்கு மட்டும் தான் உரியவர் என்கிற எண்ணம் கொண்டிருந்தனர். கடவுள் தங்களுக்கு மட்டும் தான் நன்மைகளைச் செய்வார், நமக்கு எதிராக இருக்கிற அனைவருமே கடவுளுக்கு எதிரானவர்கள் என்று நம்பினர். ஆனால், கடவுள் எல்லாருக்கும் பொதுவானவர் என்கிற புதிய சிந்தனையை, இந்த திருப்பாடல் நமக்கு தருகிறது. கடவுள் அனைவராலும் போற்றுதற்குரியவர். ஏனென்றால், அவர் எல்லாரையும் அன்பு செய்கிறார். எல்லாருக்குமான மீட்புத்திட்டத்தை அவர் வகுத்திருக்கிறார். குறிப்பிட்ட மக்களை மட்டும் மீட்க வேண்டும் என்று கடவுள் ஒருபோதும் விரும்பியதில்லை. அவருடைய பார்வையில் எல்லாருமே சமமானவர்கள் தான். எல்லாருமே அவருடைய பிள்ளைகள் தான். அவர் எல்லாருக்கும் நன்மைகளைச் செய்து கொண்டிருக்கிறவர். அந்த இறைவனை நாம் குறிப்பிட்ட மக்களுக்கானவர் என்று தவறாக புரிந்து கொண்டால், அவருடைய அன்பை உணர...

இறைவாக்கினர்களின் பணி

ஆமோஸ் 7: 10 – 17 இரண்டாவது எரோபவாமின் ஆட்சிக்காலத்தில், இஸ்ரயேலில் வளமையும், அமைதியும் நிறைந்திருந்தது. ஆனால், அதற்கு மையமாக விளங்கிய, அதற்கு காரணமாக விளங்கிய இஸ்ரயேலின் கடவுளை அவர்கள் மறந்துவிட்டனர். இன்றைய பகுதி, பெத்தேலின் குருவாகிய அமட்சியாவிற்கும், இறைவாக்கினர் ஆமோசிற்கும் இடையே நடக்கும் வாக்குவாதத்தை எடுத்துரைக்கிற நிகழ்வாக அமைகிறது. அமட்சியா, ஆமோசை பிழைப்புவாதி என்றும், பிழைப்பிற்காக இறைவாக்கு உரைக்கிறவர் என்றும் சாடுகிறார். அரசனிடமும் அவரைப்பற்றி அவதூறான வார்த்தைகளைச் சொல்கிறார். அவரை வேறு எங்காவது இறைவாக்குரைத்து, அவரது வாழ்க்கையைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறுகிறார். ஆனால், ஆமோசோ அது தன்னுடைய பிழைப்பு அல்ல என்பதை உறுதிப்படுத்துகிறார், “நான் இறைவாக்கினன் இல்லை. இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் இல்லை. நான் ஆடு மாடு மேய்ப்பவன். ஆண்டவர் என்னைத் தேர்ந்தெடுத்து, இறைவாக்கு உரைத்திடு என்று சொன்னார்” என்று கூறுகிறார். இப்போது அவருடைய சினம், அமட்சியாவை நோக்கி திரும்புகிறது. “இஸ்ரயேலுக்கு எதிராக இறைவாக்கு உரைக்காதே. ஈசாக்கின் வீட்டார்க்கு எதிராகப்...

உண்மையான அர்ப்பண வாழ்வு

யோவானுடைய இறப்புச்செய்தியைக் கேட்டவுடன் இயேசு கலிலேயாவிலிருந்து புறப்பட்டு படகிலேறிப் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றதாக நற்செய்தியாளர் கூறுகிறார். அவர் தனிமையாக சென்றதற்கு பல காரணங்கள் இருக்கலாம். “தன்னுடைய உறவினர்“, “தனது முன்னோடி” திருமுழுக்கு யோவானுடைய அவருக்கு மிகப்பெரிய வருத்தத்தை உண்டாக்கியிருக்கலாம். எனவே, சற்று ஆறுதல் பெறுவதற்காக இந்த தனிமையை விரும்பியிருக்கலாம். அல்லது ஓய்வில்லாத பணிவாழ்வில் சிறிது இளைப்பாற விரும்பியிருக்கலாம். அல்லது பாடுகள் நெருங்குகின்ற வேளையில் தன் இறைத்தந்தையோடு ஒன்றித்திருக்க ஆசைப்பட்டிருக்கலாம். எது எப்படியென்றாலும், அவர் அந்த இடத்திற்கு தனிமையாக இருப்பதற்கு செல்வதற்கு முன்பே, மக்கள் அவர் அங்கே செல்வதைக்கேள்விப்பட்டு சென்றுவிட்டனர். இயேசு அவர்களைப்பார்த்து கோபப்படவில்லை. எரிச்சலடையவில்லை. எனக்கு ஓய்வுக்கு கூட நேரம் கொடுக்க மாட்டார்களா? என்று ஆதங்கப்படவில்லை. மாறாக, மக்கள் மீது பரிவு கொள்கிறார். பணிவாழ்வு என்பது நேரத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்வு அல்ல. எல்லா நேரமும் மக்களுக்காக பணியாற்ற தயாராக இருக்கக்கூடிய வாழ்வு. அதை இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வோம். நமக்கான...

இறைவன் விரும்பும் விழாக்கள்

ஆமோஸ் 5: 14 – 15, 21 – 24 “உங்கள் திருவிழாக்களை நான் வெறுத்து அருவருக்கின்றேன்” என்று படைகளின் கடவுள் சொல்வதாக, ஆமோஸ் இறைவாக்கு உரைக்கின்றார். இணைச்சட்டம் 23: 14 ல் கடவுள் சொல்கிறார்: “நீ எனக்கு ஆண்டிற்கு மூன்றுமுறை விழா எடுப்பாய்”. இறைவன் இஸ்ரயேல் மக்களிடம் விழா எடுக்கச் சொல்கிறார். ஆனால், இறைவாக்கினர் ஆமோஸ், இறைவன் விழாக்களை அருவருப்பதாக இறைவாக்கு உரைக்கின்றார். இதை எப்படி புரிந்து கொள்வது? இஸ்ரயேல் மக்கள் கொண்டாடும் விழாக்களில் முக்கியமானது பாஸ்கா விழா. இந்த விழா, கடவுள் இஸ்ரயேல் மக்களை அற்புதமாக, எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து கடந்து போகும் நிகழ்வை நினைவுபடுத்துகிறது. கூடாரத்திருவிழா, இஸ்ரயேல் மக்கள் நாற்பது ஆண்டு காலம் பாலைவனத்தில் வாழ்ந்ததையும், அவர்களை இறைவன் உணவில்லாத, நீரில்லாத பாலைவனத்திலும் அற்புதமாக வழிநடத்தியதையும் குறிக்கிறது. மற்ற விழாக்களில் இஸ்ரயேல் மக்கள் செலுத்தும் காணிக்கைகள் குறிப்பாக, அறுவடையிலிருந்தும், தங்களுடைய கால்நடையிலிருந்தும் செலுத்தும் காணிக்கைகள், அவர்கள் கடவுள் மீது...

இயேசுதரும் அமைதி

ஒவ்வொரு புதுமையும், முன்னொரு காலத்தில் இருந்த புதுமையாக மட்டும் இருந்தால், அது நமக்குள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. அது நடந்து முடிந்து விட்டது. இயேசு வாழ்ந்தார். புதுமைகள் செய்தார். அவ்வளவுதான் என்று யோசிக்கத்தோன்றும். இயேசு வாழ்ந்தபோது மட்டும் தான், கடலை அடக்குவாரா? அப்படியென்றால், சீறி எழுகின்ற அலைகளுக்கும், கடற்காற்றும் இப்போதும் சிக்கிக்கொண்டிருக்கிறவர்களை அவர் காப்பாற்ற மாட்டாரா? என்ற கேள்வியும் நமக்குக் கேட்கத்தோன்றும். இயேசுவின் வல்ல செயல்களும், புதுமை செய்யும் ஆற்றலையும் மட்டும் இந்த பகுதி நமக்குத் தெரிவிப்பதற்காக எழுதப்படவில்லை. அதையும் தாண்டி நாம் சிந்திப்பதற்கு, இது நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசு இருக்கிற இடத்தில் பிரச்சனைகளுக்கு இடமில்லை. மாறாக, அமைதி மட்டும் தான் இருக்கும், என்கிற செய்தியை, இந்த வாசகம் நமக்குத்தருகிறது. வாழ்வின் எத்தகைய சூழ்நிலையில் நாம் வாழ்ந்தாலும், இயேசு நம்மோடு இருந்தால் போதும். நமது வாழ்க்கை அமைதியாகப் பயணிக்கும். அந்த அனுபவத்தை நாம் பெற்றுக்கொண்டால், நமது வாழ்க்கையில் நாம் அமைதியாகப்...