Category: இன்றைய சிந்தனை

இயேசு அருளும் வாக்குறுதி

2தீமோத்தேயு 1: 1 – 3, 6 – 12 ”இயேசு அருளும் வாக்குறுதிக்கு ஏற்ப, அவருடைய திருத்தூதனான பவுல்” என்று, பவுல் தன்னுடைய திருமுகத்தைத் தொடங்குகிறார். இங்கு வாக்குறுதி என்கிற வார்த்தை நம்முடைய கவனத்தை ஈர்ப்பதாக இருக்கிறது. இயேசு அருளும் வாக்குறுதி என்று பவுல் எதனைக் குறிப்பிடுகிறார்? வழக்கமான பவுலின் திருமுகத்திலிருந்து, இந்த கடிதம் சற்று மாறுபட்ட தொனியில், அதிலும் குறிப்பாக, இந்த வார்த்தையை பவுல் பயன்படுத்தியிருப்பதன் நோக்கம் புரிவதற்கு சற்று கடினமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால், விவிலியத்தில் அதற்கான விளக்கங்கள் இடம்பெறவில்லை. இதனுடைய பொருள் என்ன, என்பதை சற்று ஆழமாகச் சிந்தித்துப் பார்ப்போம். உரோமை நகரில் பவுல் சிறையில் அடைக்கப்பட்ட இடம் என்று காட்டப்படுகிற இடத்தை நாம் பார்த்தோம் என்றால், பவுல் சொல்ல வருகிற அர்த்தத்தை ஓரளவு நம்மால் புரிந்து கொள்ள முடியும். அவர் சிறையில் அடைக்கப்பட்ட இடம், குகை போன்ற பாதாள அறை. அந்த அறை முழுவதுமே கற்களால்...

கடவுளுக்கான காணிக்கையை செலுத்தி விட்டீர்களா?

மாற்கு12:13-17 நம் வாழ்க்கையை திறனாய்வு செய்து பார்க்கின்ற போது ஒரு உண்மை புலனாகிறது. அந்த உண்மை என்னவெனில் கடவுள் நமக்கு கொடுப்பதில் கணக்குப் பார்ப்பதில்லை. எப்படி இருந்த நான் இப்படி இருக்கிறேன்? இந்த கேள்வியை கேட்டுப் பார்த்தீர்களா? நம்முடைய உடல் ஆரோக்கியம், பொருளாதாரம், கல்வி மற்றும் வாழ்கைத்தரம் இவைகளில் எவ்வளவோ வளர்ந்திருக்கிறோம். இன்னும் கடவுள் நம்மை விசேசமாய் உயர்த்தப் போகிறார் என்பதை எல்லாம் நினைக்கும் போது என் ஆன்மா ஆண்டவரை ஏற்றிப் போற்றுகிறது என்று பாடிய அன்னை மரியாளோடு சேர்ந்து பாடத் தோன்றுகிறது. இத்தனையையும் இனிதே இன்முகத்தோடு குறித்த நேரத்தில் அருவியாய் பொழியும் ஆண்டவருக்கு நான் கொடுப்பது என்ன? என்ற கேள்வியைக் கேட்க சொல்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கடவுளுக்கு உரியதை கடவுளுக்கு கொடுங்கள் என்கிறார். ஒரு சிலருக்கு கடவுளுக்கு ஏன் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி இருக்கிறது. இதோ உங்களுக்கான இரண்டு பதில்கள்:1) நம்மிடம்...

பாவம் வளர வளர அவமானமும் வளரும்

அத்தொழிலாளர்களை ஒழித்துவிட்டுத் திராட்சைத் தோட்டத்தை வேறு ஆள்களிடம் ஒப்படைப்பார் (மாற்12:9) மனிதர்களாகிய நாம் பாவம் செய்வது இயல்பு. பாவத்திலிருந்து திரும்புவது இறை இயல்பு. தந்தையே நான் உமக்கும், எனக்கும் என் அயலாருக்கும் எதிராக பாவம் செய்தேன். இனி இந்த பாவத்தை செய்யமாட்டேன் என்ற வாக்குறுதி தான் வானளவு நம்மை உயர்த்தும். நம்மை பரிசோதித்து பார்த்து பாதையை திருத்தாத பயணம் நம்மை பாதாளம் வரை தாழ்த்தும். இன்றைய நற்செய்தி வாசகத்தில் திராட்சைத் தோட்டத் தொழிலாளர்கள் பாவத்திற்கு மேல் பாவங்களை தங்கள் மேல் குவித்து அவமானங்களை அள்ளுகின்றனர். முதல் பாவம் : ஒரு பணியாளரை நையப்புடைத்தது இரண்டாம் பாவம் : வோறொரு பணியாளரை தலையில் அடித்து அவமதித்தது மூன்றாம் பாவம் : மற்றொரு பணியாளரை கொலை செய்தது நான்காம் பாவாம் : சிலரை நையப்புடைத்தது, சிலரை கொன்றது ஐந்தாம் பாவம் : திராட்சைத் தோட்ட உரிமையாளரின் அன்பு மகனை கொன்றது எத்தனை பாவங்கள் பாருங்கள்....

ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக

திருப்பாடல் 104: 1, 24, 29 – 30, 31, 34 திருப்பாடல் ஆசிரியர் கடவுளின் மாட்சிமையைப் பற்றியும், அவரது வல்லமையான செயல்பாடுகளையும் பற்றி, அதிகமாக எழுதியிருக்கிறார். அவர் அப்படி எழுதியதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஒன்றை அனுபவித்தவர் தான், அதனை மற்றவர்களுக்கு எழுத்தால் சொல்ல முடியும். தன்னுடைய வாழ்க்கையில் கடவுளின் எல்லாவிதமான மாட்சிமையின் தன்மைகளைம் முழுமையாக அனுபவித்தவர் அவர். கடவுளின் கருவியாக இருந்திருக்கிறார். கடவுளின் மாட்சிமையை அரசாட்சி மூலமாக மக்களுக்கு நிரப்பியிருக்கிறார். இந்த திருப்பாடலிலும், கடவுளின் மாட்சிமையை முழுவதுமாகச் சொல்கிறார். கடவுள் இந்த உலகத்தை படைத்தது அவருடைய மாட்சிமைக்காக மட்டுமல்ல, மாறாக, மனிதர்கள் மீது தான் கொண்டிருந்த அன்பின் வெளிப்பாட்டால். மனிதர்களைப் படைத்ததும் சரி, அந்த படைப்பு முழுவதிற்கும் மனிதனைப் பொறுப்பாளராக மாற்றியதிலும் சரி, இந்த அன்பு வெளிப்படுவதை நாம் பார்க்க முடியும். மனிதர்களாகிய நாம், கடவுளின் திருநாமத்தை எப்போதும் போற்றி, புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான், திருப்பாடல்...

கிறிஸ்துவுக்காக சான்று பகரும் வாழ்வு

திருத்தூதர்பணி 28: 16 – 20, 30 – 31 கிளாடியசின் காலத்தில் பெரும்பாலான யூதர்கள் உரோமை நகருக்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்ட போதும், காலச்சூழலில் அவர்கள் உரோமை நகருக்குள் மீண்டும் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் தங்களுக்கான சலுகைகளைப்பெற்று, மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தனர். அவர்களில் பலரை, பவுல் அழைத்துப்பேசுகிறார். தான் நிரபராதி என்பதை அவர்களுக்கு விளக்க முற்படுகிறார். தன்னைப் பற்றிய செய்தி, நிச்சயம் எல்லா யூதர்களுக்கும் சென்றிருக்கும் என்பதில் அவருக்கு சந்தேகம் ஒன்றுமில்லை. ஆனாலும், தன்னுடைய தரப்பு நியாயத்தை அவர் எடுத்துக்கூறுகிறார். இங்கே ஒன்றை நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். தன்னை நியாயப்படுத்த வேண்டும் என்பது, பவுலடியாரின் முதன்மையான நோக்கம் கிடையாது. அப்படிப்பட்ட எண்ணம் அவருக்கு துளியளவும் இல்லை. கடவுளின் பணியைச் செய்கிறேன் என்பதில், அவர் உறுதியோடு இருந்தார். அதற்காக எவருடைய எதிர்ப்பையும் சம்பாதிப்பதற்கு தயாராகவே இருந்தார். அரசராக இருந்தாலும், தனக்கு தண்டனை கொடுக்கிற நிலையில் இருந்தாலும், அதனைப்பற்றி அவர் கவலைப்படவில்லை. ஆனால்,...