Category: இன்றைய சிந்தனை

எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ அவர் பேறுபெற்றோர்

திருப்பாடல் 32: 1 – 2, 5, 6, 7 கடவுளின் இரக்கத்தையும், மன்னிப்பையும் முழுமையாகப் பெற்றவர் தாவீது அரசர். உரியாவின் மனைவி பத்சேபாவுக்கு எதிராக பாவம் செய்தபோது, தாவீது கடவுளால் தண்டிக்கப்பட்டார். அவரது குழந்தை இறந்துபோனது. ஆனால், தாவீது தான் செய்த மிகப்பெரிய தவறை உணர்ந்து, அழுது கடவுளிடம் மன்றாடினார். தனது தவறை அவர் ஒப்புக்கொண்டார். கடவுளிடம் அவர் மன்றாடினார். அவரது மனவருத்தம் மற்றும் மனமாற்றம் கடவுளின் மன்னிப்பை அவருக்கு வழங்கியது. கடவுளின் ஆசீரையும் பெற்றுக்கொண்டார். இந்த அனுபவம் தான் தாவீதை, இந்த திருப்பாடலை எழுதத்தூண்டியிருக்க வேண்டும். வழக்கமாக, நாம் தவறு செய்கிறபோது, மற்றவர்களின் மன்னிப்பைப் பெறலாம். ஆனால், தாவீது அரசர், ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்ளலாம் என்று சொல்கிறார். அதாவது, உண்மையான மனமாற்றம், கடவுளின் மன்னிப்பை மட்டுமல்ல, கடவுளின் அருளையும், ஆசீரையும் நிரம்பப்பெற்றுக்கொடுக்கும். இன்றைய நற்செய்தியிலும் கூட, திக்கிப்பேசுபவரை இயேசுவிடம் கொண்டுவருகின்றனர். நோய்க்கு காரணம், ஒருவர் செய்த பாவம் என்பது இஸ்ரயேல்...

தீட்டில் இறைநம்பிக்கை …… தூய்மையில் அவநம்பிக்கை

மாற்கு 7: 24 – 30 சுத்தமானவர்கள், தூய்மையானவர்கள் என்று தங்களையே கருதிக் கொண்ட யூதர்களிடம் இறைநம்பிக்கையே இல்லை. ஆனால் தீட்டு, அசுத்தமானவர்கள் எனப் புறக்கணிக்கப்பட்டவர்களிடம் இறைநம்பிக்கை ஒளிர்ந்தது. இதுவரையிலும் ஆண்டவர் இயேசு எத்தனையோ அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்திருக்கிறார். ஆனால் இன்றைய நற்செய்தியில் இயேவுக்கே ஓர் அற்புதம்,அதிசயம் அரங்கேறுகிறது. எத்தனையோ பேரின் கண்களைத் திறந்தவரின் கண்கள் இன்றைய நற்செய்தியில் வரும் பெண்ணின் மூலம் திறக்கப்பட்டது. இயேசு யூதர்களுக்கு மட்டுமல்லாது அவர் அனைவருக்கும் உரியவர் என்றும் அவர் தருகின்ற மீட்பு பிற சமயத்தினவருக்கும் இனத்தினவருக்கும் உண்டு என்ற அவரின் திட்டத்தை அவருக்கே உறுதியளிப்பதுபோல் இன்றைய கிரேக்க பெண்ணின் சொல்லும் செயலும் அமைந்துள்ளது. இறைவன் என்றுமே நலிந்தோரை நசுக்குவதில்லை. ஒதுக்கப்பட்டோரை உதறுவது இல்லை. (காண்க மத் 11: 19-21) புறவினப் பெண்ணின் நம்பிக்கை நிறைந்த மறுமொழி இயேசுவின் இதயத்தைத் தொட்டு இணங்க வைக்கிறது. லூக் 6:6 -இல் தன் சொந்த ஊரில் உள்ளவர்களின் அவநம்பிக்கையைக்...

உணவா? உள்ளமா?

புதன் மாற்கு 7:14-23 பாவம் தன்னகத்தே தீமையானது. இது வெளியிலிருந்து வருவதல்ல. மாறாக நம்முள்ளிருந்து வருகின்றது. ஆனால் இறைவன் படைத்த உணவும், பிறவும் தன்னிலே தூயது. அதனைத் தீயதாக கருதுவது நம் எண்ணத்திலும,; பயன்படுத்துகின்ற விதத்திலும் தான் இருக்கின்றது. இஸ்லாமியர்கள் பன்றியைத் தீட்டு எனக் கருதி உண்ணமாட்டார்கள். இந்துக்கள் மாட்டுக்கறியை உண்ணமாட்டார்கள். உண்ணுகின்ற இந்துக்களை கீழ்சாதியினர்; என ஒதுக்கி வைத்து தீண்டத்தகாதவர்கள் என கருதுகிறார்கள். ஆனால் கிருத்தவர்கள் நாம் மட்டும் இந்த வானிற்கு கீழ் உள்ள அனைத்தையும் உண்டு களிக்கிறோம். காரணம் இயேசுவின் இவ்வாக்கு உணவுப் பொருட்களில் தீட்டு என்பதே இல்லை என்பதை கொஞ்சம் கொஞ்சம் தொடக்கக்காலத் திருஅவைத் தொட்டே நாம் அனைத்தையும் உண்ண ஆரம்பித்து விட்டோம். காண்க 1திமோ 4: 4,5. “கடவுள் படைத்தது அனைத்தும் நல்லதே, நன்றி உணர்வுடன் கொண்டால் எதையும் விலக்க வேண்டியதில்லை, கடவுளின் வார்த்தையும் நமது மன்றாட்டும் அதைத் தூயதாகும்” தூய பேதுருவும் இதை ஒத்தக்...

ஆண்டவரே! உமது பெயர் உலகெங்கும் மேன்மையாய் விளங்குகின்றது

திருப்பாடல் 8: 3 – 4, 5 – 6, 7 – 8 கடவுளின் மாட்சிமையையும், சிறப்பையும், மாண்பையும் எடுத்துக்கூறக்கூடிய பாடல் தான் இந்த திருப்பாடல். கடவுளின் பெயர் இந்த உலகம் முழுமையும் மேன்மையாய் விளங்குகின்றது. எப்படி? கடவுளின் படைப்பு, அவரின் மேன்மையை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. இந்த உலகத்தில் இருக்கிற படைப்பு ஒவ்வொன்றுமே ஆச்சரியமூட்டக்கூடியது. அவ்வளவு மகிமையான படைப்புக்களை கடவுள் படைத்திருக்கிறார். எங்கு நோக்கினும் கடவுளின் படைப்பு தான், நம் கண்களுக்கு வியப்பாய் இருக்கிறது. அதைத்தான் திருப்பாடல் ஆசிரியர் நமக்கு வியப்பாக எடுத்துக்கூறுகிறார். கடவுளின் படைப்பு மட்டுமல்ல, இந்த படைப்பு முழுவதையும் மீட்டெடுக்க நம் ஆண்டவர் வகுத்த மீட்புத்திட்டமும் வியப்புக்குரியவை. அந்த மீட்பை எடுத்துரைப்பதற்காக, கடவுளின் மக்களை கொஞ்சம், கொஞ்சமாக பக்குவப்படுத்துகிற இயேசுவின் உறுதியான முயற்சி இன்றைய நற்செய்தியில் வெளிப்படுகிறது. கடவுளின் அன்பும், இரக்கமும் தான், மக்களை மீட்புப்பாதையில் கொண்டு செல்ல உதவும் என்பதையும், வெறும் சட்டங்களை வைத்து, நாம்...

ஆண்டவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக

திருப்பாடல் 104: 1 – 2, 5 – 6, 10 – 12, 24, 35 ஆண்டவர் எதற்காக தன்னுடைய செயல்களைக் குறித்து மகிழ்ச்சியடைய வேண்டும்? எத்தகைய செயல்களைக் குறித்து மகிழ்ச்சியடைய வேண்டும். ஆண்டவர் இந்த உலகத்தைப் படைத்தவர். இந்த உலகத்தைப் படைத்து பராமரித்தவர். தன்னுடைய சாயலில் மனிதர்களைப் படைத்து, அவர்கள் பலுகிப்பெருகி இந்த உலகத்தை நிரப்ப வேண்டும் என்று பணித்தவர். இந்த உலகம் உண்மையில் அதிசயமானது. தொடக்கநூலின் முதல் அதிகாரத்தில் கடவுளின் படைப்பை நாம் வாசிக்கிறோம். கடவுளின் படைப்பு அந்த அளவுக்கு மகிமை நிறைந்ததாக இருக்கிறது. அந்த செயல்களைக்கண்டு கடவுள் நிச்சயம் மகிழ்ச்சியடைந்திருப்பார் என்று திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார். கடவுளின் ஞானம் மகத்துவமானது. அதனை மனிதர்களாக இருக்கிற நம்மால் புரிந்துகொள்ள முடியாது. ஏனென்றால், கடவுள் அனைத்தையும் தன்னுடைய ஞானத்திலே படைத்திருக்கிறார். தீயவர்கள் இந்த உலகத்தில் இருக்கக்கூடாது என்று கடவுள் அவர்களை அழித்து ஒழிக்கவில்லை. மாறாக, அவர்கள் மனந்திருந்தி வாழ,...