Category: இன்றைய சிந்தனை

இன்று தேவையான உணவை எங்களுக்குத்தாரும்

இயேசு கற்றுக்கொடுத்த இந்த செபம், யூதர்களின் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கப்பட வேண்டும். உணவு என்பது வானக உணவைக்குறிப்பதாக நாம் அர்த்தம் கொள்ளலாம். ஏனெனில் லூக்கா 14: 15 ல் நாம் பார்க்கிறோம்: ”இறையாட்சி விருந்தில் பங்குபெறுவோர் பேறுபெற்றோர்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. இறையாட்சி பற்றி யூதர்களுக் விநோதமான ஒரு கருத்து இருந்தது. மெசியாவின் ஆட்சி வருகிறபோது, மெசியாவின் விருந்து நடைபெறும். அந்த விருந்தில் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற அனைவரும் கலந்து கொள்வர். அத்தகைய விருந்தில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பமாக, இது பார்க்கப்படுகிறது. கடவுள் நமது உடலை பேணி வளர்ப்பதிலும், பராமரிப்பதிலும் எந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறார் என்பதை இது நமக்கு தெளிவாக்குகிறது. ஏனென்றால், மக்கள் இயேசுவின் போதனையைக் கேட்க மணிக்கணக்காக தங்கியிருந்தபோது, அவர்களுக்கான உணவைப்பற்றி இயேசு கவலைப்படுவதை நாம் நற்செய்தியில் பார்க்கிறோம். உணவால் நாம் மடிந்து விடக்கூடாது என்பதற்காக, அங்கிருந்த மக்களுக்கு உணவு கொடுக்கிறார். மக்கள் ஆரோக்யமான வாழ்வு வாழ்வதற்கு, ஆரோக்யமான உணவும் தேவை...

எதிர்பார்ப்பு இல்லாத உதவி

இயேசு கைம்மாறு, வெகுமதி பற்றி பேசும்போது, இந்த உலகம் சார்ந்த பொருட்செல்வத்தைப்பற்றிப் பேசவில்லை. பழைய ஏற்பாட்டில், செல்வமும், வெகுமதியும் பெற்றவர்கள், நல்லவர்களாகக் கருதப்பட்டனர். அதிகமான குழந்தைச் செல்வத்தைப் பெற்றவர்கள், அறுவடை நிறைவாகப் பெற்றவர்கள் அனைவருமே, கடவுளின் ஆசீரைப் பெற்றவர்களாக மக்கள் நினைத்தனர். யோபு புத்தகத்திலும், இந்த கருத்துதான் மீண்டும், மீண்டும் வலிறுத்தப்படுகிறது. யோபு தான் தவறு செய்யவில்லை என்று தன்னுடைய நண்பர்களிடத்தில் சொன்னாலும், அவருடைய நண்பர்கள் அந்த கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால், நல்லவர்கள் என்றுமே கடவுளின் அருளைப்பெற்று வாழ்வர் என்பது அவருடைய நண்பர்களின் வாதம். இயேசு அப்படிப்பட்ட கருத்தை நிச்சயம் சொல்லியிருக்க மாட்டார். ஏனென்றால், ஏழைகளோடு, ஒடுக்கப்பட்டவர்களோடு, அடிமைப்படுத்தப்பட்டவர்களோடு நெருங்கிப்பழகியவர் இயேசு கிறிஸ்து. அப்படியானால், இயேசு சொன்ன செய்தியின் பொருள் என்ன? இயேசு கைம்மாறு என்று எதனைக் குறிப்பிடுகிறார்? மக்கள் எதையும், நாம் இப்போது கொடுத்தால், பிற்காலத்தில் கடவுள் நமக்குக் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்போடு கொடுத்தால், அவர்களுக்குரிய கைம்மாறு ஏற்கெனவே கிடைத்துவிட்டது...

கடவுள் நம் அனைவரின் தந்தை

யூத ராபிக்களிடையே, கடவுள் எகிப்தியர்களை செங்கடலில் மூழ்கடித்த நிகழ்வுகளைப் பற்றி ஒரு கதை ஒன்று சொல்வார்கள்: எகிப்தியர்கள் இஸ்ரயேல் மக்களைத் துரத்தி வருகிறார்கள். செங்கடலை கடந்து விட்ட, இஸ்ரயேல் மக்களை அவர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். கடல் நீர் பொங்கி எழுந்து அனைத்து எகிப்தியர்களும் மூழ்கி இறந்து போகிறார்கள். இதனைக்கண்ட வானதூதர்கள் மகிழ்ச்சியில் கடவுளைப் புகழ்ந்து பாடினார்கள். ஆனால், கடவுளோ மிகவும் சோகமாக, என்னுடைய படைப்புகள் அங்கே இறந்து கொண்டிருக்கிறது. நீங்களோ என்னை புகழ்ந்து கொண்டிருக்கிறீர்களே, என்று வேதனைப்பட்டாராம். இதுதான் கடவுளின் அன்பு. கடவுளின் அன்பை நாம் எதனோடும் ஒப்பிட்டு கூற முடியாது. அவரது அன்பு ஈடு இணையில்லாதது. இந்த கடவுளின் அன்பை நாம் நமது மனித இயல்பில் புரிந்து கொள்ளவே முடியாது. அதனை புரிந்து கொள்வதற்கான ஆற்றல், நமது அறிவுக்கு இல்லை என்பதுதான் உண்மை. கடவுள் இந்த உலகத்தை ஒட்டுமொத்தமாக பார்க்கிறார். இந்த உலகத்தில் வாழக்கூடிய அனைவரையும் தனது பிள்ளைகளாகப் பாவிக்கிறார்....

நிறைவைத்தேடி…

நிறைவு என்பதுதான் இந்த உலகத்தில் அனைவரும் தேடி அலைகின்ற ஒன்றாக இருக்கிறது. வாழ்க்கையில் நிறைவை பலவற்றில் நாம் தேடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், நிறைவு இல்லாமல் நமது தேடலை தொடர்ந்து கொண்டிருக்கிறோம். இன்றைக்கு பலர், நிறைவைத்தராதவற்றில் நமது நேரத்தை வீணடித்துக்கொண்டு நிறைவுக்காக அலைந்து கொண்டிருக்கிறோம். நிறைவு இதில் இல்லை என்று பலர் சொல்லியும், அதனைக் கேட்காமல் தொடர்ந்து அதிலே மூழ்கிக்கொண்டிருக்கிறோம். நாம் எதில் நிறைவைத்தேட வேண்டும் என்பதை நற்செய்தி நமக்குக் கற்றுத்தருகிறது. விண்ணகத்தந்தை நிறைவாக இருக்கிறார் என்று நற்செய்தி சொல்கிறது. அதற்கான காரணத்தையும் அது தருகிறது. விண்ணகத்தந்தை மற்றவர்களை மன்னிக்கிறார். அனைவரையும் அன்பு செய்கிறார். அனைவரையும் பராமரிக்கிறார். அனைவரையும் தனது பிளளைகளென சமமாகப் பாவிக்கிறார். எனவே தான், விண்ணகத்தந்தை நிறைவாக இருக்கிறார். நாமும் விண்ணகத்தந்தை நிறைவுள்ளவராக இருப்பது போல, நிறைவுள்ளவராக இருக்க வேண்டுமென்றால், மற்றவர்களை மன்னிக்க வேண்டும். அனைவரையும் அன்பு செய்ய வேண்டும். இந்த உலக செல்வத்திலும், பதவியிலும், அதிகாரத்திலும் நாம் பெற முடியாத...

தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு இறையாட்சியின் இயல்பைப் பற்றி நமக்கு எடுததுரைக்கின்றார். இறையாட்சி எப்படி வளர்கின்றது? மனித முயற்சிக்கு அங்கு இடமுண்டா? இயேசு கூறுகிறார்: “நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது. முதலில் தளிர், பின்பு கதிர், அதன்பின் கதிர் நிறையத் தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது”. ஆம், இறையாட்சி இத்தகைய விதைக்கு ஒப்பானது. இறைவனே விதைக்கிறார், இறையாட்சி தானாகவே வளர்கிறது, இறுதியில் இறைவனே இறையாட்சியை நிறைவுசெய்வார். அப்படியானால், நமது பங்கு என்ன? நமக்கு இறையாட்சிப் பணி என்று எதுவுமே இல்லையா? நமது பணிகளெல்லாம் வீணா? இல்லை, நமது பணிகள் அவசியம் தேவை. இருப்பினும், நமது சொந்த முயற்சியினால், உழைப்பினால் இறையாட்சி மலரப்போவதில்லை. இறைவனின் அருளே அதை நடைபெறச் செய்கிறது. “ஆண்டவரே வீட்டைக் கட்டவில்லையெனில், அதைக் கட்டுவோரின் உழைப்பு வீணாகும். ஆண்டவரே நகரைக் காக்கவில்லையெனில்,...