Category: இன்றைய சிந்தனை

தூய லூக்கா நற்செய்தியாளர் திருவிழா

மகிழ்ச்சியும் இரக்கமுமே நற்செய்தி லூக்கா 10:1-9 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் நற்செய்தியாளர் தூய லூக்கா திருவிழா திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். சிரியாவின் அந்தியோக்கு நகரில் பிறந்த லூக்கா, ஒரு மருத்துவர். ஓவியரும் கூட என்று வரலாறு கூறுகிறது. புறவினத்தாராகிய லூக்கா, அப்போஸ்தலர் பவுலுடன் இணைந்து உழைத்தார். “அன்புமிக்க மருத்துவர் லூக்கா” என்று பவுல் இவரைக் குறிப்பிடுகிறார். நான்கு நற்செய்தியாளர்களும் இயேசுவின் பணிவாழ்வை இறையரசுப் போதனையை மிகவும் சிறப்பான விதத்தில் வடித்துத் தந்துள்ளார்கள். அவற்றுள் தூய லூக்காவின் நற்செய்தியானது மகிழ்வின் நற்செய்தியாக இரக்கத்தின் நற்செய்தியாக விளங்குவதை பார்க்கின்றோம். தூய லூக்கா இயேசுவைக் கனிவுள்ளவராக இரக்கமுள்ளவராக எல்லோருக்கும் வாழ்வளிப்பவராகப் படம் பிடித்துக் காட்டுகிறார். கிரேக்க குலத்தைச் சார்ந்தவரான தூய லூக்கா சிரியாவில் உள்ள...

பேராசையை சுட்டு பொசுக்குங்கள்…

லூக்கா 12:13-21 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். வாழ்வில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் இருக்கும். ஆனால், அந்த ஆசைகள் பேராசையாக மாறும் போது தான் பிரச்னைகளும் சேர்ந்து வருகின்றன. அத்தகைய பேராசைகளை வேரறுக்க வேண்டும் என, நமக்கு உணர்த்தும் நாளே தித்திப்பான திங்கள்கிழமை. எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள் என்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். பேராசை பொல்லாதது அந்த பொல்லாததை எப்படி சுட்டு பொசுக்க வேண்டும் என்பதை நாம் இரண்டு வழிகளில் தெரிந்துக்கொள்ள வேண்டும். 1. சிறிய வழி பேராசை பெரும்பாலும் நிறைய பொருட்களை குவிக்க வேண்டும், நிறைய சொத்துக்களை குவிக்க வேண்டும். பணக்காரர்களாக மாற வேண்டும் என்பதில் உள்ளது. அப்படிப்பட்ட நம்முடைய எண்ணம் தவறானது...

கடவுளுக்கு அஞ்சுகின்ற வாழ்க்கை

“May He enlighten your innermost vision that you may know the great hope to which He has called you, the wealth of His glorious heritage to be distributed among the members of the Church, and the immeasurable scope of His power in us who believe.” –Ephesians 1:18-19 Are you full of hope? Are you wealthy? (see 2 Cor 8:9) Do you know you can be “clothed with power from on high”? (Lk 24:49) The key to knowing our hope, wealth, and power is knowing our responsibilities. If we know God has given us responsibilities, we begin seeking God’s revelation concerning...

நன்றாக பேசத் தெரியாதவரா நீங்கள்?

லூக்கா 12:8-12 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். மனிதர்களாகிய நாம் பிறந்ததும் அம்மா என்ற அழகான வார்த்தையை பேசுகிறோம். அந்த வார்த்தையைப் பேசிய பிறகு வளர வளர வாயிலிருந்து வரும் வார்த்தைகளை கேட்கவே சகிக்க முடியவில்லை. எப்படி பேச வேண்டும் என்பது தெரியவில்லை. பேசத் தெரியாமல் பிறரை காயப்படுத்தும், களங்கப்படுத்தும் நபர்களுக்கான நல்லாலோசனையாக வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். என்ன நல்லாலோசனை? அது தூய ஆவியார் தரும் நல்லாலோசனை. தூய ஆவியார் துணையை தினமும் நாடும் போடு அவர் கற்றுக்கொடுக்கிறார். அவர் வழிநடத்துகிறார். எப்படி பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்பதெல்லாம் நமக்கு இயல்பாகவே தெரிகிறது. எப்படி தூய ஆவியாரை நாட வேண்டும். இரண்டு வழிகளில்...

இருளில் பேசியவை ஒளியில் கேட்கும்…

October 2022 | Bible Quiz – 94 ( II Thessalonians ) – [ in English ] லூக்கா 12:1-7 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நாம் அதிகமாக ரகசியங்களை, பேசக்கூடாதவைகளை பேசுவதற்கு நாம் தேடுகின்ற இடம் இருள். அந்த இடம் பாதுகாப்பானது அல்ல, அனைத்தும் வெளியே தெரிந்துவிடும். இருளில் பேசியது அனைத்தும் ஒளியில் கேட்கும். ஆகவே கவனமாய் இருங்கள் என்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். நாம் வாழும் இந்த நவீன உலகத்தில் ரகசிங்களை பேசுவதற்கு, இச்சைக்குரிய காரியங்களை பேசுவதற்கு, செய்வதற்கு பலவிதமான வாய்ப்புகள் உள்ளது. மறைவாக பேசுவற்கு எவ்வளவு வாய்ப்புகள் உள்ளதோ அதே அளவுக்கு அது தெரிவதற்கும் உள்ளது. இதற்கு என்ன செய்யலாம்? இரண்டு வழிகள் எப்போதும்...