Category: இன்றைய சிந்தனை

”ஆண்டவரின் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்”

திருப்பாடல் 119: 1 – 2, 4 – 5, 7 – 8 ”ஆண்டவரின் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்” இந்த திருப்பாடல் ஒரு சில தனித்தன்மைகளைப் பெற்ற திருப்பாடல். இருபத்திரெண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த இருபத்திரெண்டு என்பது எபிரேய மொழியில் இருக்கக்கூடிய எழுத்துக்களின் எண்ணிக்கை. ஒவ்வொரு பிரிவும், எபிரேய எழுத்து வரிசையில் தொடங்கக்கூடியதாக இருக்கிறது. (தமிழில் ஆத்திச்சூடி பாடல் அமைந்திருப்பது போல…. அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல்…) திருச்சட்டத்தின் புகழைப் பரப்பும் பாடல் என்றும் சொல்லலாம். இளைய தலைமுறையினருக்கான அறத்தையும், வாழ்க்கைநெறிகளையும் கற்றுத்தரும் பாடல். அவர்களது வாழ்க்கையின் மீதுள்ள அக்கறையினை வெளிப்படுத்தும் பாடல். திருச்சட்டம் என்பது கடவுள் வகுத்துக்கொடுத்தச் சட்டம். அந்த சட்டத்தை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று ஆண்டவர் பணிக்கிறார். கடவுளுடைய சட்டம் நாம் தவறான பாதைக்குச் செல்வதிலிருந்து பாதுகாப்பு தருகிறது. அவரைப் பற்றிப்பிடித்து வாழ, அவரது வழியில் நடக்க நமக்கு பேருதவியாக...

எம் குற்றங்களை மனதில் கொண்டிருந்தால் யார் தான் நிலைத்து நிற்கமுடியும்?

திருப்பாடல் 130: 1 – 2, 3 – 4, 5 – 6, 7 – 8 ”எம் குற்றங்களை மனதில் கொண்டிருந்தால் யார் தான் நிலைத்து நிற்கமுடியும்?” இந்த திருப்பாடல் ஓர் ஆன்மாவின் திருப்பாடலாக அமைகிறது. இறந்தவர்களின் உடல்களை அவர்களது இல்லத்திலிருந்து குருவானவர் எடுத்து வருவதற்கு முன்னதாகச் சொல்லப்படும் செப வழிபாட்டில் இடம்பெறும் பதிலுரைப்பாடலாகவும் இது அமைந்துள்ளது. வெறும் உலக காரியங்கள் சார்ந்தோ, தனிப்பட்ட, பொதுக்காரியங்கள் சார்ந்தோ அல்ல. உள்ளத்தின் ஆழத்திலிருந்து பேசும் ஆன்மாவின் பாடல் என்று சொல்லலாம். மனவருத்தத்தை வெளிப்படுத்தும் ஏழு திருப்பாடல்களுள் ஒன்றாக இது கருதப்படுகிறது. தவறான வழியில் சென்றவர்கள் மீண்டும் திருச்சபைக்குள் சேர்க்கப்படுகிறபோது, பாடப்படும் பாடலாகவும் இது அமைந்துள்ளது. தவறான வாழ்க்கை வாழ்ந்து கடவுளை நாடிவருகிறவர்களும், இந்த பாடலை பாடிச் செபிப்பது பொருத்தமானதாக இருக்கும். கடவுள் முன்னிலையில் தன்னுடைய உண்மையான நிலையை, தன்னுடைய பலவீனத்தை, தான் செய்த குற்றங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு மனிதனின் பாடல்...

ஆண்டவரே என் ஆயர். எனக்கேதும் குறையில்லை

திருப்பாடல் 23: 1 – 3, 4, 5 – 6 ”ஆண்டவரே என் ஆயர். எனக்கேதும் குறையில்லை” தொடக்கநூல் 49: 24 ல், மோசே கடவுளை ”ஆயர்” என்று முதன்முதலாவதாகச் சொல்கிறார். இங்கு தான், இஸ்ரயேலின் ஆண்டவரை ஆயர் என்று சொல்வதற்கு தொடங்கப்படுகிறது. ஒரு ஆயரின் பணியை தாவீது அரசர் முழுமையாக அறிந்தவர். ஏனென்றால், அவர் ஆடு மேய்க்கக்கூடிய பணியைத்தான் செய்து வந்தார். இறைவாக்கினர் சாமுவேல் ஈசாயின் புதல்வர்களை அணிவகுத்து நிற்கச்செய்து, கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவனை அடையாளம் காண முற்பட்டபோது, ஆடு மேய்த்துக்கொண்டிருந்த தாவீதை இறைவன் அவருக்கு அடையாளம் காட்டினார். பிற்காலத்தில் அரசராக அவர் அருட்பொழிவு பெற்றாலும், தன்னை ஆயராக மற்றவர்கள் அடையாளம் காண்பதில் பெருமை கொண்டார். ஏனென்றால், மக்களை ஆள்வதும் ஓர் ஆயர் போன்ற பணி தான். இந்த திருப்பாடலில், தாவீது கடவுளை தன் ஆயராகப் பாடுகிறார். அதாவது, கடவுளின் பராமரிப்பில் தான் இருப்பதாக வெளிப்படுத்துகிறார். யாரும் மற்றவர்க்கு கீழே...

பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது

திருப்பாடல் 51: 1 – 2, 10 – 11, 16 – 17. இஸ்ரயேல் மக்கள் வாழ்வில், கடவுளுக்கு பலி செலுத்துவது என்பது மிக மிக முக்கியமான ஒன்று. அதற்கு அதிக அளவில் முக்கியத்துவத்தைக் கொடுத்தார்கள். லேவியர் புத்தககத்தில் நாம் வாசித்துப் பார்த்தால் பலி செலுத்துவது பற்றிய விளக்கங்களை நாம் தெளிவாகப் பார்க்கலாம். எதையெல்லாம் பலி செலுத்த வேண்டும்? எப்படி பலி செலுத்த வேண்டும்? என்று பல ஒழுங்குமுறைகளை இஸ்ரயேல் மக்கள், லேவியர் நூலைப் பின்பற்றி கடைப்பிடித்தார்கள். ஆக, பலி செலுத்துவது இஸ்ரயேல் மக்களின் வழிபாட்டில் முக்கியமான ஒன்று என்பது தான், இங்கு நாம் அறிய வேண்டிய ஒன்றாக இருக்கிறது. எதற்காக பலி செலுத்தப்படுகிறது? கடவுள் நம்மிடமிருந்து பலி வேண்டுவதில்லை. அவருக்கு அது அவசியமுமில்லை. நாம் புதிதாக பலி என்று ஒன்றை செலுத்திவிட முடியாது. ஏனென்றால், நாம் செலுத்தக்கூடிய காணிக்கையும் அவருடைய அருளினால் தான் பெற்றிருக்கிறோம். பின் ஏன் பலி...

கொடுப்பவர்களாக வாழ்வோம்

தவக்காலம் என்பது நம்மைப் பண்படுத்துகின்ற காலம். நம்மைப் பக்குவப்படுத்துகின்ற காலம். நமது வாழ்வை செதுக்குகின்ற காலம். தவக்காலம் நமக்குக் கற்றுத்தரும் ஒரு முக்கியமான பாடம் ”கொடுத்தல்”. கொடுத்தல் நமது வாழ்வின் அங்கமாக இருக்க வேண்டும். கொடுத்தல் இயல்பானதாக இருக்க வேண்டும். எதையும் எதிர்பார்ப்பதாக இருக்கக்கூடாது. நாம் கொடுக்கிறபோது, அது நமக்குள்ளாக வலியை ஏற்படுத்த வேண்டும். வலியோடு கொடுப்பதுதான் உண்மையான கொடுத்தல். இன்றைய நற்செய்தியில் கொடுப்பவர்களுக்கு கடவுள் எப்படி கொடுக்கிறவராக இருக்கிறார் என்பது தெளிவாகச்சொல்லப்படுகிறது. மற்றவர்களுக்கு கொடுத்தவர்கள், தாங்கள் கொடுக்கிறோம் என்கிற எண்ணத்தோடு கொடுக்கவில்லை. தாங்கள் கொடுத்தால் தங்களுக்கு பிரதிபலன் கிடைக்கும் என்ற எண்ணமும் அவர்களுக்கு இல்லை. கொடுத்தல் அவர்களுக்கு இயல்பாக இருந்தது. ஆனால், இடதுபுறம் உள்ளவர்கள் ஏதாவது கிடைக்கும் என்று தெரிந்திருந்தால், கொடுத்திருப்போம் என்று சொன்னவர்கள். அது உண்மையான கொடுத்தல் அல்ல. அவர்களுக்குரிய கைம்மாறை அவர்கள் நிச்சயமாகப் பெற்றுக்கொண்டார்கள். கடவுள் கொடுத்த இந்த வாழ்வில் மற்றவர்களுக்கு கொடுத்து வாழ்வதே, வாழ்விற்கு நாம்...