Category: இன்றைய சிந்தனை

கடவுள் நம் அனைவரின் தந்தை

யூத ராபிக்களிடையே, கடவுள் எகிப்தியர்களை செங்கடலில் மூழ்கடித்த நிகழ்வுகளைப் பற்றி ஒரு கதை ஒன்று சொல்வார்கள்: எகிப்தியர்கள் இஸ்ரயேல் மக்களைத் துரத்தி வருகிறார்கள். செங்கடலை கடந்து விட்ட, இஸ்ரயேல் மக்களை அவர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். கடல் நீர் பொங்கி எழுந்து அனைத்து எகிப்தியர்களும் மூழ்கி இறந்து போகிறார்கள். இதனைக்கண்ட வானதூதர்கள் மகிழ்ச்சியில் கடவுளைப் புகழ்ந்து பாடினார்கள். ஆனால், கடவுளோ மிகவும் சோகமாக, என்னுடைய படைப்புகள் அங்கே இறந்து கொண்டிருக்கிறது. நீங்களோ என்னை புகழ்ந்து கொண்டிருக்கிறீர்களே, என்று வேதனைப்பட்டாராம். இதுதான் கடவுளின் அன்பு. கடவுளின் அன்பை நாம் எதனோடும் ஒப்பிட்டு கூற முடியாது. அவரது அன்பு ஈடு இணையில்லாதது. இந்த கடவுளின் அன்பை நாம் நமது மனித இயல்பில் புரிந்து கொள்ளவே முடியாது. அதனை புரிந்து கொள்வதற்கான ஆற்றல், நமது அறிவுக்கு இல்லை என்பதுதான் உண்மை. கடவுள் இந்த உலகத்தை ஒட்டுமொத்தமாக பார்க்கிறார். இந்த உலகத்தில் வாழக்கூடிய அனைவரையும் தனது பிள்ளைகளாகப் பாவிக்கிறார்....

எம் குற்றங்களை மனதில் கொண்டிருந்தால் யார் தான் நிலைத்து நிற்கமுடியும்?

திருப்பாடல் 130: 1 – 2, 3 – 4, 5 – 6, 7 – 8 இந்த திருப்பாடல் ஓர் ஆன்மாவின் திருப்பாடலாக அமைகிறது. இறந்தவர்களின் உடல்களை அவர்களது இல்லத்திலிருந்து குருவானவர் எடுத்து வருவதற்கு முன்னதாகச் சொல்லப்படும் செப வழிபாட்டில் இடம்பெறும் பதிலுரைப்பாடலாகவும் இது அமைந்துள்ளது. வெறும் உலக காரியங்கள் சார்ந்தோ, தனிப்பட்ட, பொதுக்காரியங்கள் சார்ந்தோ அல்ல. உள்ளத்தின் ஆழத்திலிருந்து பேசும் ஆன்மாவின் பாடல் என்று சொல்லலாம். மனவருத்தத்தை வெளிப்படுத்தும் ஏழு திருப்பாடல்களுள் ஒன்றாக இது கருதப்படுகிறது. தவறான வழியில் சென்றவர்கள் மீண்டும் திருச்சபைக்குள் சேர்க்கப்படுகிறபோது, பாடப்படும் பாடலாகவும் இது அமைந்துள்ளது. தவறான வாழ்க்கை வாழ்ந்து கடவுளை நாடிவருகிறவர்களும், இந்த பாடலை பாடிச் செபிப்பது பொருத்தமானதாக இருக்கும். கடவுள் முன்னிலையில் தன்னுடைய உண்மையான நிலையை, தன்னுடைய பலவீனத்தை, தான் செய்த குற்றங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு மனிதனின் பாடல் தான் இந்த வரிகள். ஒருவன் எவ்வளவு தான், தன்னை நல்லவனாகக்...

ஆண்டவரே! நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்

கடவுள் நம்மோடு எப்போதும் இருக்கிறார் என்று நம்புகிறோம். அப்படிப்பட்ட நம்பிக்கைக்கு மத்தியில் திருப்பாடல் ஆசிரியரின் வார்த்தைகள் நமக்கு ஒரு சில கேள்விகளை எழுப்புகிறது. நாம் மன்றாடுகிற நாளில் மட்டும் தான், கடவுள் நமக்கு உதவி செய்வாரா? நம்மை வழிநடத்துவாரா? நாம் மன்றாடவில்லை என்றால், அவர் நமக்கு துணைநிற்க மாட்டாரா? என்ற கேள்விகள் நம் உள்ளத்தை அரிக்கிறது. இதனை எப்படி புரிந்து கொள்வது? கடவுள் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தார் என்கிற வரிகள், கடவுள் நமக்கு வழங்கியிருக்கிற சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதாக அமைகிறது. கடவுள் இந்த உலகத்தைப் படைத்து, நமக்கு வாழ்வையும் கொடுத்திருக்கிறார். எல்லாவற்றையும் கொடுத்த கடவுள், அவரே நம்மை இயக்கினால், நாம் பெற்றுக்கொண்ட வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். எனவே, அவர் நமக்கு சுதந்திரத்தை வழங்கியிருக்கிறார். நன்மை எது? தீமை எது? என்று கற்றுக்கொடுத்திருக்கிறார். தொடக்கநூலில் நமது முதல் பெற்றோரிடம், இந்த உலகத்தை ஒப்படைத்தபோது, கடவுள் இதைத்தான் சொல்கிறார். ”தோட்டத்தில் இருக்கும் எந்த...

பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது

திருப்பாடல் 51: 1 – 2, 10 – 11, 16 – 17 இஸ்ரயேல் மக்கள் வாழ்வில், கடவுளுக்கு பலி செலுத்துவது என்பது மிக மிக முக்கியமான ஒன்று. அதற்கு அதிக அளவில் முக்கியத்துவத்தைக் கொடுத்தார்கள். லேவியர் புத்தககத்தில் நாம் வாசித்துப் பார்த்தால் பலி செலுத்துவது பற்றிய விளக்கங்களை நாம் தெளிவாகப் பார்க்கலாம். எதையெல்லாம் பலி செலுத்த வேண்டும்? எப்படி பலி செலுத்த வேண்டும்? என்று பல ஒழுங்குமுறைகளை இஸ்ரயேல் மக்கள், லேவியர் நூலைப் பின்பற்றி கடைப்பிடித்தார்கள். ஆக, பலி செலுத்துவது இஸ்ரயேல் மக்களின் வழிபாட்டில் முக்கியமான ஒன்று என்பது தான், இங்கு நாம் அறிய வேண்டிய ஒன்றாக இருக்கிறது. எதற்காக பலி செலுத்தப்படுகிறது? கடவுள் நம்மிடமிருந்து பலி வேண்டுவதில்லை. அவருக்கு அது அவசியமுமில்லை. நாம் புதிதாக பலி என்று ஒன்றை செலுத்திவிட முடியாது. ஏனென்றால், நாம் செலுத்தக்கூடிய காணிக்கையும் அவருடைய அருளினால் தான் பெற்றிருக்கிறோம். பின் ஏன் பலி...

நீதிமான்களை இறைவன் அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுவிக்கின்றார்

திருப்பாடல் 34: 3 – 4, 5 – 6, 15 – 16, 17 – 18 நீதிமான்களை இறைவன் அனைத்துத் துன்பங்களிலுமிருந்து விடுவிக்கின்றார் என்று ஆசிரியம் பாடுகிறார். நீதிமான் யார்? என்ற அடிப்படை கேள்வி நம் நடுவில் எழுகிறது. எசேக்கியேல் 18: 9 இதற்கான விளக்கத்தைத் தருகிறது, ”என் நியமங்களையும், நீதி நெறிகளையும் கடைப்பிடித்து, உண்மையுள்ளவனாக நடந்துகொண்டால், அவன் நீதிமான் ஆவான்”. கடவுளுடைய நியமங்களையும், கடவுள் வகுத்து தந்திருக்கிற நீதி நெறிகளையும் கடைப்பிடிக்கிறவன் தான் நீதிமான். நாம் கடவுள் நமக்கு வகுத்து தந்திருக்கிற நெறிகளுக்கு ஏற்ப நமது வாழ்க்கையை அமைத்துக்கொண்டால், நாம் நீதிமான்களாக வாழ ஆரம்பிக்கிறோம். நீதிமான்களுக்கு கடவுள் தரும் சிறப்பு என்ன? அனைத்துத் துன்பங்களிலுமிருந்து அவர்களை விடுவிக்கின்றார். கடவுள் துன்பங்களே கிடையாது என்று சொல்லவில்லை. மாறாக, துன்பங்கள் வருகிறபோது, அவர்களுக்கு விடுதலை தருவேன் என்கிறார். அப்படியென்றால், நீதிமான்களுக்கு துன்பங்கள் வருமா? நிச்சயம். நாம் கடவுள் வகுத்திருக்கிற நியமங்களின்படி...