Category: இன்றைய சிந்தனை

ஆண்டவர் தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்

திருப்பாடல் 96: 1 – 2a, 2b – 3, 10 இறைவன் இஸ்ரயேல் மக்களை அற்புதமாக வழிநடத்தியிருக்கிறார். இறைவனின் வழிகாட்டுதலை, அற்புதமான முறையில், அதிசயமான முறையில் அவர்களை வழிநடத்தியதை, இஸ்ரயேல் மக்கள் மட்டும் தான் அறிவார்கள். இன்றைய திருப்பாடல், இறைவன் இஸ்ரயேல் மக்களுக்கு செய்திருக்கிற சிறப்பான செயலை அறிவிப்பதாக இருக்கிறது. இஸ்ரயேல் மக்களுக்கு பலவிதமான செயல்களைச் செய்திருந்தாலும், இந்த திருப்பாடல் குறிப்பிட்ட நிகழ்ச்சியை மையமாக வைத்து எழுதப்பட்ட பாடலாக விளங்குகிறது. 1குறிப்பேடு புத்தகத்தில்ன 13 வது அதிகாரத்திலிருந்து நாம் வாசிக்கிறபோது, இத்தியரான ஓபேது, ஏதோம் இல்லத்தில் கடவுளின் பேழை வைக்கப்பட்டிருந்ததை நாம் வாசிக்கலாம். அந்த பேழை அங்கே இருந்தவரை, கடவுள் அவரது குடும்பத்தை அற்புதமாக ஆசீர்வதித்தார் என்று விவிலியம் சொல்கிறது. அந்த பேழையை மீண்டுமாக கடவுளின் இல்லத்திற்கு கொண்டு வருகிறபோது, இந்த பாடல் பாடப்பட்டதாக நாம் சொல்லலாம். இதில் தான், கடவுள் எப்படியெல்லாம், படைபலம் பொருந்திய பெலிஸ்தியர்களையும், மற்ற நாட்டினரையும்...

கிறிஸ்தவ ஒன்றிப்பு வாழ்க்கை

திருத்தூதர் பணி 15: 1 – 6 மோசேயின் சட்டப்படி, ஒவ்வொரு யூத ஆண்மகனுக்கும் விருத்தசேதனம் செய்ய வேண்டும். யூதர்கள் அனைவருமே விருத்தசேதனம் செய்திருந்தார்கள். அவர்கள் கடவுளுடனான உடன்படிக்கையின் அடையாளமாக விருத்தசேதனத்தை செய்திருந்தார்கள். அது அவர்களுக்கு முக்கியமான அடையாளம். மீட்பு பெறுவதற்கான அடையாளம். எனவே, யூத மறையின் தொடர்ச்சியாக கருதப்படும், கிறிஸ்தவத்தைத் தழுவுகிறவர்கள் கண்டிப்பாக மீட்பைப் பெற விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும் என்று, சில யூதர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இது தொடக்க கால கிறிஸ்தவர்கள் நடுவில் எழுந்த முக்கியமான பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. நல்ல எண்ணத்தோடு, நன்மைத்தனத்தோடு வாழ வேண்டும் என்று நினைத்து வாழ விரும்புகிறவர்கள் சேர்ந்து வருகிறபோது, பிரச்சனைகளே இருக்காது என்று சொல்ல முடியாது. கருத்து வேறுபாடுகளும், வாக்குவாதங்களும் நாம் உண்மையை உணர்ந்து கொள்ள உதவிகரமாக இருக்கிறது என்பதே உண்மை. தொடக்க கால திருச்சபையில், அனைவரும் ஒரே எண்ணத்தோடு, நல்ல எண்ணத்தோடு, கிறிஸ்தவ மதிப்பீடுகளின்படி வாழ்வதற்கு எல்லாவிதத்திலும் முயற்சி எடுத்துக்...

பவுலடியாரின் நம்பிக்கை வாழ்வு

திருத்தூதர் பணி 14: 19 – 28 தொடங்கியிருக்கிற பணியில், உறுதி கொண்ட கொள்கையில் பிடிப்போடு இருக்க வேண்டும் என்கிற வார்த்தைகளுக்கு முன்னோடியாக திகழக்கூடியவராக, பவுலடியார் இருப்பதை, இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. கிறிஸ்துவைப் பற்றி பல இடங்களுக்குச் சென்று அறிவித்து வந்த, பவுலடியாரின் போதனைகளுக்கு மக்கள் நடுவில் ஆதரவும் இருந்தது. எதிர்ப்பும் இருந்தது. எதிர்ப்பு என்பது சாதாரணமானதாக இல்லை. அவரை கொலை செய்ய செல்லும் அளவுக்கு இருந்தது. இன்றைய வாசகம் அப்படிப்பட்ட ஒரு நிகழ்வைத்தான் நமக்கு படம்பிடித்துக் காட்டுகிறது. அந்தியோக்கியாவிலிருந்தும், இக்கோனியாவிலிருந்தும் யூதர்கள் வந்து மக்களைத் தூண்டிவிட்டு, பவுல் மேல் கல் எறிந்தார்கள். அவர் இறந்துவிட்டார் என்றும் அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அவர்கள் நினைத்தது போல பவுல் இறக்கவில்லை. இந்த நிகழ்ச்சி நம்மில் ஒருவருக்கு நடந்திருந்தால், நம்முடைய அடுத்த சிந்தனை என்னவாக இருக்கும்? இனிமேல் இந்த பணி எதற்கு என்று, சோர்ந்துவிடுவோம் அல்லது சற்று உடல் தேறுகிறவரையில் ஓய்வு...

மாட்சியை உம் பெயருக்கே உரித்தாக்கும்

திருப்பாடல் 115: 1 – 2, 3 – 4, 15 – 16 இந்த உலகத்தில் இருக்கிற எல்லாருமே ஏதாவது ஒரு வகையில் சாதிக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறோம். கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். நமது பெயர் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும், நமது பெயர் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் நமது நோக்கமாக இருக்கிறது. இந்த உலகத்தில் மன்னராட்சி முறை வழக்கில் இருந்தபோது, அரசர்கள் நாடுகளை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். அது எதற்காக? தங்கள் வலிமை நிலைநாட்டப்பட வேண்டும். தங்களது பெயர் சரித்திரத்தில் பொறிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான். இவ்வளவுக்கு நமது பெயரை நிலைநாட்ட முயற்சி செய்கிற நாம் ஒன்றை மறந்து விடுகிறோம். அதுதான் நமக்கு இந்த வாழ்வை வழங்கிய கடவுளின் திருப்பெயர். கடவுள் தான் நமக்கு எல்லாமே. கடவுள் இல்லையென்றால் இந்த வாழ்க்கை இல்லை, சாதனை இல்லை என்கிற உண்மை, நம்மில் பலருக்கு புரிவதும் இல்லை. புரிந்தாலும் அதனை வாழ்வாக்குவது கடினமாக இருக்கிறது....

இயேசுவின் அன்பு

அன்பு என்கிற வார்த்தைக்கான விளக்கத்தை இன்றைய வாசகம் நமக்குத்தருகிறது. நான் ஒருவரை அன்பு செய்கிறேன் என்பதை, ஒரு மனிதன் பலவிதமான பண்புகள் மூலமாக வெளிப்படுத்துகிறான். மொத்த பண்புகளின் ஒட்டுமொத்த தொகுப்பே அன்பு என்றால், அது மிகையல்ல. இத்தகைய அன்பின் பலவிதமான பரிமாணங்களை இன்றைய நாளில் நாம் சிந்திப்போம். பொதுநலம், புரிதல், தியாகம் மற்றும் மன்னிப்பு இணைந்த ஒரு கலவை தான் அன்பு. இன்னும் இதற்குள் ஏராளமான பண்புகளை நாம் உள்ளடக்க முடியும். அன்பை வெளிப்படுத்தக்கூடிய காரணிகளாக இவை விளங்குகிறது. இயேசு தன்னுடைய சீடர்களை அன்பு செய்கிறேன் என்பதை, இதன் மூலமாகத்தான் வெளிப்படுத்துகிறார். இயேசுவின் வாழ்வில் பொதுநலம் மிகுந்திருந்தது. தன்னுடைய சீடர்கள் தவறு செய்தாலும், அதனை மிகைப்படுத்தாமல் புரிந்து கொள்கிறார். அவர்களை அவர் தீர்ப்பிடவில்லை. அவர்களுக்காக, மக்களுக்காக தன்னையே தியாகம் செய்கிறார். சீடர்கள் தவறு செய்தாலும் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்கிறார். இவ்வாறு இயேசு சீடர்கள் மட்டிலான தனது அன்பை வெளிப்படுத்துகிறார். அன்பு என்பது...