Category: இன்றைய சிந்தனை

தந்தையை எங்களுக்குக் காட்டும், அதுவே போதும்

இன்று திருத்தூதர்களான புனித பிலிப்பு மற்றும் யாக்கோபு இருவரின் விழாக்களைக் கொண்டாடுகிறோம். அவர்களின் மாதிரியைப் பின்பற்றி நாமும் வாழ முயல்வோம்.   புனிதர்கள் பிலிப்பு, யாக்கோபு – திருத்தூதர்கள் 1 கொரி 15: 1-8 யோவா 14: 6-14 இன்றைய நற்செய்தி வாசகம் பிலிப்புவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பாடத்தை நமக்கு அடையாளப்படுத்துகிறது. “ என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை” என்று இயேசு சொன்னபோது, பிலிப்பு ஆர்வத்துடன் சொல்கிறார்: “ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும், அதுவே போதும்”. ஆம், அன்புக்குரியவர்களே, தந்தை இறைவன்மீது பிலிப்பு கொண்ட ஆர்வத்தையும், இறையனுபவத்தைத் தவிர்த்த மற்ற அனைத்தையும் தேவையற்றவை எனக் கருதும் மனநிலையையும் அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். “அனைத்திற்கும் மேலாக இறையாட்சியைத் தேடுங்கள், மற்ற அனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்” என்று மொழிந்த இயேசுவின் சொற்களை நினைவுபடுத்துகிறார் பிலிப்பு. “இறைவனே நமக்குப் போதும்” என்ற மனநிலையின் முதல் அடியை இன்று...

ஒட்டுமொத்த உலகத்தின் மீட்பு

யோவான் நற்செய்தியாளரின் வார்த்தை ஒவ்வொன்றுமே பொருள் உள்ள, அர்த்தம் தரக்கூடிய வார்த்தை. அந்த வகையில், நற்செய்திப் பகுதியில் பயன்படுத்தப்பட்டிருக்கிற 153 என்கிற எண்ணுக்கு ஏதோ ஓர் அர்த்தம் இருக்க வேண்டும் என்று, விவிலிய அறிஞர்கள் கருதுகிறார்கள். இதற்கு பலவிதமான விளக்கங்கள் தரப்பட்டாலும், விவிலியத்தின் தந்தை ஜெரோம் கொடுக்கிற விளக்கம் பெரும்பான்மையானவர்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. பாலஸ்தீனப்பகுதியில் வாழும் மக்கள் 153 வகையான மீன்கள் இருப்பதாக நம்பினர். இந்த எண், மீன்களின் வகையைக் குறிப்பதாக இருக்கலாம். எல்லா வகையிலிருந்தும் ஒரு மீன் என்ற அடிப்படையில் இது பொருள் கொடுக்கலாம். அதாவது, இந்த உலகத்தில் இருக்கிற அனைத்து வகையான மக்களும், இயேசுவில் ஒருநாள் ஒன்றுகூட்டப்படுவர். அதேபோல இவ்வளவு மீன்கள் கிடைத்தும் வலை கிழியாமல் இருந்தது என்றும் சொல்லப்படுகிறது. திருச்சபை எத்தனை எண்ணிக்கையில் மக்கள் அதனைத் தேடி வந்தாலும், அவர்களை ஏற்றுக்கொண்டு வாழ்வைத்தரக்கூடிய அளவுக்கு மிகப்பெரியது, வலிமையுடையது என்பதை, இது நமக்கு எடுத்துச் சொல்கிறது. மீட்பு என்பது...

நம்முடைய நற்செய்திப்பணி

திருத்தூதர் பணி 18: 23 – 28 அப்போல்லா என்ற பெயருடைய யூதர் ஒருவரைப் பற்றிய செய்தி இன்றைய முதல் வாசகத்தில் நமக்குத் தரப்படுகிறது. அவர் சொல்வன்மை மிக்கவர் என்றும், மறைநூல்களில் புலமை வாய்ந்தவர் என்றும், அவருக்கு அடைமொழிகள் தரப்படுகிறது. இவற்றிற்கும் மேலான ஒரு பண்பும் அவருக்குத் தரப்படுகிறது. அதுதான் அவருடைய பணிவாழ்க்கையில், மிகச்சிறந்த பண்பாக இருக்க முடியும் என்று நினைக்கிறேன். அவர் ஆர்வமிக்க உள்ளம் கொண்டிருந்தார். ”ஆர்வமிக்க உள்ளத்தோடு இயேசுவைப் பற்றிய செய்தியைப்பிழையற அறிவித்தும் கற்பித்தும் வந்தார். இறைவனுடைய பணியைச் செய்வதற்கு நமக்கு முதலாவதாக ஆர்வம் இருக்க வேண்டும். எந்த ஒரு செயலையும் இரண்டு விதத்தில் நாம் செய்ய முடியும். ஏனோதானோவென்று வெறும் கடமைக்காக செய்வது முதல் வகை. செய்வதில் நிறைவோடு, ஆர்வத்தோடு செய்வது இரண்டாவது வகை. அப்போல்லோ இரண்டாவது வகையான மனிதராக இருக்கிறார். அந்த ஆர்வம் பல உதவி செய்யக்கூடிய நண்பர்களையும், கேட்கிறவர்களை கிறிஸ்துவின்பால் ஈர்க்கக்கூடியதாகவும் இருக்கிறது. திருப்பாடல்...

கட்டளைகளைக் கடைபிடிக்க

(யோவான் 3 : 16-21) மொத்த இறையியலையும் இறையியலின் மையமான கிறித்துவியலையும் ஒரே வாக்கியத்திற்குள் அடக்கிவிட்ட இறைவார்த்தைதான் 3:16. இயேசு என்றால் யார்? இயேசு ஏன் நமக்காக இறக்க வேண்டும்? என்ற அனைத்துவிதமான கேள்விகளுக்கும் இந்த ஓரு வசனம் இரத்தினச் சுருக்க விளக்கமாக அமைகின்றது. ‘அன்பே கடவுள்’ என்பது இறைவனின் இலக்கணம். அவரது அன்பு சொல்லில் மட்டுமல்லாது செயலிலும் வெளிப்படுகிறது. உலகப் படைப்பிலும் அதன் பராமரிப்பிலும் கடவுளின் அன்பை நாம் காண முடிகிறது. அதே அன்பு இறையேசுவின் உருவத்தில் தங்கி நம்மோடு இன்று வரை அவரின் உடனிருப்புடன் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறது. கல்வாரி மலையில் இந்த அன்பு உச்சத்தை அடைகின்றது. ஆனால் இன்றைய நற்செய்தி இறையன்பையும் அதன் நிராகரிப்பையும் நம்முன் வைக்கின்றது. “ நாம் கடவுளுக்கு அன்பு செய்வதில் அன்று, அவரே நம்மை அன்பு செய்து நமது பாவங்களுக்குப் பரிகாரமாக தம் மகனையே அனுப்பியதால் தான் அன்பின் தன்மை விளங்குகின்றது” (உரோ...

உயர்த்தப்பட்டவரை உற்று நோக்கி

(யோவான் 3 : 7-15) பழைய ஏற்பாட்டினை நிறைவு செய்பவர் நம் ஆண்டவர் இயேசு. மறைவாக இருந்த அனைத்திற்கும் நல்ல விளக்கத்தைக் கொடுத்ததோடு, தன்னிலே பலவற்றை வெளிப்படுத்தினார். இயேசு, தான் சாகும் முன்பே அவர் எவ்வாறு இறந்து மாட்சிமைப்படப் போகிறார் என்பதனை நிக்கதேம் என்ற பரிசேயரிடம் பேசிக் கொண்டிருப்பதே இன்றைய நற்செய்தி. பழைய ஏற்பாட்டிலுள்ள இந்த வெண்கலப் பாம்பு என்பது ஒரு அடையாளம். பாலைவனத்தில் மோசே தலைமையில் இஸ்ரயேல் இனம் பயணம் செய்த பொழுது நச்சுப் பாம்புகளால் கடிபட்டு இறந்தனர். அப்பொழுது மோசே வெண்கலத்தால் செய்யப்பட்டப் பாம்பை உயர்த்தி, அதைப் பார்ப்போர் பாம்பின் நஞ்சுக்குப் பலியாக மாட்டார் என்று உறுதி மொழிந்தார். இந்த நிகழ்வுக்கும் கல்வாரி நிகழ்வுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. விலக்கப்பட்ட மரத்தின் மூலமாக நுழைந்த பாவம் சிலுவை மரத்தின் மூலமாகக் கழுவப்படுகிறது. முதல் ஆதாமின் மூலமாகக் கீழ்ப்படிதல் இல்லாமையால் வந்த பாவமும் சாவும் இயேசுவின் கீழ்ப்படிதலாலும் சாவினாலும்...