Category: இன்றைய சிந்தனை

என் காலடிகள் உம் வழியினின்று பிறழவில்லை

திருப்பாடல் 17: 1, 5 – 6, 8 & 15 கடவுளிடம் உதவிக்காக ஆசிரியர் மன்றாடுகிறார். தனக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பது அவருடைய வார்த்தைகளில் வெளிப்படுகிறது. ”என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்” என்கிற வார்த்தைகள், மற்றவர்கள் அவருக்கு எதிராக இருப்பதையும், யாருமே அவருக்கு ஆதரவாக இல்லை என்பதையும் வெளிப்படுத்துககிறது. ஆனாலும், அவர் நம்பிக்கை உள்ளவராக இருக்கிறார். ஏனென்றால், அவருக்கு தன் மீது நம்பிக்கை இருக்கிறது. தான் வாழும் வாழ்க்கை மீது நம்பிக்கை இருக்கிறது. கடவுள் முன்னிலையில் தான் மாசற்ற வாழ்க்கை வாழ்வதால், தன்னால் கடவுளிமிருந்து உதவியைப் பெற முடியும் என்று நம்புகிறார். அந்த நம்பிக்கை தான் இங்கே வெளிப்படுகிறது. கடவுள் நமக்கு உடனிருந்து உதவி செய்யக்கூடியவராக இருக்கிறார். எப்போது என்றால், நாம் அவருடைய வழிகளில் நடந்து அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறபோது. கடவுளின் ஒழுங்குமுறைகளின்படி நம்முடைய வாழ்வை நாம் அமைத்துக்கொள்கிறபோது, கடவுள் நமக்கு எப்போதும் உதவக்கூடியவராக இருக்கிறார். நம்மை துன்பங்களில் தாங்கிப்பிடிக்கிறவராக...

ஆண்டவரே என் ஆதரவு

திருப்பாடல் 3: 1 – 2, 3 – 4, 5 – 7ஆ இந்த உலகம் தீமைகள் நிறைந்த உலகம். இங்கே விழுமியங்களுக்கும், நல்ல மதிப்பீடுகளுக்கும் மதிப்பில்லை. நல்லவர்கள் மதிக்கப்படுவதில்லை. கெட்டவர்களுக்குத்தான் வாழ்வு இருக்கிறது. அவர்கள் மட்டுமே இந்த உலகத்தில் வாழ முடியும் என்கிற தோற்றமும் இருக்கிறது. இத்தகைய உலகத்தில் நல்லவர்கள் வாழ முடியுமா? இந்த உலகத்தை எதிர்த்து அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க முடியுமா? எதிர்ப்புக்களுக்கு நடுவில் அவர்களால் தாக்குப்பிடிக்க முடியுமா? முடியும் என்பதை இந்த திருப்பாடல் நமக்கு எடுத்துரைக்கிறது. ”என் எதிரிகள் பெருகிவிட்டனர்” என்கிற வார்த்தை, நல்ல மதிப்பீடுகளுக்காக திருப்பாடல் ஆசிரியர் துணிந்து நிற்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது. திருப்பாடல் ஆசிரியர் விழுமியங்களுக்கு குரல் கொடுக்கிறவராக இருக்கிறார். அதனால் அவருக்கு பல எதிரிகள் வந்துவிட்டனர். அவர்களை எதிர்த்து நிற்பது எளிதல்ல. ஆனாலும், கடவுள் இருக்கிறார் என்கிற நம்பிக்கை அவருக்கு மிகப்பெரிய ஆறுதலையும், உற்சாகத்தையும் தருகிறது. கடவுள் இருக்கிறார் என்கிற...

ஆண்டவரே! உமது ஒழுங்குமுறைகளை நான் கடைப்பிடிப்பேன்

திருப்பாடல் 119: 53 & 61, 134 & 150, 155 & 158 திருச்சட்டத்தின் மீது ஆழமான நம்பிக்கை வைத்திருக்கிற ஒரு மனிதரின் பாடல் தான் இன்றைய திருப்பாடல். திருச்சட்டம் என்பது இறைவன் இஸ்ரயேல் மக்களுக்கு வழங்கிய சட்டம். இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய வாழ்வை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஒழுங்குமுறைகளின் தொகுப்பு தான் திருச்சட்டம். இந்த சட்டத்தை அனைத்து இஸ்ரயேல் மக்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்பது இறைவனின் விருப்பம். அதனைப்பற்றிய சிந்தனையைத் தருவதுதான் திருப்பாடல் ஆசிரியரின் நோக்கமாக இருக்கிறது. திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்போருக்கு ஏற்படும் துன்பங்களையும் இந்த திருப்பாடல் கோடிட்டுக் காட்டுகிறது. திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பது எளிதானது அல்ல. ஆனால், அதே வேளையில் அதனை துன்பங்களுக்கு மத்தியில் கடைப்பிடிப்போருக்கு வரும் இடர்களும் சாதாரணமானவை அல்ல. அது மிகவும் கடினமானது. அதனை நாம் எதிர்கொள்வது கடினம் என்றாலும், இறைவல்லமையில் நாம் நம்பிக்கை வைத்து முன்னேறுகிறபோது, அது நிச்சயம் சாத்தியமாகவே இருக்கும். அந்த நம்பிக்கையை...

கடவுளே என்றென்றைக்கும் உள்ளது உமது வாக்கு

திருப்பாடல் 119: 89 – 90, 91 & 130, 135 & 175 கடவுளின் வாக்கு என்றென்றும் இந்த உலகத்தில் உள்ளது என்று இந்த திருப்படல் நமக்கு சொல்கிறது. வாக்கு என்பதை நாம் எப்படி புரிந்து கொள்ளலாம்? வாக்கு என்பதை நாம் வார்த்தை என்கிற பொருளில் அர்த்தப்படுத்தலாம். தொடக்கத்தில் கடவுள் இந்த உலகத்தைப் படைத்தபோது, ”ஒளி உண்டாகுக” என்று சொல்கிறார். உடனே அங்கு ஒளி தோன்றிற்று. ஆக, ஆண்டவரது வார்த்தை புதிய உலகத்தைத் தோற்றுவித்தது. இந்த உலகமே கடவுளின் வார்த்தையால் உருவானது. இயேசுவின் பிறப்பைப்பற்றி யோவான் சொல்கிறபோது, “வாக்கு மனுவுருவானார்” என்று சொல்கிறார். கடவுளின் வார்த்தை இயேசுவில் மனித உருவம் எடுக்கிறது. ஆக, கடவுளின் வாக்கு என்பது, இறைவனோடு ஒப்பிடப்படுகிற வார்த்தையாக இருக்கிறது. ”என்றென்றைக்கும் உள்ளது உமது வாக்கு” என்பது, இறைவன் நம்மில் ஒருவராக, நம்மோடு இயற்கையின் வடிவத்திலும், இறைவார்த்தையின் வடிவத்திலும், கடவுளின் சாயலாக படைக்கப்பட்ட மனிதர்களின் வடிவத்திலும் இருக்கிறார்...

கடவுளே! உலகில் எழுந்தருளும். நீதியை நிலைநாட்டும்

திருப்பாடல் 82: 3 – 4, 6 – 7 உலகில் நடக்கும் அநீதிகளையும், தீங்கு செய்வோரையும் கண்டு மனம் வெதும்பிப்பாடும் ஓர் ஆன்மாவின் குரல் தான் இன்றைய திருப்பாடல். இந்த உலகம் இரண்டு வகையானது. மக்களை அடக்கி ஆள வேண்டும் என்கிற எண்ணம் படைத்த அதிகாரவர்க்கத்தினர் ஒருபுறம். தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி, சாதாரண மக்கள் மீது வரிகளையும், பாரங்களையும் சுமத்தி, அவர்களைச் சிந்திக்க விடாது செய்துகொண்டிருக்கிறவர்கள். மற்றொரு பக்கத்தில், வேறு வழியில்லாமல் அதிகாரவர்க்கத்தினரின் அடக்குமுறைக்கு பலியாகிக்கொண்டிருக்கும் ஏழை, எளிய வர்க்கத்தினர். இந்த இரண்டு வகையினர்க்கும் இடையே மறைமுக போராட்டம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஏதோ ஒரு வகையில், அதிகாரவர்க்கம் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஏழை, எளியவர்களை நசுக்கிக் கொண்டிருக்கிறது. ஏழைகளும் மீள முடியாமல் இந்த அடிமைத்தனத்தை சகித்துக்கொண்டு, தாங்கள் மீண்டு எழுவதற்கு ஏதாவது வாய்ப்பு அமைந்துவிடாதா? என்ற நம்பிக்கையில் காத்துக்கொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், திருப்பாடல் ஆசிரியர், கடவுளை...