Category: இன்றைய வசனம்

ஆண்டவரே!உம் பலிபீடத்தை வலம் வருவேன்.( திருப்பாடல்கள் ) 26 : 6

ஆண்டவர் மேல் நம்பிக்கை வைத்து அவர் பலிபீடத்தண்டையில் வரும் யாராயிருந்தாலும் எதற்காகவும் கலங்கவும்,அஞ்சவும்,தேவையில்லை. அவரை நோக்கி நமது உள்ளத்தை உயர்த்தி அவரைப் பற்றிக்கொள்பவர் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை. ஏனெனில் அவர் இரக்கமும், பேரன்பும்,கொண்டவர்.அவருடைய பீடத்தண்டையில் அடைக்கலான் குருவிக்கும், சிட்டுக்குருவிக்கும் கூட அடைக்கலம் உண்டாம் .தி.பா.84:3. அப்படியிருக்க அவருக்கென்று அவரைப்போல் படைக்கப்பட்ட நமக்கு எவ்வளவு அடைக்கலம் உண்டு என்பதை அறிந்துக்கொள்வோம். ஆண்டவரின் இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றவர்கள். அவர்கள் எப்பொழுதும் அவரைப் புகழ்ந்துக்கொண்டே இருப்பார்கள். நம்முமுடைய சரீரமே ( உடலே ) ஆண்டவரின் ஆலயமாக இருக்கிறது. ஆண்டவரின் ஆவியானவர் நம் இதயத்தில் குடியிருக்கிறார் என்று                  1 கொரிந்தியர் 3 : 16 ல் வாசிக்கிறோம். ஆகையால் நாம் உண்மை உள்ளவர்களாய் அவருக்கு பயந்து கீழ்படிந்து நடப்போமானால் அப்பொழுது நம்மை முற்றிலும் பொறுப்பெடுத்துக்கொண்டு நம் கால் கல்லில் இடராதபடிக்கும்,ஒரு தீங்கும் அணுகாத படிக்கும் நம்மை காத்துக்கொள்வார். ஆண்டவரின் பீடத்தண்டையில் போகாமல் அவரை நோக்கி பாராமல் இருந்தால் எப்படி நமக்கு...

நம் பொக்கிஷம் எது ?

இந்த உலகத்தில் வாழும் அனைவருக்கும் விலையுயர்ந்த பொக்கிஷம் என்றால் அது நம்முடைய வேதமே! ஏனெனில் வேதத்தின் மூலம் நாம் நல்லது எது? கெட்டது எது? வாழ்வா,சாவா? அனுதின வாழ்க்கையின் போராட்டத்தில் இருந்து எப்படி நம்மை பாதுகாத்துக்கொள்ளவேண்டும், ஆசீர்வாதமா? சாபமா? எல்லாவற்றுக்கும் பதில் அதில் இருக்கிறது. அனுதினமும் வேதத்தை வாசித்து தியானித்து அதன்படி நடந்தோமானால் நம்மை யாராலும் எதுவும் செய்ய முடியாது. பயத்திலிருந்து விடுதலை, ஆபத்திலிருந்து பாதுக்காப்பு, நோயிலிருந்து சுகம், கடன் பிரச்சனையிலிருந்து சுதந்திரம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவையெல்லாம் நமக்கு கிடைக்க வேண்டுமானால் அதற்கு நாம் செய்ய வேண்டிய வேலை தினமும் காலையில் எழுந்து வேதத்தை வாசித்து ஆண்டவரை நோக்கி ஜெபித்துவிட்டு அந்த நாளுக்குரிய எல்லா காரியத்தையும் அவர் பாதபடியில் வைத்துவிட்டு அவர் சித்தப்படி நடந்துக்கொண்டால் இந்த உலகத்திலே நாம்தான் சிறந்தவர்கள். எல்லாம் நமக்கு கூட்டியே  கிடைக்கும். மத்தேயு 6 :33. ஆனால் நாமோ அப்படிப்பட்ட விலையுயர்ந்த பொக்கிஷத்தை ஏதோ ஒரு மூலையில் தூசி படியவிட்டுவிட்டு எங்கெங்கோ தேடி அலைகிறோம். ஒரு பழமொழி சொல்வார்கள். “வெண்ணையை கையில் வைத்துக்கொண்டு எங்கெங்கோ தேடினார்களாம்...

எப்பொழுதும் நன்மை செய்ய நாடுங்கள்.1 தெசலோனிக்கர் 5 : 15

ஒருவரும் மற்றவருக்கு தீமைக்குத் தீமை செய்யாதபடி எப்பொழுதும் நன்மை செய்யவே நாடுவோம். ஏனெனில் கடவுள் நம்மைத் தம் சினத்துக்கு ஆளாவதற்கு அல்ல, ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக மீட்பு அடையவே ஏற்படுத்தியுள்ளார். கர்த்தராகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார்.தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மை செய்கிறவராயும், எல்லோரையும் குணம் ஆக்குபவராகவும் சுற்றித்திரிந்தார் என்று அப்போஸ்தலர் 10:38 ல் வாசிக்கிறோம். கடவுளாகிய இயேசுவுக்கே அந்த பரிசுத்த ஆவியானவர் தேவைஎன்றால் நம் எல்லோருக்கும் எவ்வளவாய் தேவை என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ! தூய ஆவியை பெற்றுக்கொண்டால் மாத்திரமே நம்மால் நன்மை செய்ய முடியும். ஆவியின் கனிகள் இல்லாவிட்டால் நம்மால் நன்மை செய்ய முடியாது. தீமைக்கு தீமைத்தான் செய்வோம். ஆண்டவரின் அன்பும், மனதுருக்கமும், பொறுமையும், மன்னிக்கிற குணமும் இருந்தால் மட்டுமே நன்மை செய்ய முடியும். கெத்சமனே தோட்டத்தில் ஆண்டவர் இயேசு ஜெபம் பண்ணுகையில் அவருடைய வியர்வைத் துளிகள் இரத்தத் துளிகளாக தரையில் விழுந்தது. நம்முடைய பாவங்களையும், நோய்களையும், துன்பங்களையும் அவர் ஏற்றுக்கொண்டு சிலுவையை சுமந்து...

இறைப்பற்றுடன் வாழ விரும்புவோர் அனைவரும் இன்னலுறுவர். 2 திமொத்தேயு 3 : 12

உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றிக்கொண்டுவிட்டேன்” என்றார்.என்று இயேசுவே யோவான் 16:33 ல் சொல்கிறார். இயேசு கிறிஸ்து இந்த உலகை வென்றதால் அவருடைய பிள்ளைகளாகிய நம்மையும் அவரின் துணையோடு  வெற்றிக்கானும்படி செய்வார். அவர் வழியாய் நாம் அமைதியை பெற்றுக் கொள்ளலாம். கிறிஸ்துவ வாழ்க்கை என்பது பஞ்சு மெத்தை வாழ்க்கை இல்லை. நிறைய துன்பங்களும், தொல்லைகளும் நம்மை சூழ்ந்துக்கொண்டு பயமுறுத்தும். ஆனால் அவற்றைக் கண்டு மனம் சோர்ந்து போகாமல் உண்மையாய் விசுவாசத்துடன் நடந்துக்கொண்டால் ஆண்டவர் நமக்கு உதவிச்செய்வார். மன உறுதியையும்,ஊக்கத்தையும் தரும் கடவுள் நமக்கு அருள்புரிவாராக! நமக்கு ஏற்படும் துன்பங்களை கடவுளுக்கு ஏற்புடைய முறையில் தாங்கிக் கொண்டால் அதினால் நமக்கு எத்தனை அதிகமான ஊக்கம் உண்டானது என்று உணரலாம். அதற்கு உதாரணமாக யோபுவின் புத்தகத்தை வாசித்துப்பார்த்தால் நன்கு விளங்கும். எல்லாவற்றையும் இழந்த நிலையிலும் தன் உடல் முழுதும் நோயினால் தாக்கப்பட்டப்போதும் ஆண்டவரை உறுதியாய் பற்றிக்கொண்டு அவர் என்னைக்கொன்று போட்டாலும் அவர் மேல் பிரியமாய் இருப்பேன் என்று சொன்ன அவரை...

நம்மைக் காண்கிற தேவன் உறங்குவதுமில்லை,தூங்குவதுமில்லை

விண்ணையும்,மண்ணையும்,உண்டாக்கிய ஆண்டவரிடத்தில் இருந்தே நமக்கு உதவி கிடைக்கும். ஏனெனில் அவரே நம்முடைய கால்கள் இடறாதபடிக்கு பார்த்துக்கொள்வார். அவரே எப்பொழுதும் நம்முடைய வலப்பக்கத்தில் இருந்து, நமக்கு நிழலைப்போல் நம்மோடு கூடவே இருந்து நம்மைக்காத்துக்கொள்வார். நல்ல ஆயனாக,ஒரு தாயாக இருந்து நேற்றும்,இன்றும், நாளையும் காப்பவர் அவரே. முட்புதர் நடுவில் இருக்கும் லீலிமலர்ப்போல், அவரின் தலையில் முள்முடியை நமக்காக ஏற்றுக்கொண்டார். எங்கேதித் தோட்டங்களில் உள்ள மருதோன்றி பூங்கொத்தின் வாசனைப்போல் மணம் வீசி தமது இரத்தத்தால் நம்முடைய பாவத்தின் அழுக்கை நீங்கச்செய்து நறுமண தைலத்தால் நம்மை அலங்கரித்து நம் இதயத்தில் வாசம் செய்து சந்தோஷத்தையும், சமாதானத்தையும் தருபவர் அவரே. வானத்தின் நட்சத்திரங்களை ஒளிரச் செய்கிற தேவன் தூங்காமல், உறங்காமல், நம்மையும் நமது வாழ்க்கையும் ஒளிரச் செய்கிறார். அவரிடம் அன்புக் கொள்ளுகிறவர்களுக்கென்று அவர் ஏற்பாடு செய்து வைத்திருக்கிற காரியங்கள் இதுவரை நம் கண்ணுக்கு புலப்படவில்லை. நமது செவிக்கு எட்டவுமில்லை. மனிதனின் உள்ளமும் அதை அறிந்துக்கொள்ளவில்லை. இவைகளை தூய ஆவியானவர் மூலமாகவெ நமக்கு வெளிப்படுத்துவார். மனித இயல்பை மட்டும் உடைய ஒருவர் இவைகளை ஏற்றுக்கொள்வதில்லை. ஏனெனில் அவர்களுக்கு...