Category: இன்றைய வசனம்

இரத்தம் சிந்துதல் இன்றிப் பாவமன்னிப்பு இல்லை. எபிரேயர் 9 : 22

கடவுளால் அழைக்கப்பட்டவர்கள் அவரால் வாக்களிக்கப்பட்ட, என்றும் நிலைக்கும் உரிமைப் பேற்றைப் பெறுவதற்கென்று கடவுள் நம்மோடு செய்துள்ள உடன்படிக்கையின் இரத்தம் நம்மை பாவத்திலிருந்தும், சாபத்திலிருந்தும் மீட்டுள்ளது. கூடாரத்தின் மீதும் வழிப்பாட்டுக்கலன்கள் அனைத்தின் மீதும் அவர் இரத்தத்தை தெளித்தார். உண்மையில் திருச்சட்டத்தின்படி ஏறக்குறைய எல்லாமே இரத்தத்தினால் தூய்மையாக்கப்படுகின்றன. இரத்தம் சிந்துதல் இன்றிப் பாவமன்னிப்பு இல்லை என்று எபிரெயர் 9:21,22 ஆகிய வசனங்களில் வாசிக்கிறோம். கிறிஸ்து தம்மையே ஒரே முறை பலியாக நமக்காக ஒப்புக்கொடுத்தார். நம்மை மீட்கும் பொருட்டே அவ்வாறு செய்தார். ஏனெனில் ஒரே மனிதனால் இந்த உலகில் பாவம் வந்ததுப்போல் அந்த பாவத்தை எல்லாம் நிவர்த்தி செய்யும் பொருட்டு உலகம் முடியும் காலமான இப்போது தம்மையே பலியாகக் கொடுத்து நம்முடைய பாவங்களைப் போக்குவதற்காக ஒரே முறை உலகில் வெளிப்படுத்தப்பட்டார். ஒரேமுறை நாமும் சாவுக்கு உட்படுகின்றோம். பின்னர் இறுதி தீர்ப்பு வருகிறது. இதுவே நமக்காக நியமித்த நியதி. ஆண்டவராகிய கிறிஸ்துவும் நம் எல்லோருடைய பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரேமுறை தம்மையே பலியாகக் கொடுத்தார். ஆனால் அவர் மீண்டும் ஒருமுறை தோன்றுவார். பாவத்தின் பொருட்டு அல்ல....

ஒரு குழந்தையின் ஏக்கம்

விமலா தனக்கு வந்த விசாவை பார்த்தவுடன் மகிழ்ச்சியில் பெரிதும் மகிழ்ந்தாள். ஏனெனில் இன்னும் ஒரு வாரத்தில் அவள் லண்டன் போகப் போகிறாள். அதற்கான விசா வந்து விட்டது. இனி என் வாழ்வில் எல்லாம் சந்தோசமே என்று பயணத்துக்கான ஏற்பாடுகளை கவனிக்க ஆரம்பித்தாள். அதற்குமுன் இங்கு உள்ள எல்லா காரியங்களையும் ஒழுங்குபடுத்தவேண்டும் என்று அதற்கான யோசனையில் மூழ்கினாள். விமலா நன்கு படித்தவள். வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் என்று விரும்புபவள். அவளின் பெற்றோர் எட்டு வருடங்கள் முன் அவளுக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் நடத்தி வைத்தனர். நல்ல கணவர்.திருமணமான அடுத்த ஆண்டிலேயே அவளுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. இபொழுது தனது குழந்தைக்கு ஏழு வயதாகிறது. ஆனால் குழந்தை சிறிது ஊனமுடன் இருப்பதால் மற்ற குழந்தைகள் போல் அதுவால் ஓடியாடி விளையாட முடியாது. போன வருஷம் தனது கணவர் ஒரு விபத்தில் இறந்து விட்டார். இதனால் மனது உடைந்துபோன விமலா மிகவும் கவலைக்குள்ளானாள். கணவனும் இல்லை. குழந்தையும் ஊனம் . அதனால் வாழ்க்கையே...

ஞானத்தைக் கொடுப்பது நம் ஆண்டவரே!

அரண்மனை தெருவில் உள்ள ஒரு கூலித் தொழிலாளி ஒருவர் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். அங்குள்ள ஒரு பள்ளியில் தனது பிள்ளைகளை படிக்க வைத்தார். ஒரு நாள் அந்த குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச் செல்லும்பொழுது வழியில் ஒருவர் நிறைய கைவினைப் பொருட்களை விற்றுக்கொண்டிருந்தார். அதைப்பார்த்ததும் அந்த குழந்தைகள் தன் அப்பாவிடம் அந்த பொருட்களை எல்லாம் வாங்கித் தரும்படி கேட்டார்கள். அப்பொழுது அவர்களின் தந்தை அந்த பொருட்களை தனது குழந்தைகளுக்கு வாங்கிக்கொடுக்கும்படி சென்று அதன் விலையை கேட்டார். வியாபாரி விலையை சொன்னதும் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லையே என்று நினைத்து தனது குழந்தைகளிடம் இந்த பொருட்களை நானே உங்களுக்கு செய்து தருகிறேன். நான் சிறு பையனாக இருந்தபொழுது இவைகளை செய்யும்படி கற்றுக்கொண்டேன். ஆனால் அதை தொழிலாக செய்யாமல் விட்டுவிட்டேன். ஆனாலும் எனக்கு ஞாபகம் இருக்கிறது என்று சொல்லி தனது குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார். பிறகு தன் குழந்தைகள் விரும்பிய பொருட்களை அவரே அழகாக செய்துக்கொடுத்தார். குழந்தைகளுக்கு ஒரே சந்தோஷம்.ஏனெனில் விற்ற இடத்தில் பார்த்த மாதிரியே நம் அப்பா செய்துக்கொடுத்துவிட்டாரே!...

உங்களை துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்

ரகு முதன் முதலாக வீட்டை விட்டு பிரிந்து ஹாஸ்டல் செல்ல அதற்கான ஏற்பாட்டை செய்து கொண்டிருந்தான். + 2 வரைக்கும் தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்த ரகு காலேஜில் சேர்வதற்காக, அங்கு ஹாஸ்டலில் தங்கி படிப்பதற்காக கிளம்பினான். ரகு மிகவும் பொறுமையான, அன்பான மாணவன். ஏனெனில் அவனின் பெற்றோர் அவனை நல்ல முறையில் கடவுளுக்கு பயந்து நடக்கும் வழியில் வளர்த்து இருந்தார்கள். சிறிது பயத்தோடு முதல்நாள் வகுப்புக்கு சென்றான். அங்கு இவனோடு படித்த இரண்டு மாணவர்களும் இருந்தார்கள். அதனால் ரகுவிற்கு கொஞ்சம் தைரியமாக இருந்தது. இவர்கள் மூவரும் ஒரே அறையில் தங்கிக்கொண்டனர். அதனால் எங்கு போனாலும் மூவரும் சேர்ந்தே போவார்கள், வருவார்கள். இரண்டு மாதம் கழித்து லீவுக்கு வீட்டுக்கு வந்துவிட்டு விடுமுறை முடிந்ததும் மறுபடியும் காலேஜிக்கு சென்றான். ஏதோ காரணத்தால் மற்ற இரண்டு பேரும் வரவில்லை. ரகு அலைபேசியில் அழைத்து கேட்டதற்கு இரண்டுநாள் கழித்து வருகிறோம் என்று சொன்னார்கள். அதனால் அன்று ரகு தனியாக ஹாஸ்டலில் இருந்து தன் வகுப்புக்கு போனான். மூன்றாம்...

கடவுள் தமது பேரன்பால் நம்மை எதிர்கொள்ள வருவார்.தி.பா 59 : 10

துன்ப வேளைகளில் என்னை நோக்கி கூப்பிடுங்கள்: உங்களைத் காத்திடுவேன். நீங்கள் என்னை மேன்மைப்படுத்துவீர்கள். தி.பா 50 : 15. கடவுள் நம்மேல் வைத்த பேரன்பினால் நாம் எப்பொழுது கூப்பிட்டாலும் நம் முன் வந்து நிற்பார். நம்மூடைய உள்ளார்ந்த மனக்கண்களால் காண முடியும். அதற்காகவே இந்த உலகில் வந்து ஒரு மனிதனாக பிறந்து நம்மைப்போல் எல்லா கஷ்டங்களையும் அனுபவித்து சென்றுள்ளார். அதனால் நம்முடைய எல்லா கஷ்டங்களையும், துன்பங்களையும், அவர் அறிந்து வைத்திருக்கிறார். அவருக்கேற்ற பலி நொறுங்குண்ட நெஞ்சமே: நொறுங்கிய, குற்றமுணர்ந்த உள்ளத்தை அவமதிக்கமாட்டார். ஏனெனில் அவரே சோதனைக்குட்பட்டு துன்பப்பட்டதால் சோதிக்கப் படுவோருக்கு உதவிச் செய்ய அவர் வல்லவரும், நல்லவருமாயிருக்கிறார். எபிரெயர் 2:18. ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியும்:நீர் என்னை அறிவீர்: என்னை நினைவுகூரும்: எனக்கு உதவியருளும்: என்னைத் துன்புறுத்துவோரை என் பொருட்டு பழிவாங்கும்: நீர் பொறுமையுள்ளவர்: என்னைத் தள்ளிவிடாதேயும்: உம் பொருட்டு நான் வசைமொழிகளுக்கு ஆளாகிறேன் என்று எரேமியா 15 :15 ல் வாசிப்பதுபோல நாமும் ஆண்டவரை நோக்கி மன்றாடினால் நம் ஜெபத்தைக் கேட்டு எல்லா இக்கட்டுக்கும் விலக்கி...