Category: இன்றைய வசனம்

ஆண்டவரின்மேல் உன் கவலையை போட்டுவிடு.தி.பாடல்கள்.55:22

கடவுள் நம்முடைய மன்றாட்டுக்கு செவிசாய்த்து,நாம் முறையிடும் வேளையில் நம்மை மறைத்துக்கொள்கிறார். நம் விண்ணப்பத்தைக்கேட்டு நம்முடைய கவலைகளை, பாரங்களை அவர் ஏற்றுக்கொள்கிறார். கடுந்துயரம் நம் உள்ளத்தை பிளந்தாலும் சாவின் திகில் நம்மை கவ்விக் கொண்டாலும், அச்சமும், நடுக்கமும் நம்மை பற்றிக்கொண்டாலும் நாம் மனம் கலங்க தேவையில்லை. பிசாசு நம் உள்ளத்தை வஞ்சித்து நம்மை ஏமாற்றி நாம் சோர்ந்து போகும் வண்ணமாக சில முயற்சிகளை கையாளப்பார்ப்பான். நாம் அவனுக்கு எதிர்த்து நின்றால் அவன் நம்மைவிட்டு ஓடிடுவான். நாம் சோர்ந்து போனால் இதுதான் சமயம் என்று நம்மை ஒழிக்கப்பார்ப்பான். ஆகையால் நம் கவலைகளை ஆண்டவரின்மேல் போட்டுவிட்டால் அவர் நம்மை எல்லாத் தீங்கிற்கும் விலக்கி காத்துக்கொள்வார். அதற்காகத்தான் நாம் தினந்தோறும் ஆண்டவரின் வார்த்தைகளை வாசித்து தியானிக்கும்பொழுது அவ்வார்த்தை நம்மை ஒவ்வொருநாளும் மெருகேற்றி நாம் வழிதப்பி போகாதபடிக்கு நமக்கு போதித்து அறிவுரை வழங்கும். யாரையும் தெடிசெல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஆண்டவரின் வார்த்தை நமக்கு நல்ல வழிக்காட்டியாய் இருக்கும்.அதனால் தான் இயேசுவும் வழியும், உண்மையும், வாழ்வும் நானே என்று யோவான் 14 : 6 ல்...

இயேசு கண்ணீர் விட்டு அழுதார்.யோவான் 11 : 35

பிரியமானவர்களே! நம்முடைய ஆண்டவர் உயிருள்ளவர். நம்மைப்போல் அவரும் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார். இந்தநாளிலும் நம்முடைய கண்ணீரை, துயரங்களை காண்கிறவராகவே இருக்கிறார். அன்பே உருவான தேவன் நம் ஒவ்வொருவரையும் ஆற்றி தேற்றி சந்தோஷத்தாலும், சமானாத்தினாலும் நிரப்புகிறார். பெத்தானியா கிராமத்தில் வசித்த ஒரு குடும்பத்தின்மேல் இயேசு தமது அன்பை செலுத்தி வந்தார். அவர்கள் மார்த்தா அவருடைய சகோதரியான மரியா,இவர்களுடைய சகோதரன் லாசரு என்பவர்கள் மரியா இயேசுவின் மேல் அதிகப்படியான அன்பு வைத்து இருந்தார்கள். இவர்கள்தான் ஆண்டவர்மேல் நறுமணத்தைலம் பூசித் தமது கூந்தலால் அவரின் காலடிகளைத் துடைத்தவர். தேவையான ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொண்டவர்களும் இவர்களே.அதை யாரும் அவர்களிடம் இருந்து எடுக்க முடியாது. ஒருநாள் இந்த மார்த்தா, மரியா சகோதரன் லாசரு உடல்நிலைக்குறைவால் இறந்துபோனார். அச்சமயத்தில் இயேசுவும் அந்த ஊரில் இல்லை. இச்செய்தியை கேள்விப்பட்டு இயேசு அந்த கிராமத்துக்கு வந்து மார்த்தா, மரியாவை சந்தித்து ஆறுதல் கூருகிரார். அப்பொழுது மார்த்தா ஆண்டவரே நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டானே. இப்பொழுதும் நீர் கடவுளிடம் கேட்பதை அவர் உமக்கு கொடுப்பார் என்று எனக்குத் தெரியும்...

எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்வோம்

நாம் உண்டாலும்,குடித்தாலும்,எதைச் செய்தாலும் எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்யும் பொழுது ( 1 கொரி 10 : 31 ) நாம் அவருக்கு உகந்தவர்களாக மாறுகிறோம்.நாம் நமக்கென்றே வாழாமல் பிறர்க்கு பயன்தரும் வகையில் வாழ்வோம். நாம் என்ன விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்வோம். நாம் பிறர்க்கு உதவினால் அதை ஆண்டவர் நினைவில் வைத்து நம்முடைய கஷ்ட காலங்களில் வேறொருவரைக் கொண்டு நமக்கு உதவ ஏற்பாடு செய்வார் நம் கருணையே உள்ள ஆண்டவர். ஒருநாள் நண்பர்கள் இருவர் தங்கள் பிறந்தநாளை கொண்டாட ஒரு வீட்டில் ஏற்பாடு செய்திருந்தனர். அதற்காக எல்லாவற்றையும் வாங்க ஒரு பைக்கில் போய்க்கொண்டு இருந்த பொழுது ஒரு முதியவர் ஒருவர் அடிப்பட்டு வழியில் விழுந்து கிடந்தார்.நிறைய வாகனம் அதன் வழியே சென்றாலும் யாரும் உதவவில்லை. அவரவர் வேலை அவரவருக்கு முக்கியம். இந்த நண்பர்கள் இருவரும் பார்த்துவிட்டு மனமிரங்கி அவரை ஒரு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சென்று சுகாதார மையத்தில் சேர்த்து அவருக்கு பக்கத்திலே இருந்து கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டனர். அந்த பெரியவரும் சிறிது நேரம் கழித்து...

முழு ஆர்வத்துடன் இறைவார்த்தையை ஏற்றுக்கொள்வோம்

கடவுள் தம்மை மக்கள் தேடவேண்டும், தட்டித் தடவியாவது தம்மைக்கண்டுக்கொள்ளவேண்டும் என்பதற்காக உயிரையும், மூச்சையும், மற்றனைத்தையும் கொடுத்தார். மனிதர் கையால் செய்யும் ஊழியம் எதுவும் அவருக்கு தேவையில்லை. ஏனெனில் ஒரே ஆளிலிருந்து மக்களினம் முழுவதையும் படைத்து அவர்களை மண்ணுலகில் குடியிருக்கச் செய்தார். குறிப்பிட்ட காலங்களையும், குடியிருக்கும் எல்லைகளையும் வரையறுத்துக் கொடுத்தார். அவர் சொல்ல ஆகும்,அவர் கட்டளையிட நிற்கும்.நமது தேவைகள் யாவையும் பூர்த்தி செய்கிறவர் அவரே! நம்மை நோயிலிருந்தும், தீராத பிரச்சனைகளில் இருந்தும் கடன் பிரச்சனையிலிருந்தும், நம்மை காப்பவர் அவரே. ஒவ்வொரு நாளும் நம்மை கரம் பிடித்து கண்மணியைப்போல் காப்பவர் அவரே! நமது விண்ணப்பத்தையும், வேண்டுதல்களையும் தருபவர் அவரே! அவரே நமக்கு கட்டளையிடுகிறவர்.அவர் கரத்தில் இருந்து பெற்றுக்கொள்ளும் ஆசீர்வாதம் சிறந்ததாய் இருக்கும். ஒவ்வொரு நாளும் நம்மை காத்து வழிநடத்தும் தெய்வம் அவரே. அவரையே நாம் ஒவ்வொரு நாளும் துதித்து ஆராதிப்போம். ஏனெனில்,நம் குற்றங்களுக்காக காயமடைந்தார். நம்முடைய தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார். நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்.அவர் பட்ட காயங்களால் நம்மை நோயிலிருந்து குணப்படுத்துகிறார். நமக்காக சிறுமைப்பட்டு,...

ஆண்டவரின் இரக்கம் தீர்ந்து போகவில்லை.புலம்பல் 3 : 22

ஆண்டவரின் பேரன்பு முடிவுறவில்லை. காலைதோறும் அவை புதுப்பிக்கப்படுகின்றன! நீரே பெரிதும் நம்பிக்கைக்குரியவர்!” ஆண்டவரே என் பங்கு” என்று என் மனம் சொல்கின்றது! எனவே அவரில் நம்பிக்கை கொள்கிறேன். ஆண்டவரில் நம்பிக்கை வைப்போருக்கும், அவரைத் தேடுவோருக்கும், அவர் நல்லவர்! அவர் அருளும் மீட்டுப்பாக அமைதியுடன் காத்திருப்பதே நலம்!அவர் நம்மை வருத்தினாலும் தம் பேரன்பால் இரக்கம் காட்டுவார். மனமார அவர் நம்மை வருத்துவதுமில்லை. துன் புறுத்துவதுமில்லை. துன்பங்களின் வழியாக நாம் கடந்து செல்லும்பொழுது நாம் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்கிறோம். தங்கம் அக்கினியினால் உருக்கப்பட்டால்தான் புது, புது வடிவத்தில் பலவகையான ஆபரணங்கள் கிடைக்கிறது. நம்முடைய ஆத்துமாவோ அதைவிட மேலானது. அது சோதிக்கப்படும்பொழுது நமக்குள் பொறுமையும், அமைதியும், அன்பும், நிலைத்திருக்க உதவி செய்கிறது. உபத்திரவம் பொறுமையை கற்றுக்கொடுக்கிறது. தி.பாடல்கள் 119:71 ம் வசனம் இதையே சொல்கிறது. எனக்கு துன்பம் விளைந்தது என் நன்மைக்காகவே: அதனால் உம் விதிமுறைகளைக் கற்றுக்கொண்டேன். கடவுள் ஒரு காரியத்தை கட்டளையிடவில்லை என்றால் அவர் சொல்லியதை யாரால் நிறைவேற்றக்கூடும்? நன்மையும் தீமையும் உன்னதரின் வாயினின்றே புறப்படுகிறது. ஆகையால்...