அன்பே உருவான இறைவன்

அன்பே உருவான இறைவன், இன்று உங்கள் ஒவ்வொருவரிடம் கூறும் வார்த்தை என்ன தெரியுமா?

எனக்கு மிகவும் பிரியமான என் இரத்தத்தினால் சம்பாதித்த என் செல்லக் குழந்தைகளே!
நீங்கள் என் ஊழியன்.[என் சொந்த பிள்ளைகள்]உங்கள் வழியாய் நான் இன்று மாட்சியுறுவேன். ஏசாயா 49:3.
ஆம்,ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து உங்கள் வழியாய் மாட்சியுற இன்று உங்கள் உள்ளத்தில், உங்கள் இல்லத்தில் வருகிறேன், என்று சொல்கிறார். நீங்கள் செய்வதல்லாம் ஒன்றே ஒன்று தான்.அவரை உங்கள் உள்ளத்தில் ஏற்றுக்கொள்வீர்களா?
இதோ அவருடைய இரத்தத்தினால் சம்பாதித்த நம்மை பார்த்து என் மகனே,என் மகளே உன் இருதயத்தை எனக்கு கொடுப்பாயா ? என்று கேட்கிறார்.பிரியமானவர்களே! உங்களை ஆண்டவருக்கு கொடுப்பீர்களா?
நான் நாள் முழுதும் உழைக்கிறேன்.எனக்கு ஒன்றும் இல்லையே என்று ஏங்கித் தவிக்கும் அன்பானவர்களே!மனம் கலங்காதீர்கள்.
தாமே சோதனைக்கு உள்ளாகி துன்பபட்டதினால் சோதிக்கப்படுபவர்களுக்கு உதவி செய்ய அவர் வல்லவர்.  எபி 2:18.
உங்கள் பணிக்கான பரிசு கடவுளிடம் இருக்கிறது.
கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள்.கேட்கிற யாவருக்கும் கொடுக்க ஆவலாய் உங்கள் அருகில் காத்திருக்கிறார்.
ஜெபம்.
======
விண்ணையும்,மண்ணையும் படைத்த ஆண்டவரே உம்மை போற்றுகிறோம்,புகழ்கிறோம். உம்முடைய இரத்ததினால் சம்பாதித்த எங்களை காத்துக்கொள்ளும். எங்கள் பாவங்கள், குற்றங்கள் எல்லாவற்றையும் மன்னித்து உமது இறக்கைகளின் மறைவில் மூடி எல்லா துன்பங்களுக்கும், சோதனைகளுக்கும், விலக்கி காத்தருளும். உமக்கே கோடான கோடி நன்றிகளை என் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து செலுத்துகிறேன். பரலோக தந்தையே !! ஆமென், அல்லேலூயா!!!.

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.