பெயர் சொல்லி அழைத்து அறிந்திருக்கிற தேவன்.

கர்த்தருக்குள் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு நம் ஆண்டவராகிய  இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
இந்த உலகத்தில் பிறந்து வாழும் நம் ஒவ்வொருவரையும் கடவுள் அறிந்திருக்கிறார். நமது தேவைகளையும் அறிந்திருக்கிறார். அவரின் சித்தப்படி கேட்போமானால் நிச்சயம் அதை தர காத்திருக்கிறார். இதோ என் உள்ளங்கைகளில் வரைந்து [பொறித்து]வைத்துள்ளேன். உன்
சுவர்கள் எப்பொழுதும் என் கண்முன் நிற்கின்றன. எசாயா 49:16 என்று வாசிக்கிறோம்.
நம் ஒவ்வொருவரையும் ஏதோ ஒரு அவரின் நோக்கத்தை நிறைவேற்ற நம் தாயின் வயிற்றில் உருவாகும் முன்னே நம்மை பெயர் சொல்லி அறிந்திருக்கிறார். உதரத்திலிருந்து உங்களைத் தாங்குபவர் நான், கருவிலிருந்தே உங்களை சுமப்பவர் நான். உங்கள் முதுமை வரைக்கும் நான் அப்படியே இருப்பேன்: நான் நரை வயதுவரைக்கும் உங்களைத் தாங்குவேன், சுமப்பேன். உங்களை உருவாக்கிய நானே உங்களைத் விடுவிப்பேன். ஏசாயா 46: 3,4. அதுமட்டுமா? தேர்ந்தெடுக்கப்பட்ட நம்மை இயேசுவின் சாயலாய் மாறவேண்டும் என்று முன்குறித்து வைத்திருக்கிறார். அவர் முன்குறித்து வைத்தோரை அவர் அழைத்திருக்கிறார். தாம் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையவ
ராக்கி இருக்கிறார். தமக்கு ஏற்புடையோரை தம் மாட்சியில் பங்கு பெறச் செய்தார்.
உரோமையர் 8:29,30.
அவரே நல்ல ஆயனாய் ஆடுகளாகிய நம்மை அறிந்திருக்கிறார். தமது உயிரையே கொடுத்தார். அவரின் குரலுக்கு நாம் செவிசாய்ப்போம். யோவான் 10:14,27. நாம் இனிமேல் பாவத்துக்கு அடிமை
களாய் இராதபடி, நம்முடைய பழைய மனித இயல்பு அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறோம். ரோமர் 6:6. நம் பாவத்துக்காக சிலுவையில் அடிக்கப்பட்ட நாம் இனி அவருக்காக பிழைத்திருப்போம். இந்த உலகில் வாழும் கூடாரம் அழிந்துபோனாலும் கடவுளிடம் இருந்து கிடைக்கும் விண்ணுல வீடு நமக்கு உண்டு. 2 கொரிந்தியர் 5:1. இறைப்பற்று உள்ளவர்களை சோதனையிலிருந்து விடுவிக்கவும் தவறு செய்பவர்களை தண்டனைக்கு உள்ளாக்கி இறுதி தீர்ப்பு நாள்வரை அவர்களை வைத்திருக்கவும் தெரியும். 2 பேதுரு 2:9. நம்முடைய மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத்தீர்ப்பளித்தாலும், கடவுள் திருமுன் நம் உள்ளத்தை அவர் அமைதி படுத்த முடியும். 1 யோவான் 3:20. நம்மை பெயர் சொல்லி அழைத்த தேவன் நம்மை ஆசீர்வதிக்கவே விரும்புகிறார். நீங்கள் யாராயிருந்தாலும் கவலைப்படாமல், சோர்ந்து போகாமல் அவரை  உறுதியாய் பற்றிக்கொண்டு அவர் பாதம் பணியுங்கள்.
ஜெபம்:
அன்பின் இறைவா! எங்கள் தாயின் வயிற்றில் உருவாகும் முன்னரே எங்களை அறிந்து வைத்திருப்பதற்காய் உமக்கு கோடான கோடி நன்றி பலிகளை செலுத்துகிறோம். ஒரு சிறு குழந்தையைப்போல் எங்களை எண்ணி எங்கள் பாவத்தை மன்னித்து எங்களுக்கு
கிருபை அளித்திடும். எல்லா மகிமையும், மாட்சியும், வல்லமையும் உம் ஒருவருக்கே உண்டாகட்டும். ஆமென்!! அல்லேலூயா!!!

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.