Rosary FM - MyGreatMaster.com24 hrs online Rosary FM - Listen /Join to the rosary chain in Tamil track round the clock |
Rosary Prayers in English Rosary Prayers in Malayalam My Great Master Website Tamil Bible |
|||||||
|
Point cursor on beads to see prayers
|
செபமாலை செபிப்போம் முதல்வர்: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே, எல்லோரும்: ஆமென்! முதல்வர்: விசுவாசப் பிரமாணம் எல்லோரும்: பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம்வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன். அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன். அவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து கன்னிமரியிடமிருந்து பிறந்தார். போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம்வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார். பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன், பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன். அர்ச்சியஷ்டவர்களுடைய சமூதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கிறேன், பாவ பொறுத்தலை விசுவசிக்கிறேன். சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன், நித்திய சீவியத்தை விசுவசிக்கிறேன். - ஆமென்.
(அல்லது) பாடல்: வானமும் பூமியும் படைத்தவராம்...
(கிறிஸ்து கற்பித்த செபம், மங்கள வார்த்தை செபம் இவற்றின் முதல் பகுதியை முதல்வர் சொல்ல, பிற்பகுதியை அனைவரும் இணைந்து சொல்வோம்) பெரிய மணி: மெய்யான இறைவனும் மெய்யான மனிதனும் ஒன்றாயிருக்கிற இயேசு கற்பித்த செபத்தைச் சொல்லுவோம். பரலோகத்திலிருக்கிற ... மூன்று சிறிய மணிகள்: 1. பரம தந்தையாம் இறைவனுக்கு மகளாய் இருக்கிற புனித இறையன்னையே, எங்களிடம் விசுவாசம் பலனளிக்கும் படியாகத் திருமைந்தனை மன்றாடும். அருள் நிறைந்த ... 2. திருமகனாம் இறைவனுக்குத் தாயாய் இருக்கிற புனித இறையன்னையே, எங்களிடம் நம்பிக்கை வளரும்படியாக உம் திருமைந்தனை மன்றாடும். அருள் நிறைந்த ... 3. தூய ஆவியாராகிய இறைவனுக்கு பிரியமுள்ளவளாயிருக்கிற புனித இறையன்னையே, எங்களிடம் விசுவாசம் பலனளிக்கும் படியாகத் திருமைந்தனை மன்றாடும். அருள் நிறைந்த ... மூன்று சிறிய மணிகளுக்குப் பின் ( திருத்துவ துதி ):
பிதாவுக்கும், சுதனுக்கும், பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக. ஆதியிலே இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென். முதல்வர்: நாம் செபிக்கும் இந்த செபமாலையை ...... கருத்துக்காக ஒப்பு கொடுப்போம்.
மகிழ்ச்சி மறையுண்மைகள் : (திங்கள், திருவருகைக்கால ஞாயிறு) துயர மறையுண்மைகள் : (செவ்வாய், வெள்ளி, தவக்கால ஞாயிறு) மகிமை மறையுண்மைகள் : (புதன், சனி, ஞாயிறு) ஒளி மறையுண்மைகள் : (வியாழன்)
ஒவ்வொரு 10 அருள் நிறைக்கு பிறகு ...
ஓ! எங்கள் இயேசுவே! எங்கள் பாவங்களை மன்னியும், எங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றும், எல்லா ஆத்துமங்களையும், விசேசமாய் உமது இரக்கத்தின் உதவி யாருக்கு அதிக அவசியமோ, அவர்களை மோட்ச கரை சேர்த்தருளும்.
(ஒவ்வொரு மறையுண்மைகளுக்குப் பிறகு அல்லது 2-ம், 4-ம் மறையுண்மைகளுக்குப் பிறகு மாதா பாடல்களை அல்லது பொருத்தமான பாடல்களை பாடி செபிக்கலாம்)
|
|