Syluvayil Thongidum nam Yesu Kristhu

சிலுவையில் தொங்கிடும் நம் ஏசு கிறிஸ்து
மனமது நொறுங்கிடும் கல்வாரி  நிகழ்வு (2)
பாவிக்காய் ஜீவனை விட்டீரன்றோ
பதறுது இருதயம் ஐயோ நான் என்ன சொல்ல  (சிலுவையில்)
செத்தவர்  போலவே பாவத்தில் விழுந்தோம்
சிந்திய உம் இரத்தம் மீட்டிடவே (2)
ஆணிகளோ உம் அங்கத்தில் பாய
ஆடிடுதே என் ஊன் உயிர் சாய (2)
மீட்டிட வந்தவர் எம் பாவம் அகற்றும் (சிலுவையில்)
பிரிவினை போக்கிட பாவியை மீட்டிட
செய்த உம் அன்பிற்கு பாடுகளோ (2)
தேகம் அன்றோ வலியால் துடி துடிக்கும்
பாதகன் என் நிலையோ மனம் வருந்தும் (2)
மீட்டிட வந்தவா எம் பாவம் அகற்றும் (சிலுவையில்)

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.