Tagged: இன்றைய சிந்தனை

எருசலேம் போல எழும்பாதே!

லூக்கா 19:41-44 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். கடவுள் தேடி வருவதை மனிதர்கள் கண்டுகொள்வதில்லை. பல நேரங்களில் பலவிதமான அனுபவங்கள், மனிதர்கள் வழியாக கடவுள் நம்மை தேடி வருகிறார். பலவிதமான வேலைகளை செய்யும் நாம் கடவுள் தேடி வருவதை அவ்வளவு ஆர்வமாக கவனிப்பதில்லை. இன்றைய நற்செய்தி வாசகம் கடவுளின் குரலைக் கேட்காத எருசலேம் நகரைக் குறித்து நம் ஆண்டவர் இயேசு அழுததை பற்றி சொல்கிறது. ஏன் இயேசு அழுதார்? இயேசு அங்கு போதித்த போதனைகள் அனைத்தும் வெறுமையாய் போனது. ஆண்டவர் தேடி வந்ததை அவர்கள் உணரவில்லை. அமைதிக்கான, அன்பிற்கான வழியில் பயணிக்கவில்லை. ஆகவே இயேசு எருசலேமை நெருங்கி வந்ததும் அழுகிறார். நாம் எருசலேம் போல எழும்ப கூடாது....

பொறுப்புக்களில் பெருமகிழ்ச்சியடைவோம்!

லூக்கா 19:11-28 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். எல்லோருக்கும் கடவுள் பொறுப்பு கொடுத்திருக்கிறார். அந்த பொறுப்பை பெருமகிழ்வோடு கொண்டாடாடுபவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக சாதிப்பர். அந்த பொறுப்பை வோண்டா வெறுப்போடு பார்ப்பவர்கள் நிமிர்ந்து நிற்க முடியாமல் சரிந்து போவார்கள். நமக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பை பெருமகிழ்ச்சியோடு செய்து வாழ்க்கையை கொணடாடுவோம் வாருங்கள் என இனிய வரவேற்பு வழங்குகிறது இன்றைய நற்செய்தி வாசகம். பொறுப்பை வெறுப்போடு பார்க்காமல் மகிழ்வோடு பார்க்க வேண்டுமென்றால் இரண்டு செயல்கள் செய்வது மிகவும் சிறந்தது. 1. சிறப்பாக்குவேன் என்னிடம் கொடுக்கப்பட்ட எந்த பொறுப்பாக இருந்தாலும் சரி நான் அதை மிகவும் சிறப்பாக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மிடம் இருத்தல் வேண்டும். நேற்று செய்தததை விட இன்று இன்னும்...

இனி எப்போதும் சந்தோசமே!

லூக்கா 19:1-10 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். “சந்தோசம் சாத்தியம்” என்ற அறிவிப்போடு அழகாய் வருகிறது இன்றைய நாள் வாசகம். எந்த பொருளும், எந்த நபரும் தர முடியாத நிலையான, நிரந்தரமான சந்தோசத்தை சக்கேயு என்பவர் இயேசுவிடமிருந்து பெற்றுக்கொண்டதை இன்றைய நற்செய்தி வாசகம் விவரமாக விவரிக்கிறது. நம்மையும் அவரிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள கனிவோடு அழைக்கின்றது. கொஞ்ச நேர சந்தோசத்தை நாம் வைத்திருக்கும் பொருள், நம்மோடிருக்கும் நபர் தர முடியும். பின் அந்த சந்தோசம் கானல் நீராய் மறைந்து போகும். ஆனால் மறையாத, மங்காத, நிலையான சந்தோசத்தை நம் ஆண்டவர் இயேசு மட்டுமே தர முடியும். அதை சக்கேயு அடைய அவர் எடுத்த இரண்டு முயற்சிகள் மிகவும் இன்றியமையாதது....

சரியானவரை சரியாக கண்டுபிடி!

லூக்கா 18:35-43 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நாம் நம்முடைய வாழ்வின் பயணத்தில் பலவற்றை கண்டுபிடிக்கிறோம். புத்தகங்கள் வாசித்து அறிவை அங்கே கண்டுபிடிக்கிறோம். நண்பர்களோடு பழகி, உறவாடி நட்பை கண்டுபிடிக்கிறோம். அறிவை பயன்படுத்தி பலவிதமான கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கிறோம். இந்த கண்டுபிடிப்புகளில் எல்லாம் மேலானதும் மிகவும் உயர்வானதும் எது தெரியுமா? இயேசுவை கண்டுபிடிப்பது தான். இன்றைய நற்செய்தி வாசகத்தில் வருகின்ற பார்வையற்றவர் அதை சரியாகச் செய்தார். பார்வையில்லாமலிருந்தும் சரியான நபரை கண்டுபிடித்தார். பார்வையற்றவர் வாழ்க்கை நமக்கு இரண்டு விதத்தில் பாடமாக அமைகிறது. 1. எண்ணமெல்லாம் இயேசு பார்வையற்றவருக்கு எண்ணம் முழுவதும் இயேசுதான். இயேசு என்ற எண்ணம் மட்டுமே ஓடிக்கொண்டிருந்ததால் சரியாக அவர் கடந்து போவதை கண்டுபிடித்தார். இயேசுவைக் காண்பதற்கு...

விழிப்பாயிருப்போம்

”நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்” என்று இயேசு நமக்கு அழைப்புவிடுக்கின்றார். யாரிடமிருந்து ஏமாறக்கூடாது? எப்படி ஏமாற்றுகிறவர்களிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்வது? ஏமாறுகிறவர்களை தீர்ப்பிட முடியாதா? அவர்களின் தவறான செயல்களுக்கு, ஏமாந்து விட்டோம் என்று சொல்லி, தப்பிக்க முடியுமா?இன்றைக்கு தவறு செய்கிறவர்கள், நாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்று சொல்லி, தப்பிக்க நினைக்கிறார்கள். அல்லது வெகு எளிதாக தப்பித்துவிடுகிறார்கள். ஆனால், தவறு செய்கிறவர்கள் எந்த வழியிலும் தாங்கள் செய்த தவறான செயல்களுக்கான விளைவுகளை அனுபவித்தே ஆக வேண்டும் என்பதோடு, எப்போதும் மற்றவர்கள் தங்களை ஏமாற்றாமல் விழிப்பாயிருந்து, நமது ஆன்மாவைக் காத்துக்கொள்ள வேண்டும். இன்றைய உலகில் ஏராளமான இளைஞர்கள், தவறான வழிக்கு அழைத்துச்செல்லப்படுகிறார்கள். மற்றவர்களின் தவறான போதனைக்கு பலியாட்களாக மாறிவிடுகிறார்கள். குறிப்பாக, தீவிரவாதத்தை ஊக்குவிக்கக்கூடியவர்களின் நயவஞ்சகப்பேச்சுக்கு மயங்கி தங்களது வாழ்வைத் தொலைத்துவிடுகிறார்கள். அதற்கான தண்டனை வருகிறபோது, அவா்கள் தாங்கள் செய்த தவறை நினைத்து வருத்தமடைகிறார்கள். தவறான பேச்சுகளுக்கும், சிந்தனைகளுக்கும் ஆளாகாமல், நமது ஆன்மாவை காத்துக்கொள்ளக்கூடிய கடமை, ஒவ்வொரு மனிதனுக்கும்...