Tagged: இன்றைய சிந்தனை

தேவையானது ஒன்றே.. இது தெரியுமா?

லூக்கா 10:38-42 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நாம் பலவற்றை தேடி அதிவேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த உலகத்திற்கு நன்றி சொல்லி விடைபெறுவதற்குள் பலவற்றை அடைய வேண்டும், அனுபவிக்க வேண்டும் என்று மிகவும் பரபரப்பாக, படபடப்பாக அலைகிறோம். இப்படி அலைந்ததனால் அடைந்த இலாபம் என்ன? பெருநஷ்டம் தான் மிஞ்சியது. பெரும்கவலை தான் கிடைத்தது. வாழ்க்கையில் இலாபம் கிடைக்க வேண்டுமென்றால் ஒன்றே ஒன்றே போதும் என்கிறார் இன்றைய நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. பொறுமை இருந்தால் போதும் வாழ்க்கையில் இலாபம் பொங்கி பொங்கி வரும். கலங்க வேண்டியதில்லை. இந்த பொறுமை நமக்கு பல நேரங்களில் இருப்பதில்லை. பொறுமையே நம் வாழ்விற்கு பெருமையைக் கொண்டு வருகிறது. பொறுமையை இரண்டு...

நல்ல சமாரியன் சாத்தியமா?

லூக்கா 10:25-37 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். ஆண்டவர் இயேசு எல்லாரையும் நல்ல சமாரியனாக மாற அழைக்கிறார். ஆனால் அனைவரும் அவரின் விருப்பத்தை நிறைவேற்றுவதில்லை. இன்றைய நற்செய்தியில் வருகின்ற உவமையில் மூன்று நபர்கள் வருகின்றார்கள். ஆனால் அதில் ஒருவர் மட்டுமே நல்ல சமாரியனாக செயல்படுகிறார். ஒருவர் மாறும் போதே இயேசுவுக்கு இவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுகிறது என்றால் பலர் மாறும்போது எப்படி இருக்கும். மாறலாமா? மாறுவோம் என்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். நல்ல சமாரியனாக மாற இரண்டு முயற்சிகள் முக்கியம். 1. உடனிருத்தல் நவீன காலத்தில் உடனிருத்தல் என்பது குறைந்து வருகிறது. இந்த சூழலில் நாம் இந்த முயற்சியை எடுக்க வேண்டும். முதலில் நம் இல்லத்தில் இருப்பவர்களின் இன்ப...

திருமண வாழ்க்கை எப்படி போகுது?

மாற்கு 10:2-16 இறையேசுவில் இனியவா்களே! பொதுக்காலம் 27ம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். கட்டை விரலில் அடிபட்ட முதியவர் ஒருவர் தையலைப் பிரிக்க மருத்துவமனைக்கு வந்தார். நேரம் ஆக ஆக பதட்டமடைந்து கொண்டிருந்தார். “நான் எட்டரை மணிக்கு செல்ல வேண்டும்’ என்று தவியாய் தவித்தார். மருத்துவர் அவர் முறை வந்ததும் பக்குவமாகத் தையலை நீக்கினார். அவருக்கு வலிக்கக்கூடாது என்று பேசிக்கொண்டே தையலைப் பிரித்த அந்த மருத்துவர், “ஏன் இவ்வளவு பதற்றப்படுகிறீர்கள்?’ என்று கேட்டார். அந்த முதியவர், “நான் மருத்துவமனையில் இருக்கும் என் மனைவியோடு சிற்றுண்டி அருந்த சரியாக எட்டரை மணிக்கச் செல்லவேண்டும்’ என்று சொன்னார். “உங்கள் மனைவிக்கு என்ன ஆயிற்று’ என்று அக்கறையாக விசாரித்தார் மருத்துவர். “அவள் கொஞ்ச நாட்களாகவே அல்ஜீமர் என்கிற ஞாபகமறதி...

உங்கள் பெயர் இருக்கிறதா?

லூக்கா 10:17-24 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நமது பெயர் திருமண அட்டையில் வர வேண்டும், திருவிழா அழைப்பிதழில் வர வேண்டும் மற்றும் மேடையில் நம் பெயர் உச்சரிக்கப்பட வேண்டும் என்று நாம் ஆசைப்படுவது உண்டு. அதுவெல்லாம் உயர்வல்ல. நம் பெயர் விண்ணத்தில் இருக்கிறதா? அதுதான் மிக முக்கியம். இன்றைய நற்செய்தி வாசகம் விண்ணகத்தில் உங்கள் பெயர் இருக்கிறதா? என்பதை பரிசோதித்துப் பாருங்கள். பெயர் இல்லையென்றால் எழுத முயற்சி எடுங்கள் என நம்மோடு பதமாக பேசுகிறது. மண்ணகத்தில் நாம் செய்யும் சிறப்புமிக்க செயல்கள் தான் விண்ணத்தில் நம் பெயர்கள் எழுதப்பட மிகச் சிறந்த காரணிகளாக உள்ளன. மண்ணகத்தில் நாம் இரண்டு செயல்களின் மீது கவனம் செலுத்தினால் அதுதான்...

திருந்த மறுத்தால் பின்விளைவுகள் அதிகம்

லூக்கா 10:13-16 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். மனிதர்கள் உடலிலும் மனதிலும் ஆரோக்கியமாக வாழ வேண்டும். நம் பாவங்கள் பல நேரங்களில் அந்த ஆரோக்கியமான சூழ்நிலையை வழங்குவதில்லை. அந்த நேரங்களில் எல்லாம் நாம் வலுவற்றவர்களாக இருக்கிறோம். அப்படி வலுவற்றவர்களாய் இருக்கும் நமக்கு இன்றைய நற்செய்தி வாசகம் வலு கொடுப்பதாய் வருகிறது. பாவங்களிலிருந்து திருந்த அழைக்கிறது. திருந்தவில்லை என்றால் பின்விளைவுகள் அதிகம் எனவும் சொல்கிறது. ஆண்டவர் இயேசு திருந்த மறுத்த நகரங்களுக்கான பின்விளைவுகள் என்னென்ன என்பதை விளக்குகிறார். ஏன் உங்களுக்கு நல்லது செய்தேன்? என்று கடவுள் மனவருத்தம்படும் அளவுக்கு பாவம் கொண்டு செல்கிறது. திருந்தாவிடில் பின்விளைவுகள் இரண்டு. 1. சினம் கடவுள் பல சூழ்நிலைகளை நமக்கு அமைத்து தருகிறார்....