Tagged: இன்றைய சிந்தனை

இயேசு அருளும் வாக்குறுதி

2தீமோத்தேயு 1: 1 – 3, 6 – 12 இயேசு அருளும் வாக்குறுதி ”இயேசு அருளும் வாக்குறுதிக்கு ஏற்ப, அவருடைய திருத்தூதனான பவுல்” என்று, பவுல் தன்னுடைய திருமுகத்தைத் தொடங்குகிறார். இங்கு வாக்குறுதி என்கிற வார்த்தை நம்முடைய கவனத்தை ஈர்ப்பதாக இருக்கிறது. இயேசு அருளும் வாக்குறுதி என்று பவுல் எதனைக் குறிப்பிடுகிறார்? வழக்கமான பவுலின் திருமுகத்திலிருந்து, இந்த கடிதம் சற்று மாறுபட்ட தொனியில், அதிலும் குறிப்பாக, இந்த வார்த்தையை பவுல் பயன்படுத்தியிருப்பதன் நோக்கம் புரிவதற்கு சற்று கடினமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால், விவிலியத்தில் அதற்கான விளக்கங்கள் இடம்பெறவில்லை. இதனுடைய பொருள் என்ன, என்பதை சற்று ஆழமாகச் சிந்தித்துப் பார்ப்போம். உரோமை நகரில் பவுல் சிறையில் அடைக்கப்பட்ட இடம் என்று காட்டப்படுகிற இடத்தை நாம் பார்த்தோம் என்றால், பவுல் சொல்ல வருகிற அர்த்தத்தை ஓரளவு நம்மால் புரிந்து கொள்ள முடியும். அவர் சிறையில் அடைக்கப்பட்ட இடம், குகை போன்ற பாதாள அறை. அந்த...

கடவுளுக்கான காணிக்கையை செலுத்தி விட்டீர்களா?

மாற்கு12:13-17 நம் வாழ்க்கையை திறனாய்வு செய்து பார்க்கின்ற போது ஒரு உண்மை புலனாகிறது. அந்த உண்மை என்னவெனில் கடவுள் நமக்கு கொடுப்பதில் கணக்குப் பார்ப்பதில்லை. எப்படி இருந்த நான் இப்படி இருக்கிறேன்? இந்த கேள்வியை கேட்டுப் பார்த்தீர்களா? நம்முடைய உடல் ஆரோக்கியம், பொருளாதாரம், கல்வி மற்றும் வாழ்கைத்தரம் இவைகளில் எவ்வளவோ வளர்ந்திருக்கிறோம். இன்னும் கடவுள் நம்மை விசேசமாய் உயர்த்தப் போகிறார் என்பதை எல்லாம் நினைக்கும் போது என் ஆன்மா ஆண்டவரை ஏற்றிப் போற்றுகிறது என்று பாடிய அன்னை மரியாளோடு சேர்ந்து பாடத் தோன்றுகிறது. இத்தனையையும் இனிதே இன்முகத்தோடு குறித்த நேரத்தில் அருவியாய் பொழியும் ஆண்டவருக்கு நான் கொடுப்பது என்ன? என்ற கேள்வியைக் கேட்க சொல்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கடவுளுக்கு உரியதை கடவுளுக்கு கொடுங்கள் என்கிறார். ஒரு சிலருக்கு கடவுளுக்கு ஏன் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி இருக்கிறது. இதோ உங்களுக்கான இரண்டு பதில்கள்: 1)...

பாவம் வளர வளர அவமானமும் வளரும்

அத்தொழிலாளர்களை ஒழித்துவிட்டுத் திராட்சைத் தோட்டத்தை வேறு ஆள்களிடம் ஒப்படைப்பார் (மாற்12:9) மனிதர்களாகிய நாம் பாவம் செய்வது இயல்பு. பாவத்திலிருந்து திரும்புவது இறை இயல்பு. தந்தையே நான் உமக்கும், எனக்கும் என் அயலாருக்கும் எதிராக பாவம் செய்தேன். இனி இந்த பாவத்தை செய்யமாட்டேன் என்ற வாக்குறுதி தான் வானளவு நம்மை உயர்த்தும். நம்மை பரிசோதித்து பார்த்து பாதையை திருத்தாத பயணம் நம்மை பாதாளம் வரை தாழ்த்தும். இன்றைய நற்செய்தி வாசகத்தில் திராட்சைத் தோட்டத் தொழிலாளர்கள் பாவத்திற்கு மேல் பாவங்களை தங்கள் மேல் குவித்து அவமானங்களை அள்ளுகின்றனர். முதல் பாவம் : ஒரு பணியாளரை நையப்புடைத்தது இரண்டாம் பாவம் : வோறொரு பணியாளரை தலையில் அடித்து அவமதித்தது மூன்றாம் பாவம் : மற்றொரு பணியாளரை கொலை செய்தது நான்காம் பாவாம் : சிலரை நையப்புடைத்தது, சிலரை கொன்றது ஐந்தாம் பாவம் : திராட்சைத் தோட்ட உரிமையாளரின் அன்பு மகனை கொன்றது எத்தனை பாவங்கள் பாருங்கள்....

வாக்குறுதிகள்

விடுதலைப்பயணம் 24: 3 – 8 இஸ்ரயேல் மக்களோடு கடவுள் மோசே வழியாக பேசுகிறார். தன்னுடைய வார்த்தைகளை மோசேக்கு அறிவித்து, அவர் வழியாக இஸ்ரயேல் மக்களுக்கு அறிவிக்கிறார். அவருடைய வார்த்தைகளைக் கேட்ட இஸ்ரயேல் தலைவர்கள் மற்றும் மக்கள் அனைவரும், ஒரே குரலாக, ”ஆண்டவர் கூறிய வார்த்தைகள் அனைத்தையும் நாங்கள் செயல்படுத்துவோம்” என்று பதில்மொழி தருகின்றனர். இஸ்ரயேல் மக்கள் கடவுள் மீது வைத்திருந்த பக்தி, நம்பிக்கை இந்த பகுதியில் வெளிப்படுவதை நாம் பார்க்கிறோம். அவர்கள் வெறும் வார்த்தைகளால் மட்டும் அதை சொல்லவில்லை. மாறாக, பலிபீடங்களை எழுப்பி, அதில் கடவுளுக்கு பலி செலுத்தி, தங்களது வாக்குறுதிகளைக் கொடுக்கின்றனர். பலி செலுத்துவது என்பது வாக்குறுதியின் அடையாளமாக இருக்கிறது. பொதுவாக, பலியிடுதலில் விலங்குகள் பலியிடப்படுகின்றன. அப்படி பலியிடப்படுகிறபோது, வாக்குறுதி கொடுக்கிறவர்கள் அந்த பலிபீடத்தைச் சுற்றி வருகிறார்கள். எதற்காக? அதனுடைய பொருள் இதுதான்: நாம் இருவரும் இங்கே வாக்குறுதி கொடுக்கிறோம். ஒருவேளை, யாராவது வாக்குறுதியை மீறினால், இந்த விலங்குகள்...

தூக்கி எறிபவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்

மாற்கு 11: 27-33 ஒரு அருமையான பொன்வரி இப்படி ஆரம்பமாகிறது, ”தூக்கி எறிபவர்களுக்கு நன்றி சொல்லுங்கள். ஏனெனில் அவர்களே உங்களை முளைக்கவைப்பர்கள்”. நம்முடைய மனது நம்மை தூக்கி எறிபவர்களை தூரே வைக்க வேண்டும் என துடியாய்த் துடிக்கிறது. அவர்களை விரோதியாய் பார்க்கிறது. பகைமையை போகும் இடமெல்லாம் வளர்க்கிறது. இதனால் பல பகைவர்கள் நம் வாழ்க்கையின் வட்டத்திற்குள் வருகிறார்கள். இதனால் வாழ்க்கையின் வசந்தக்காற்று நம் பக்கம் வீசாமலேயே போகிறது. இப்படி வாழ்க்கையை களிக்கிற நமக்கு இன்றைய நற்செய்தி வாசகத்தில் கனிவான பாடத்தை புகட்டுகிறார் நம் ஆண்டவர் இயேசு. தலைமைக்குருக்கள், மறைநூல் அறிஞர்கள், மூப்பர்கள் ஆகியோர் இயேசுவை தங்கள் அதிகாரத்தால் விரோதியாக பார்த்தனர். பல தொல்லைகளை கொடுத்துக்கொண்டே இருந்தனர். விரோதியாய் பார்த்து வாழ்கையை அனுபவிக்காமலேயே இந்த உலகத்தை விட்டு காணாமல் போய்விட்டனர். ஆனால் இயேசு விரோதியாய் வந்தவர்களை தன் கனிவால் உருக வைத்தார். தன் அன்புக் கலந்த அதிகாரத்தால் தன் ஊழியர் ஆக்கினார். தூக்கி...