Tagged: இன்றைய சிந்தனை

ஜெபிக்காத நாட்கள் வீணான நாட்கள்

மாற்கு 11: 11-26 வாழ்க்கையில் எல்லா மனிதர்களும் எல்லா நாட்களையும் பலன்தரும் வகையில் வாழ்வதில்லை. பல நாட்கள் வீணான நாட்களாகவே கடந்து போகின்றன. வீணான நாட்கள் அனைத்தும் குற்றயுணர்வை நமக்குள்ளே ஏற்படுத்தி நம்மை குத்துகின்றன. வீணான நாட்கள் அனைத்தும் நம்மை பார்த்து முறைத்துப் பாத்ததுண்டு. ஏன் இப்படி வீணாக்கிவிட்டாய் என்று. எல்லா நாட்களையும் பலன் கொடுக்கும் வகையில் வாழ வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உண்டு. அந்த நம் ஆசை இன்றைய நற்செய்தி வாசகத்திலே அடங்கிப்போகிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் நம் ஆண்டவர் இயேசு ”நீங்கள் இறைவனிம் வேண்டும்போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ அவற்றைப் பெற்றுவிட்டீர்கள் என நம்புங்கள், நீங்கள் கேட்டபடியே நடக்கும்(மத்11:24) என்கிறார். நாம் ஒவ்வொரு நாளும் இறைவனை நோக்கி ஜெபித்து விட்டு நாளைத் தொடங்குகிற போது அந்த நாள் பலன்தரும் நாளாகவும் குற்றயுணா்வை போக்குகிற நாளாகவும் நம் குறிக்கோளை விரட்டி பிடிக்கிற நாளாகவும் அமைகிறது. ஆசையை ஜெபிப்பதில் காட்டுவோம். ஆர்வத்தை...

ஆண்டவரே என் ஆற்றல்

எசாயா 12: 2 – 3, 4, 5 – 6 ”ஆண்டவரே என் ஆற்றல்” ஒவ்வொருநாளும் நாம் உணவு உண்கிறோம். அந்த உணவு தான் நாம் இயங்குவதற்கு, செயல்களைச் செய்வதற்கு ஆற்றலைத்தருகிறது. ஒரு வாகனம் இயங்க வேண்டுமென்றால், அதில் இருக்கிற எரிபொருள் எரிக்கப்பட்டு, அதிலிருந்து பெறப்படும் ஆற்றலால் வாகனம் இயங்குகிறது. ஆக, ஆற்றல் என்பது நம்மை இயக்குவதாக அமைகிறது. அது உணவாக இருக்கலாம், எரிபொருளாக இருக்கலாம். எல்லாமே இயக்கத்திற்கான அடிப்படைக் காரணமாக இருக்கிறது. இங்கே, ஆண்டவர் ஆசிரியரின் ஆற்றலாக இருக்கிறார் என்பதையும், ஆண்டவர் நம் ஆற்றலாக இருக்க வேண்டும் என்கிற செய்தியும் சொல்லப்படுகிறது. ஆண்டவர் எப்படி ஒருவரின் ஆற்றலாக இருக்க முடியும்? இந்த உலகத்தில் அநீதி ஏராளமாக நடக்கிறது. அந்த அநீதியை பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொண்டு, சமரசம் செய்யக்கூடியவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், ஒரு சிலர் அதனை எதிர்க்கிறார்கள். தங்களால் இயன்ற மட்டும் எதிர்க்கிறார்கள். அதனால் பலவிதமான எதிர்ப்பையும் நம்பாதிக்கிறார்கள். ஒரு...

இயேசுவின் கடைசிப்பயணம்

இயேசு தனது கடைசிப்பயணத்தை மேற்கொள்வதற்காக, யெருசலேமை நோக்கி தனது சீடர்களுடன் சென்று கொண்டிருக்கிறார். தனது கடைசிப்பயணம் இதுதான் என்பது, இயேசுவுக்குத் தெளிவாகத்தெரிகிறது. ஏனென்றால், இயேசு இந்த பயணத்தை பலமுறை தவிர்த்திருக்கிறார். சிலசமங்களில் வடக்கிற்கும், செசரியா, பிலிப்பு பகுதிக்கும், கலிலேயாவிற்குமாகச்சென்று .கலிலேயப்பயணத்தைத் தவிர்த்த இயேசு, இப்போது, யெருசலேம் செல்வதற்கு ஆயத்தமாகிறார். தனது கடைசி பயணத்திற்கு தயாராக இருப்பதை, அவரது பேச்சின் உறுதி நமக்கு அறிவுறுத்துகிறது. இயேசு தனது சீடர்களுக்கு முன்னால் சென்று கொண்டிருப்பதாக நற்செய்தியாளர் எழுதுகிறார். எதற்காக அவர் சீடர்களோடு செல்லவில்லை. சீடர்களுக்கு முன்னால் தனிமையாக ஏன் செல்கிறார்? சீடர்களும் அவரிடத்தில் கேள்வி கேட்கவோ, நெருங்கவோ தயங்குகிறார்கள். இயேசுவின் தனிமைக்குக் காரணம், அவர் தனது பாடுகளை ஏற்றுக்கொண்டதற்காக அடையாளம். தனது பாடுகளை எண்ணிப்பார்ப்பதற்கான தருணம். சிலசமயங்களில் நமக்கு தனிமை தேவை. நம்மை உறுதிப்படுத்திக்கொள்ள, வரக்கூடிய துன்பங்களை ஏற்றுக்கொள்ள தனிமை தேவை. ஒருவேளை, சீடர்களின் உடனிருப்பு, இயேசுவின் கடைசிப்பயணத்திற்கு தடைக்கல்லாக இருந்திருக்கலாம். எனவேதான், தனது...

தற்பெருமை இல்லா அழைத்தல் வாழ்வு

இந்த உலக வாழ்வை வாழ்ந்து முடிக்கின்ற தருவாயில் பெரும்பாலான மனிதர்கள் கேட்கக்கூடிய கேள்வி “எனது வாழ்வின் பொருள் என்ன?” என்பதுதான். இந்த கேள்வி நிச்சயம் அழைக்கப்பட்டவர்களின் வாழ்விலும் எதிரொலிக்கக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கிறது. கடவுளுக்காக, இந்த உலக இன்பங்களை மறந்து, இந்த உலகம் சார்ந்து வாழாமல், தங்கள் வாழ்வை இறைவனுக்காக அர்ப்பணித்த, இறைவனின் ஊழியர்களுக்கு என்ன தான் கைம்மாறு? என்பது பேதுருவின் கேள்வி. நிச்சயம், இயேசுவைப் பின்தொடர்வதற்கு வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய ஆசீர்வாதம். அப்படியிருக்கிறபோது, யாரும் நிச்சயம் கைம்மாறு என்று எதிர்பார்ப்பது இல்லை. இயேசுவின் ஊழியர்களாக இருப்பதே, நிறைவான செயல்தான். இருந்தாலும், மனித கண்ணோட்டத்தில் பேதுருவின் கேள்விக்கு இயேசு அருமையான செய்தியைத்தருகிறார். இயேசுவின் ஊழியர்களாக இருக்கிறோம் என்கிற தற்பெருமை, நம்மை தவறான இடத்திற்கு அழைத்துச் சென்றுவிடும், என்பது இயேசு நமக்கு விடுக்கும் எச்சரிக்கையாக இருக்கிறது. பேதுரு இந்த மனநிலையோடு தான் கேட்கிறார். நான் இயேசுவின் சீடன். எனவே, எனக்கென்று இந்த சமூகத்தில் ஒரு...

அன்பு என்னும் அருமருந்து

1பேதுரு 1: 3 – 9 அன்பு என்னும் அருமருந்து இயேசுவின் உயிர்ப்பிற்கு பிறகு ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப் பிறகு பேதுரு தன்னுடைய திருமுகத்தை எழுதுகிறார். வாழ்க்கையின் பலநிலைகளில் துன்பப்பட்டுக்கொண்டிருந்த ஆசியா மைனர் பகுதியைச் சார்ந்த கிறிஸ்தவர்களுக்கு இந்த கடிதத்தை எழுதுகிறார். முரட்டுக்குணம் படைத்த தலைவர்களிடம் பணிவிடை செய்தவர்கள் (2: 18), திருமணமான பெண்கள் (3: 1), அடுத்தவர்களின் பரிகசிப்பிற்கு உள்ளானவர்கள் (4:14) என, குறிப்பிட்ட பிரச்சனைகளைச் சந்திக்கிறவர்களுக்கு இதனை எழுதுகிறார். அவர்கள் வாழ்கிற சூழ்நிலை, கடுமையான, வெகு எளிதாக சோர்ந்து போகிற சூழ்நிலை. அந்த சூழ்நிலையில், அவர்களுக்கான மருந்து, எதுவாக இருக்க முடியும்? என்பதைச் சிந்தித்து, அந்த மருந்தை அவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வாகக் கொடுக்கிறார். அன்பு தான் அவர் கொடுக்கிற அருமருந்து. ஒருவர் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும், அன்பு அவருக்கு அருமருந்தாக அமையும் என்பது அவருடைய தீராத நம்பிக்கை. எதற்காக அன்பை அருமருந்தாகக் கொடுக்கிறார்? பொதுவாக, கடுமையான சூழ்நிலையில் நாம்...