Tagged: இன்றைய சிந்தனை

நம்பிக்கையுள்ள செபம்

கடவுள் நம் அனைவரையும் அவருடைய வாரிசுகளாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார். தந்தையின் பெயரால் நாம் கேட்கும் அனைத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் என்ற சிறப்பு சலுகையை நமக்குத் தந்திருக்கிறார். செபத்தைப்பற்றிய ஆழமான செய்தி இங்கே நமக்குத்தரப்படுகிறது. செபம் என்பது நம்பிக்கையின் வடிவமாக இருக்க வேண்டும். யாக்கோபு 5: 15 ”நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டும்போது நோயுற்றவர் குணமாவார்”. நம்பிக்கையிழந்த செபம் வலுவுள்ளதாக இருக்க முடியாது. வலிமையோடு நாம் செபிக்க வேண்டுமென்றால், கடவுளின் வல்லமையில் நம்பிக்கை வைத்து நாம் செபிக்க வேண்டும். செபிக்கிறபோது இயேசுவின் பெயரால் செபிக்க வேண்டும். இயேசுவின் பெயரால் செபித்தல் என்பது, இயேசு விரும்பாததை நாம் செபிக்கக்கூடாது என்று அர்த்தம் கொள்ளலாம். விலக்கப்பட வேண்டியதற்காக, தவிர்க்கப்பட வேண்டியதற்காக நாம் செபிக்கக்கூடாது. நமது சுய விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக செபிக்கக்கூடாது. நமது சுயவிருப்பம் மற்றவர்களுக்குத்தீங்கிழைத்தால் அது செபமாக இருக்க முடியாது. அந்த செபம் ஏற்கப்பட மாட்டாது. அதனால் தான் எல்லா செபத்தின் முடிவிலும், தந்தையின் திருவுளத்திற்கு ஏற்ப நடக்க...

அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!

திருப்பாடல் 100: 1 – 2, 3, 5 ”அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்! திருப்பாடல் 100 சமய வழிபாடுகளில் அடிக்கடி தியானிக்கப்படக்கூடிய ஒரு பாடல். யூதர்கள் எப்போதெல்லாம் கடவுளுக்கு நன்றிக் காணிக்கை செலுத்தினார்களோ, அப்போதெல்லாம் இந்த பாடலையும் பாடி கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்கள். இந்த பாடல் கடவுளின் மகிமையை, மகத்துவத்தை, இனிமையை, சுவையை எடுத்துரைக்கக்கூடிய பாடல். அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள் என்று ஆசிரியர் கூறுகிறார். அனைத்துலகோரே என்று சொல்கிறபோது, அது இஸ்ரயேல் மக்களை மட்டும் குறிக்கக்கூடிய வார்த்தையல்ல. மாறாக, இந்த உலகத்தில் இருக்கிற அனைத்து மக்களும் கடவுளைப் புகழ வேண்டும் என்று குறிப்பிடுகிறது. அந்த புகழ்ச்சி சாதாரண புகழ்ச்சியாக இருக்கக்கூடாது. அது ஓர் ஆர்ப்பரிப்பாக இருக்க வேண்டும். ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள் என்றால் என்ன? திருப்பாடல் 98 சொல்கிறது: யாழினை மீட்டி வாழ்த்துங்கள். இனிய குரலில் வாழ்த்துங்கள். எக்காளம் முழங்கி, கொம்பினை ஊதி, ஆர்ப்பரித்துப் பாடுங்கள். ஆர்ப்பரிப்பு என்பது...

என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது

திருப்பாடல் 57: 7 – 8, 9 – 11 ”என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது” இந்த திருப்பாடல் ஒரு வித்தியாசியமான திருப்பாடல். தாவீது அரசரின் வாழ்க்கையில் மிகப்பெரிய நெருக்கடி. ஒரு கலக்கமான நேரம். அது மட்டுமல்ல சோதனையான நேரமும் கூட. கலக்கத்தையும், சோதனையையும் ஒரே நேரத்தில் அவர் வெற்றி கொள்ள வேண்டும். அந்த வேதனையான நேரத்தில் கடவுள் மீது நம்பிக்கை கொண்டு, அவரது உதவிக்காக இந்த பாடலைப் பாடுகிறார். கடவுள் மிக விரைந்து தனக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற வேண்டுதல் தான், இந்த திருப்பாடல். தாவீது அரசர் உண்மையிலேயே கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்பதற்கு பலவிதமான எடுத்துக்காட்டுக்களை நாம் பார்க்கலாம். தாவீது அரசர் மிகப்பெரிய பலவீனர்தான். வெகு எளிதாக தவறு செய்யக்கூடியவர் தான். கடவுள் அவருக்குச் செய்திருக்கிற செயல்களையெல்லாம், மிக விரைவாக மறந்து விடக்கூடியவர் தான். ஆனாலும், எல்லாவிதமான சோதனை, இக்கட்டுக்கள் நிறைந்த தருணங்களில் அவர், கடவுளின் உதவியையும், ஆலோசனையையும்...

படைப்புக்களின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகிறது

திருப்பாடல் 19: 2 – 3, 4 – 5 ”படைப்புக்களின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகிறது” கடவுள் இருக்கிறாரா? எங்கே இருக்கிறார்? கடவுள் உண்மையிலேயே இருக்கிறார் என்பதற்கான ஆதாரங்கள் என்ன? இவை போன்ற கேள்விகள், மனித உள்ளத்தில் அடிக்கடி எழக்கூடியவை. ஏனெனில், மனிதர்களாகிய நாம் எப்போதுமே, காரணங்களை, விளக்கங்களைத் தேடுகிறவர்களாக இருக்கிறோம். இன்றைய திருப்பாடல் கடவுளின் இருப்பை, அவருடைய மாட்சிமையை, மகிமையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. இந்த திருப்பாடலில் வரக்கூடிய முதல் நான்கு இறைவார்த்தைகளுமே, கடவுளின் வல்லமையை பறைசாற்றுவதாக அமைந்திருக்கிறது. நாம் காலை விழித்தெழுவதிலிருந்து பார்க்கக்கூடிய எல்லாவற்றிலும், கடவுளின் மகிமையைக் கண்டுனரலாம். காலையில் எழக்கூடிய சூரியன், எதையோ தேடி ஓடிக்கொண்டிருக்கிற மேகக்கூட்டங்கள், இரவு, பகல் மாற்றம் – இவையனைத்துமே தங்களைப் படைத்தவர் ஒருவர் இருக்கின்றார் என்பதை, வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. நாளை சூரியன் தோன்றுமா? தோன்றும் என்கிற நம்பிக்கையை, இயற்கை நமக்கு தந்துகொண்டே இருக்கிறது. அவையனைத்துமே கடவுளின் வேலைப்பாடுகள் தான். கடவுளை நாம்...

அகமகிழ்ந்து ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்

திருப்பாடல் 122: 1 – 2, 4 – 5 ”அகமகிழ்ந்து ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்” யெருசலேம் நகரத்தின் முக்கியத்துவத்தை தாவீது அரசர் காலத்தில் தான், மக்கள் அதிகமாக உணர்ந்தனர். அதற்கு தாவீதின் முயற்சியும் ஒரு காரணம், யெருசலேம் நகரை, கடவுளின் நகரமாக மாற்றியதில், தாவீதின் பங்கு மிக அதிகம் உண்டு என்பதில், மாற்றுக்கருத்து இல்லை. மக்களை ஒன்றிணைக்க, யெருசலேம் நகரத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் உணர வேண்டும் என்பதில், அவர் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இந்த திருப்பாடல் இந்த பிண்ணனியில் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். இஸ்ரயேல் மக்கள் பல திருவிழாக்களை கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த திருவிழாக்களை எருசலேமில் கொண்டாடினர். திருவிழாக்களைக் கொண்டாடுவதற்காக அவர்கள் எருசலேம் வருகிறபோது பாடுகிற பாடலாக இந்த பாடல் அமைந்திருக்கிறது. எருசலேம் என்பதை, நம்முடைய புரிதலில் விண்ணக வீடாக எடுத்துக்கொள்ளலாம். விண்ணகம் தான் நமது நிலையான இல்லம். அந்த விண்ணக இல்லத்தில் நுழைவதைத்தான் நாம் நமது வாழ்வின் இலக்காகக்...