Tagged: இன்றைய சிந்தனை

தலைநிமிர்ந்து நில்லுங்கள், உங்கள் மீட்பு நெருங்கி வருகிறது

திருப்பாடல் 25: 4 – 5, 8 – 9, 10 & 14 யார் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும்? யாருக்கு மீட்பு நெருங்கி வருகிறது? உலகம் எப்படி இருந்தாலும், இந்த உலகப்போக்கிலே வாழாமல், கடவுள் பயத்தோடு ஒரு சில மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை இந்த உலகம் பரிகாசம் செய்கிறது. இப்படி விழுமியங்களோடு வாழக்கூடிய இவர்கள், வாழ்க்கையில் என்ன சாதித்துவிட்டார்கள்? என்கிற ஏளனம் அவர்களது பேச்சில் தெரிகிறது. இப்படி மற்றவர்கள், இந்த உலகப்போக்கின்படி வாழ்கிறவர்கள் பரிகசிக்கிறவர்களை, தலைநிமிர்ந்து நிற்கும்படியும், அவர்களுக்கு மீட்பு அண்மையில் இருக்கிறது என்றும், திருப்பாடல் ஆசிரியர் தெரிவிக்கிறார். ஆண்டவருடைய எல்லா நலன்களையும் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால், நம்பிக்கையில் நிலைத்திருக்க வேண்டும் என்பதுதான் இந்த திருப்பாடலின்(திருப்பாடல் 25: 4 – 5, 8 – 9, 10 & 14) வரிகளில் வெளிப்படுகிறது. இன்றைக்கு பலர் நம்பிக்கையைப் பெறுகின்றனர். ஆனால், அந்த நம்பிக்கையில் நிலைத்திருக்கிறார்களா? என்றால், அது மிகப்பெரிய கேள்விக்குறியாகத்தான்...

என் மீட்பராம் ஆண்டவரில் என் இதயம் அக்களிக்கின்றது

எல்கானாவுக்கு இரண்டு மனைவியர். அன்னா, பெனின்னா. அன்னாவுக்கு குழந்தை கிடையாது. எனவே, பெனின்னா அன்னாவை இகழ்ச்சியோடு நோக்கினார். பழைய ஏற்பாட்டில், குழந்தை இல்லாத நிலை, சாபமாகக் கருதப்பட்டது. அன்னா தன்னுடைய உள்ளக்கிடக்கையை ஆண்டவரிடத்தில் கொட்டித்தீர்த்தார். தன்னுடைய இகழ்ச்சியைப் போக்குமாறு வேண்டுகிறார். அவருடைய நம்பிக்கை வெற்றி பெறுகிறது. ஆண்டவர் அவர் மீது அருள்கூர்ந்தார். அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறார். தன்னுடைய இழிநிலையைப் போக்கிய அன்னாவின் மனம், மகிழ்ச்சியடைகிறது. அந்த மகிழ்ச்சியின் நிறைவில் பாடுகிற பாடல் தான், இன்றைய திருப்பாடல் (சாமுவேல் 2: 1, 4 – 5, 6 – 7, 8). அன்னாவின் இந்த பாடல், எல்லாவற்றிற்கும் இறைவன் தான் காரணராகயிருக்கிறார் என்று, அவர் வைத்திருக்கிற நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. ஆண்டவரால் எல்லாம் முடியும் என்பதுதான் இந்த பாடலின் சிந்தனையாக இருக்கிறது. எனவே தான், இந்த பாடல், புதிய ஏற்பாட்டில் அன்னை மரியாளால் பாடப்படுகிறது. ஆண்டவர் நீதியுள்ளவராக இருக்கிறார். அவர் விரும்பினால்...

எலிசபெத்தம்மாளின் தாழ்ச்சி

”என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?” என்று எலிசபெத்தம்மாள் அன்னை கன்னிமரியாளைப் பற்றி சொல்கிறார். இதே தொணியில் நாம் இயேசுவின் வாழ்வில் செய்த ஒரு புதுமையிலும் பார்க்கிறோம். நூற்றுவர் தலைவன் தன்னுடைய பிள்ளைக்காக மன்றாடுகிறபோது, ”நீர் என் இல்லத்திற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன்” என்று சொல்கிறார். இந்த இரண்டு வார்த்தைகளும் கிட்டத்தட்ட ஒரே தொணியில் உதிர்க்கப்பட்ட வார்த்தைகள். இந்த இரண்டு வார்த்தைகளும் நமக்கு ஒரே செய்தியைத்தான் தருகின்றன. எலிசபெத்தம்மாள் அன்னை மரியாளை விட வயதில் மூத்தவர். குழந்தை இல்லாமல் இருந்து, இப்போது குழந்தை பாக்கியத்தைப் பெற்றிருக்கிறார். இதுநாள் வரை இந்த சமூகம் அவரை, “மலடி“ என்ற பட்டப்பெயர் வைத்து அழைத்து வந்திருக்கிறது. தாங்க முடியாத வேதனையை நிச்சயம் எலிசபெத்தம்மாள் அனுபவித்திருப்பார். இவ்வளவு கடினமான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், தான் மகிழ்வதற்கு எவ்வளவோ காரியங்கள். காரணங்கள் இருந்தாலும், தாழ்ச்சியோட தன்னை விட வயதில் சிறியவராக இருக்கக்கூடிய அன்னை கன்னிமரியாளை, உள்ளத்தில்...

அனைத்தும் அவருக்கே சொந்தம்

திருப்பாடல் 24: 1 – 2, 3 – 4, 5 – 6 மனிதன் தன்னுடைய வாழ்நாளில் செல்வம், சொத்து சேர்க்க ஆசைப்படுகிறான். தனக்கானது என்று அவன் சேர்த்து வைக்கிறான். அதற்கு உரிமையும் கொண்டாடுகிறான். இந்த உலகத்தில் இருக்கிற எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டும் என்கிற எண்ணம் மனிதனிடத்தில் இல்லை. தான் மட்டும் நன்றாக வாழ்ந்தால் போதும் என்று நினைக்கிறான். அதற்கு ஏற்றாற்போல, தன்னுடைய வாழ்வை அவன் நகர்த்துகிறான். இன்றைய திருப்பாடல், இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்கிற மனிதர்களுக்கு ஓர் ஆழமான உண்மையை எடுத்துரைக்கிறது. இந்த உலகத்தில் இருக்கிற அனைத்துமே இறைவனுக்கு சொந்தம் என்கிற உண்மை தான் அது. இந்த உலகம் இறைவனால் படைக்கப்பட்டது. இந்த உலகத்தில் வாழ்கிற மனிதர்களும், இறைவனால் படைக்கப்பட்டவர்கள் தான். இறைவன் தான், அனைத்திற்கும் தொடக்கமும், முடிவுமாக இருக்கிறார். இந்த பூமியில் இருப்பது மட்டுமல்ல, இந்த மிகப்பெரிய வான்வெளியின் தொடக்கம் அவரே. நாம் அனைவரும் இறைவனுக்குச் சொந்தமானவர்கள் என்கிற...

பேறுபெற்ற கணவர்

அருமையான ஆனந்தம் நிறைந்த குடும்ப வாழ்வை, ஆட்கள் பலர் குறுக்கிட்டு கெடுத்து குட்டிட் சுவராக்கிவிடுவர். சில விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் சம்பவங்கள், கலையிழந்த மாளிகையாக்கிவிடும். சில ஆசைகள், கொள்கைகள் வண்ணம் காட்டி கண்ணை மறைத்து, குடும்பத்தை காரிருளில் தடுமாற வைத்துவிடும். ஆண்டவனும் கூட சில நேரங்களில் விழையாடலாம். இது போன்ற நேரங்களில் கட்டப்பஞ்சாயத்து, காவல்துறை, கோர்ட், விவாகரத்து என்ற விபரீதங்களில் சிக்கி, பெருமைமிக்க குடும்பங்களும் சிறுமையடைகின்றன. யோசேப்பு, மரியாவின் குடும்பமும் அதற்கு விதி விலக்கல்ல. இறைவனின் திட்டத்தை புறியாதவரையில் புனிதனின் குடும்பமும் தப்பமுடியாது.மனைவியை விலக்கிவிடலாமா என்று சிந்திக்கிறார் யோசேப்பு. நேர்மையாளர். கடவுள் பக்தர். தன் குழப்பத்திற்குத் தீர்வு காண இறை உதவியைத் தேடுகிறார். அமைதியில், தூக்கத்தில், தியானத்தில் இறை உதவி, வெளிப்பாடு, தெளிவு அவருக்கு கிடைக்கிறது. இறை திட்டத்தை தெறிந்து கொள்கிறார். சமுதாயத்தில் தன் பங்கினை உணர்கிறார். தன் குடும்பச் சுமை இப்பொழுது சுவையாகத் தோன்றுகிறது. குடும்பச் சுமைகள் நம்மை அழுத்தும் வேளைகளில்...