Tagged: இன்றைய வசனம் தமிழில்

கீழ்படியுங்கள்

ஆண்டவருக்குள் அருமையான அன்பின் இறைமக்களுக்கு,     இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் மனிதனாக பிறந்தபொழுது தன்னை இந்த உலகத்திற்கு அனுப்பிய தமது தந்தைக்கும், இந்த உலகத்திற்கு வர காரணமாயிருந்த யோசேப்பு, மரியாள் ஆகிய தமது பெற்றோருக்கும் கீழ்படிந்தே வாழ்ந்தார், என்று நாம் விவிலியத்தில் வாசிக்கிறோம்.   மனிதர்கள் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வை இழப்பாரானால் அவர்களுக்கு கிடைக்கும் பயன் என்ன? மத்தேயு 16:26 ; மாற்கு 8:36 ல் படிக்கிறோம். நாம் அவரிடத்தில் கேட்டும் சில காரியங்கள் கிடைக்கவில்லையே என்று மனம் சோர்ந்து போயிருக்கிறீர்களா? கவலைப்படாதிருங்கள். நீங்கள் விரும்பும் எல்லாவற்றையும் கொடுக்கவே ஆண்டவர் உங்கள் அருகில் உங்கள் இருதயத்தில் காத்திருக்கிறார். அதற்குமுன் ஆண்டவர் உங்களிடம் ஒன்றே ஒன்று கேட்கிறார். என்ன தெரியுமா? கீழ்படிதல். அவருடைய வாக்குகளை கேட்டு அவர் திருவுளச்சித்தப்படி நடந்தால் நாம் எதைக்கேட்டாலும் அவர் இல்லை என்று சொல்லவே மாட்டார்.  1 யோவான் 5 – 14. உங்கள் தீச்செயல்கள் உங்களுக்கும் ஆண்டவருக்கும் இடையே பிளவை உண்டாக்காமலும், அவர் முகத்தை மறைக்காமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்....