Tagged: இன்றைய வசனம் தமிழில்

இழப்பும், ஆதாயமும்

ஏரோது அந்திபாஸ் அரசருடைய எல்கையில் தான் கப்பர்நாகும் இருந்தது. மத்தேயு ஏரோதுவின் அரச அலுவலராய் இருந்தார். அவர் நேரடியாக உரோமை அரசின் அலுவலராய் இல்லை. கப்பா்நாகும் அமைந்திருந்த இடம், பல இடங்களிலிருந்து வந்த சாலைகள், சேரும் இடமாய் அமைந்திருந்தது. எனவே, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல வேண்டுமென்றால், கட்டாயம் கப்பார்நாகும் வந்துதான் செல்ல வேண்டும். அப்படி பொருட்களை விற்க வரும்போதும், தொழிலின் பொருட்டு பொருட்களை ஏற்றிவரும்போதும், சுங்க வரி கட்ட வேண்டும். அந்தப் பணியைத்தான் மத்தேயு செய்து வந்தார். மத்தேயு இதற்கு முன் இயேசுவை சந்தித்து இருக்கவில்லை. ஆனால், நிச்சயம் இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்க வேண்டும். அதிகாரத்தோடு தீய ஆவிகளையும் அடக்குவதற்கு வல்லமை பெற்றிருக்கிற இயேசுவின் புகழ் நிச்சயம் அவர் அறிந்த ஒன்றாகத்தான் இருந்திருக்க வேண்டும். இதுவரை பாவிகளையும், வரிவசூலிக்கிறவர்களையும் ஒதுக்கிவந்த போதகர்கள் மத்தியில், இயேசுவின் போதனை மத்தேயுவிற்கு புதிதான ஒன்றாக அமைந்திருக்க வேண்டும். எனவே தான், அவர் இயேசுவைப் பார்ப்பதற்கு...

இருப்பதிலிருந்து கொடுத்தல்

இந்த உலகத்தில் பல மனிதர்கள், மக்களுக்கு குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்கு பல உதவிகளைச் செய்கிறார்கள். செய்யப்படுகிற உதவிகள் அனைத்துமே நல்ல மனதோடு செய்யப்படுகிறதா? என்றால், அது விவாதத்திற்கு உட்பட்டது. காரணம், இன்றைய அரசியல் உலகில் செய்யப்படுகிற உதவிகள் அனைத்துமே, இலாப நோக்கத்திற்காக மட்டுமே செய்யப்படுவதாக இருக்கிறது. உதவிகள் அனைத்துமே இரக்கச்செயலாக ஏற்கப்படுமா? என்றால், இல்லை என்பதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகம் பதிலாகத் தருகிறது. நாம் உதவிகள் செய்வது சிறந்தது. ஆனால், எத்தகைய மனநிலையோடு செய்கிறோம்? என்பது, அதைவிட முதன்மையானது. ஆராயப்பட வேண்டியது. நாம் எவ்வளவு கொடுக்கிறோம்? என்பது முக்கியமல்ல. எப்படி கொடுக்கிறோம்? எந்த மனநிலையோடு கொடுக்கிறோம் என்பதுதான் முக்கியமானது. அதுதான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படக்கூடியதாக இருக்கிறது. ஒருவேளை, இந்த உலகத்தில் இருக்கிற மக்களை நாம் ஏமாற்றிவிடலாம். அவர்களுக்குக் கொடுப்பதுபோல கொடுத்து, அவர்களிடமிருந்து அவர்கள் அறியாமல் நாம் பிடுங்கிவிடலாம். இன்றைக்கு பன்னாட்டு நிறுவனங்கள், மிகப்பெரிய நிறுவனங்கள் இந்த உத்தியைத்தான் கையாளுகின்றன. ஆனால், அதற்கான...

அதிகாரமும், அடிமைத்தனமும்

பொறுப்புணர்வு என்பது நமது வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஓர் உன்னதமான பண்பு. இன்றைய உலகில் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டியவர்கள், பொறுப்பற்று இருப்பதால் தான், பல பிரச்சனைகள் தோன்ற ஆரம்பிக்கிறது. அதிகாரத்திற்கு ஆசைப்படுகிற எல்லாரும், அதிகாரம் கிடைத்தபிறகு, அதனை பொறுப்பற்ற நிலையில் பயன்படுத்துகின்றனர். தங்களுக்கு சார்பான காரியங்களைச் செய்து, எப்படி இலாபம் ஈட்டலாம் என்றுதான் நினைக்கின்றனர். இதிலிருந்து நாம் விடுதலை பெறுவதற்கு, இன்றைய வாசகம் நமக்கு அழைப்புவிடுக்கிறது. செல்வந்தர் ஒருவரின் வீட்டுப்பொறுப்பாளரைப் பற்றிய உவமை நமக்குத் தரப்படுகிறது. தன்னுடைய உடைமைகளைப் பாதுகாத்துக்கொள்ள தலைவர் ஒருவரைத் தேர்ந்தெடுத்தால், நிச்சயம் அவர் நல்லவரா? நேர்மையானவரா? பொறுப்புள்ளவரா? எனப்பார்த்துதான், தேர்ந்தெடுத்திருப்பார். வீட்டுப்பொறுப்பாளராக தேர்ந்தெடுககப்பட்டவர், அதற்கான தொடக்கத்தில் தகுதியைப்பெற்றிருக்கிறதனால், தலைவர் அவரை, பொறுப்பாளராக நியமித்திருக்கிறார். ஆனால், தொடக்கத்தில் இருந்த அந்த நல்ல பண்புகள் அதிகாரம் வந்தவுடன் மாறிவிடுகிறது. பணத்தின் மீது மோகம் ஏற்படுகிறது. விளைவு, அவரிடத்தில் குடிகொண்டிருந்த நல்ல பண்புகள் வெளியேறிவிடுகிறது. அவர் பொறுப்பற்ற மனிதராக மாறிவிடுகிறார்....

வாழ்வின் நோக்கம்

இந்த உலகத்தில் கடவுள் பலவற்றைப் படைத்திருக்கிறார். விலங்குகளாக இருக்கலாம். பறவைகளாக இருக்கலாம். மரம், செடி, கொடிகளாக இருக்கலாம். ஊர்ந்து செல்லக்கூடியதாக இருக்கலாம். இந்த படைப்புகள் அனைத்துமே ஏதோ ஒரு நோக்கத்தோடு படைக்கப்பட்டிருக்கின்றன. அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு இயற்கையும் அவைகளுக்கு உதவியாக இருக்கிறது. அதேபோலத்தான் விதைகளும். விதைகள் அனைத்திற்குமே, ஒரு பயன்பாடு இருக்கிறது. நோக்கம் இருக்கிறது. அதனை அடிப்படையாக வைத்துதான் இயேசு தனது போதனையை வழங்குகிறார். விதைக்கப்படுகிற விதைகள் அனைத்துமே நல்ல விதைகளாக இருந்தாலும், அவை அனைத்துமே சிறந்த பலனைக் கொடுக்கிறதா? என்றால் அது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. அவை அனைத்துமே பலன் கொடுப்பதில்லை. விதைக்கப்படுகிற இடமும், சூழலும் விதைகள் வளர்வதற்கேற்ற இடமாக இல்லை. எனவே, அவற்றால் பலன் கொடுக்க முடிவதில்லை. தாங்கள் எதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறோமோ, அந்த நோக்கத்தை நிறைவேற்ற முடியவில்லை. இந்த மனித வாழ்க்கையும் இந்த விதையைப் போன்றதுதான். நமக்கென்று, நாம் செய்வதற்கென்று நோக்கம் இருக்கிறது. அதை செய்வதற்கான வழிமுறைகளை, உதவிகளை இயற்கை...

துருவங்களை இணைப்பவர் இயேசு

தொழுகைக்கூடத்தில் இயேசுவுக்கு எதிர்ப்பு வலுக்க ஆரம்பித்துவிட்டது. பரிசேயர்களும், சதுசேயர்களும் இயேசுவிடம் குற்றம் காண நேரம் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இயேசு தனது போதனை தளத்தை மாற்ற ஆரம்பிக்கிறார். தொழுகைக்கூடத்திலிருந்து, கடற்கரையிலும், தெருக்களிலும், ஆலயத்திலும் அவர் போதிக்கத்தொடங்குகிறார். இயேசு வாழ்ந்த காலத்தில், போதகர்களுக்கு பணிவிடை செய்வது என்பது ஆசீர்வாதமான செயலாகக் கருதப்பட்டது. போதகர்கள் செல்கிறபோது, அவரோடு உடனிருந்து, அவருக்குத்தேவையானவற்றை செய்து தருவதற்கு பலர் தானாகவே முன்வந்தனர். இயேசுவோடு பெண்களும் உடனிருந்தார்கள் என்பதை இன்றைய நற்செய்தியில் நாம் பார்க்கிறோம். இயேசுவோடு உடனிருந்த பெண்களில் முக்கியமானவர்கள் மகதலா மரியாவும், யோவன்னாவும். இந்த மகதலாவிடமிருந்து இயேசு பல பேய்களை ஓட்டியிருந்தார். அவருடைய கடந்த கால வாழ்க்கை ஒரு பாவ வாழ்க்கை. அவரோடு யோவன்னாவும் இருந்தார். இந்த யோவன்னா, ஏரோதுவின் மாளிகையில் மேற்பார்வையாளராக இருந்த கூசாவின் மனைவி. மேற்பார்வையாளர் பணி அதிகாரம் மிகுந்த பணி. அரசருடைய அனைத்து உடைமைகளுக்கும் பொறுப்பு இவராவார். அரசரின் மதிப்பையும், அன்பையும், நம்பிக்கையையும் பெற்ற ஒருவர் தான்...