Tagged: இன்றைய வசனம் தமிழில்

அன்பு என்றும் வாழும் !

இன்று புனித மார்த்தாவின் திருநாள். லாசர், மரியா இவர்களின் சகோதரியான மார்த்தா இயேசுமீது சிறப்பான அன்பு கொண்டிருந்தார். இயேசுவும் அவர்களைத் தம் நண்பர்கள் என்று அழைத்தார். என்ன ஒரு சிறப்பு! இயேசுவை நண்பராகக் கொண்டிருப்பது. அவரை இல்லத்துக்கு அழைத்து, விருந்திட்டு உபசரிப்பது. அந்தப் பேறு மார்த்தாவுக்குப் பலமுறை கிடைத்தது. லாசர் இறந்தபின்னும்கூட மார்த்தா இயேசுவின் வல்லமைமீது கொண்டிருந்த நம்பிக்கை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. நீர் இங்கே இருந்திருந்தால், என் சகோதரன் இறந்திருக்க மாட்டான் என்று ஆணித்தரமாகக் கூறிய மார்த்தா, அடுத்த வார்த்தைகளில் தன் நம்பிக்கையின் முழுமையையும் வெளிப்படுத்துகிறார். இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதையெல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என எனக்குத் தெரியும். ஆம், மார்த்தாவின் நம்பிக்கை அவரது அன்பின் அடிநாதமாக இருந்தது. எனவே, இயேசு அங்கே ஒரு புதுமையை நிகழ்த்துகிறார். லாசரை உயிரோடு எழுப்புகிறார். அன்பு இறவாது. அன்பு என்றும் வாழும். அன்பு நம்பிக்கை கொள்ளும். இவை அனைத்துக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த...

உண்மைக்கு சான்று பகர…

மக்கள் இயேசுவிடம் திரளாக வந்தபோது, அவர்களுக்கு புதிதாகக் கற்றுக்கொடுக்க வேண்டும், புதிய சிந்தனைகளைக் கொடுக்க வேண்டும், தனது கருத்துக்கள் மட்டும் தான் மக்களின் உள்ளத்தில் பதிக்கப்பட வேண்டும் என்று, இயேசு ஒருபோதும் நினைத்தது இல்லை. அவர்களுக்கு சொல்லப்பட்டிருந்த, திருச்சட்டத்தைப் பற்றிய விளக்கங்களை முற்றிலுமாக மாற்றி, புதிய நெறிமுறைகளைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் விரும்பியதில்லை. மக்களுக்கு எது நன்மையோ, அது ஏற்கெனவே அவர்களுக்குச் சொல்லப்பட்டிருந்தால், அதனையும் சேர்த்தே அவர்களுக்குப் போதிக்கிறார். இதிலிருந்து இயேசுவின் சிந்தனை, மக்கள் உண்மையை ஏற்றுக்கொண்டு, அதற்கேற்ப வாழ வேண்டும் என்பதுதான். இன்றைய உலகின் அறிவு வளர்ச்சி நாம் நினைக்காத வண்ணம் வளர்ந்திருக்கிறது. உண்மையை அறிந்து கொள்வதற்கு பல வாய்ப்புகள் நமக்கு தரப்படுகிறது. எது உண்மை? என்பதை அறிவது மிக எளிதானதாக இருக்கிறது. ஆனால், அந்த உண்மையை திறந்த உள்ளத்தோடு ஏற்றுக்கொள்கிறோமா? என்றால், அது கேள்விக்குறிதான். உண்மை என்ன? என்பது தெரிந்திருந்தாலும், அதனை நாம் ஒரு பொருட்டாக எடுப்பதில்லை....

கடின உழைப்பின் பலன்

யூத ராபிக்களின் போதனைப்படி, ஒரு மனிதர் புதையலைக் கண்டுபிடித்தால் அது அவருக்கு சொந்தமானதாகும். அதற்கு அவர் மட்டும் தான் உரிமை கொண்டாட முடியும். போர்கள் வருகிறபோது, மக்கள் தங்களது நிலபுலன்களை விட்டுவிட்டு அடிக்கடி வேறு இடங்களுக்குச் சென்று விடுவதால், அவர்கள் சேர்த்து வைத்திருந்த பணம், புதையலாக பல இடங்களில் புதைக்கப்பட்டிருந்தது. எனவே, அடிக்கடி இந்த புதையல்களை மக்கள் கண்டுபிடிப்பது வழக்கமாக இருந்தது. அப்படிப்பட்ட ஒரு புதையலைத்தான், அந்த மனிதர் கண்டுபிடிக்கிறார். புதையலைக் கண்டுபிடிக்கிற மனிதர் சோம்பேறி அல்ல. புதையலுக்காக அலைகிறவர் அல்ல. அவர் உழைக்கிறார். புதையலுக்காக உழைக்கவில்லை. வழக்கமாக அவர் உழைப்பது போல உழைக்கிறார். அவரது மனதில் புதையலைப்பற்றிய எண்ணமில்லை. தனது கடமையைச் செய்கிறார். அந்த கடமையின் இடையில், இந்த புதையலைக் கண்டுபிடிக்கிறார். நமது வாழக்கையில் சோம்பேறித்தனத்திற்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது. நாம் உழைக்க வேண்டும். நமது கடமையை நிறைவாகச் செய்ய வேண்டும். அதற்கான பலனையும், அதனைவிட பலவற்றையும், கடவுள் நமக்குத்...

வாழ்வின் சுமைகளை பொறுமையோடு எதிர்கொள்வோம்

வயலில் விளையும் களைகள் விவசாயிகளின் சாபக்கேடு. அவை வளருகிற சமயத்தில் பிடுங்கவும் முடியாமல், வளரவிடவும் முடியாமல் ஒரு விவசாயிபடுகிற துன்பத்தைச் சொல்லிமாள முடியாது. ஏனென்றால், அவைகள் தொடக்கத்தில் கோதுமைப்பயிர்களையும், களைகளையும் அடையாளம் காண முடியாதபடி உருவ அமைப்பில் ஒத்திருக்கின்றன. களைகளை சிறியதாக இருக்கிறபோது பிடுங்குவது எளிது என்றபோதிலும், இரண்டுமே ஒரே போல இருப்பதால், தவறாக கோதுமைப்பயிர்களை பிடுங்கவும் வாய்ப்பிருக்கிறது. இதனால், இரண்டையும் வளரவிடுவார்கள். வளர்ந்தபிறகு கோதுமைப்பயிருக்கும், களைகளுக்கும் நல்ல வித்தியாசம் தெரியும். ஆனாலும், இப்போது களைகள் நன்றாக தனது வேரை இறுகப்பாய்ச்சிருக்கும். இப்போது களைகளைப் பிடுங்கினால், அதோடு கோதுமையும் பிடுங்கப்பட்டுவிடும். எனவே, அறுவடை நேரம் வரை காத்திருந்து, பொறுமையாகக் களைகளையும், பயிர்களையும் தனித்தனியாகப் பிரிக்க வேண்டும். இந்த உலகத்தில் களைகள் என்று சொல்லப்படும் அலகையின் ஆதிக்கம் எப்போதும் இருக்கும். நாம் அதைப்பார்த்து பதற்றப்படத் தேவையில்லை. பொறுமையோடு, நம்பிக்கையோடு, உறுதியாக அதைத்தவிர்க்கும் மனநிலையை வளர்த்துக்கொண்டோம் என்றால், காலம் கனிகிறபோது, அதை எதிர்த்து வெற்றி...

வாழ்வு தரும் இறைநம்பிக்கை

சீடர்களின் குழப்பமான மனநிலைக்கு எடுத்துக்காட்டு இன்றைய பகுதி. சீடர்கள் இயேசுவோடு இருந்ததின் பிண்ணனி, தங்களுக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்காதா? என்ற எதிர்பார்ப்பு தான். இதை மட்டும் நாம் கணக்கில் எடுத்து சீடர்களை விமர்சனம் செய்ய முடியாது. அப்படி விமர்சித்தால், அது தவறாக முடிந்து விடும். இயேசு தனது சாவைப்பற்றி அறிவித்தபோதும், துன்பக்கிண்ணத்தை குடிக்க இருப்பதாக சொன்னபோதும், சீடர்கள் அவரை விட்டுவிட்டு ஓடவில்லை. மாறாக, எதற்கும் தயார் என்று சொல்கிறார்கள். இரண்டுமே நேர் எதிர் மனநிலையைக் குறிக்கிறது. இந்த இரண்டுமே சீடர்களின் குழப்ப மனநிலையையும் உறுதிப்படுத்துகிறது. அப்படியென்றால், இவ்வளவு குழப்ப மனநிலையில் எது சீடர்களை இயேசுவோடு இணைத்துக் கட்டிபோட்டது? எது இயேசுவோடு அனைத்தையும் பொறுத்துக்கொள்ள தூண்டுகோலாக இருந்தது? எது இயேசு மீது முழுமையான அன்பு வைத்து, அவரோடு இருப்பதற்கு உறுதுணையாக இருந்தது? இயேசு மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கை. அவர்கள் குழப்ப மனநிலையில் இருந்தாலும், இயேசு மீது வைத்திருந்த நம்பிக்கையை எந்த விதத்திலும்...