Tagged: இன்றைய வசனம் தமிழில்

நமது பணி யாருக்காக?

ஒரு அருட்பணியாளரின் வாழ்க்கையில் பங்கில் பணிபுரிவது என்பது சவாலான ஒன்றாக இருக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. எல்லா பங்குகளிலும் பொதுவான ஒரு தோற்றம் இருக்கும். அது என்ன தோற்றம்? பங்கில் இரண்டு வகையான மக்கள் இருப்பார்கள். முதல் வகையான மக்கள் அருட்பணியாளரின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறவர்கள். வழிபாட்டில் ஆர்வமுடன் பங்கெடுக்கிறவர்கள். இரண்டாவது வகையான மக்கள் மிகச்சிறிய விழுக்காடு உள்ளவர்கள். ஆலயத்தின் வழிபாடுகளில் நாட்டம் கிடையாது. ஆலயத்தின் பக்கமே திரும்பிப்பார்க்காதவர்கள். ஆனால், பங்கில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளிலும் தங்களை முதன்மைப்படுத்திக் கொண்டு இவர்களைப் பகைத்தால், பங்கில் அருட்பணியாளர் பணிபுரிய முடியாது என்று சொல்லக்கூடிய அளவுக்கு தங்களை வலிமையாகக் காட்டிக்கொள்கிறவர்கள். அருட்பணியாளர்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கிறவர்கள். இவர்கள் செய்வது அநீதி என்று தெரிந்தாலும், மற்ற பெரும்பான்மையினர் இவர்களை எதிர்த்து நிற்பதில்லை. ஆனால், மறைமுகமாக அருட்பணியாளர்களைப் பார்த்துப் பரிதாபப்படுகிறவர்கள். இது எல்லா பங்கிலும் காணப்படக்கூடிய பொதுவான தோற்றமாக இருக்கிறது. இப்போது நம்மிடம் எழக்கூடிய கேள்வி: இவர்களுள்...

புதுவாழ்வு பெற…

இயேசு விரும்பும் சில செயல்களைச் நம்மில் பலரும் செய்தால் ஒவ்வொரு நாளும் புதுமையானவற்றை நம் வாழ்வில் காணலாம். எங்கெல்லாம் நோயுற்றவர்கள், இயலாதவர்கள், ஏழைகள், ஒதுக்கப்பட்டவர்கள் இருக்கிறார்களோ, அவர்களை ஏற்றுக்கொண்டு, அவர்கள் குணம்பெறவும் புது வாழ்வு பெறவும் அவர்களைத் தூக்கி, தாங்கி வழி நடத்தி வந்தால், புதுமையானவற்றைக் காணலாம். ஆகவே புதுமையானவற்றைக் காண நல்லவர்கள் நான்கு பேர், விவரம் தெறிந்தவர்கள், துணிச்சல் உள்ளவர்கள் முன்வர வேண்டும். வீட்டில் மக்கள் கூடுவதற்கும், வீட்டின் கூரையைப் பிரிப்பதற்கும் சம்மதம் தரும் நல் உள்ளம் கொண்டவர் தேவை. என்ன நடந்தாலும் குறை சொல்வதற்கென்றே சிலர் உண்டு. அவர்களும் தேவை. இவர்களின் எதிர்ப்பு, பட்டம் உயர பயன்படும் எதிர்காற்றாகும். அதே வேளையில் எப்போதும் கடவுளைப் போற்றிப் புகழும் இன்னொரு குழுவினரையும் பார்க்கிறோம். இவர்கள் எல்லோரும் சேர்ந்து இயேசுவிடம் வந்ததால் புதுமையானவற்றை அன்று கண்டார்கள். பாவம் மன்னிக்கப்பட்டதை அனுபவித்து உணர்ந்தார்கள். முடக்கு வாதமுற்றவன் எழுந்து நடக்கக் கண்டார்கள். இன்றும் வேறுபட்ட...

கடவுளின் மக்கள்

திருமுழுக்கு யோவான் அனைவருக்கும் திருமுழுக்கு கொடுக்கிறார். திருமுழுக்கு என்பது யூதர் அல்லாத புறவினத்தவர் யூத மதத்திற்கு வருகிறபோது நிறைவேற்றக்கூடிய ஒரு சடங்கு. அந்த சடங்கை அனைவருக்கும் கொடுப்பதன் வழியாக, யூதர்களையும் அவர் புறவினத்து மக்களாக, இன்னும் கடவுளுக்குள் வராத மக்களாகவே பார்க்கிறார் என்பதை நமக்கு அறிவிக்கிறது. ஆக, வெறும் பிறப்போ, அருள் அடையாளங்களோ நம்மை கடவுளின் பிள்ளைகளாக மாற்றிவிடாது. மாறாக, உண்மையான வாழ்வே, நமக்கு கடவுளின் அருளைப் பெற்றுத்தரும். விரியன் பாம்புக்குட்டியை திருமுழுக்கு யோவான் உவமையாகச் சொல்கிறார். விரியன் பாம்புகளை ஒருவருக்கு ஒப்பிட்டுச்சொன்னால், அவரை அவதூறாகப் பேசுவதற்குச் சமம் என்ற கருத்து, மத்திய கிழக்குப் பகுதிகளில் நிலவி வந்த நம்பிக்கை. விரியன் பாம்புக்குட்டிகள் என்று சொல்வது அதைவிட மோசமான வார்த்தை. காரணம், விரியன் பாம்புக்குட்டிகள் தங்களது தாயை பிறக்கிறபோது, கொன்றுவிடும். அதேபோல யூத சமயத்தலைவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிற மக்களை, அவர்களே தவறான வாழ்க்கையை வாழக்கூறி, அவர்களை அழித்துவிடுகிறார்கள் என்று உவமையாகச் சொல்லப்படுகிறது....

புனித பிரான்சி சவேரியார் – மறைப்பணியாளர் இந்தியாவின் பாதுகாவலர் பெருவிழா

தூய பிரான்சிஸ் சேவியர் ( புனித சவேரியார் திருவிழா) ”ஒருவன் இந்த உலகம் முழுவதையும் தனதாக்கிக் கொண்டாலும், தன் ஆன்மாவை இழந்தால் அதனால் வரக்கூடிய பயன் என்ன?” என்கிற வார்த்தைகளை எப்போது நாம் கேட்டாலும், நம் நினைவுக்கு உடனடியாக வரக்கூடியவர் தூய சவேரியார். அந்த அளவுக்கு இந்த இறைவார்த்தை சவேரியாரோடு தொடர்புப்படுத்தும் அளவுக்கு, அவரோடு ஒன்றிணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சவேரியார் வாழ்வும், அவரது அர்ப்பணம் நிறைந்த போதனையும் நமக்குச் சுட்டிக்காட்டுவது என்ன? தூய சவேரியார் நற்செய்திப் பணிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர். ”மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்கிற இயேசுவின் வார்த்தைகளை தனது உள்ளத்தில் ஏற்று, அதற்காக தனது வாழ்வையே அர்ப்பணித்தவர். மத்தேயு நற்செய்தியின் மலைப்பொழிவில் (5: 4), ”துயருறுவோர் பேறுபெற்றோர்” என்கிற செய்தி நமக்குத் தரப்பட்டிருக்கிறது. இந்த துயருறுவோர் யார்? வாழ்க்கையில் துன்பப்படுகிறவர்களா? ஒருவேளை சோற்றுக்கும் வழியில்லாமல் வறுமையைச் சந்திக்கிறவர்களா? வாழ்க்கையில் பல காரணங்களுக்கு துன்பங்கள் வரலாம். அல்லது அதற்கு காரணமும்...

இயேசுவின் வல்லமை

மருத்துவம் அவ்வளவாக வளர்ச்சியடையாத காலக்கட்டம். பார்வையின் மகத்துவம் தெரியாத மனித சமூகம். இவற்றிற்கு மத்தியில் அறியாமை. இதனால், இயேசு வாழ்ந்த காலத்தில் ஏராளமான போ் தங்களது கண்பார்வையை இழந்திருந்தனர். கண் பார்வை இழப்பிற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், அவையனைத்துமே சாதாரண காரணங்கள் தான். சூரிய ஒளியிலிருந்து சில சமயங்களில் வரக்கூடிய கடுமையான ஒளி, சரியாக கண்களைப் பராமரிக்காமை, தொற்று போன்றவை, பார்வை இழப்பிற்கு காரணங்களாக இருந்தன. அப்படிப்பட்ட சூழ்நிலை நிலவிய காலக்கட்டத்தில், இரண்டு பார்வையற்ற மனிதர்கள் இயேசுவிடத்தில் பார்வை பெற வருகிறார்கள். இயேசு அவர்கள் கூப்பிட்டவுடன் பதில் சொல்லிவிடவில்லை. அவர்களின் தேடல் உண்மையானதா? உறுதியானதா? என்று உறுதிப்படுத்திக்கொள்கிறார். அது உண்மையானதும், உறுதியானதும் என்பதை உணர்ந்தவுடன் அவர், அவர்களுக்கு உதவி செய்கிறார். கடவுளிடத்தில் நாம் செபிக்கிறபோது, அது உண்மையானதாக, உறுதியானதாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால், கடவுளிடத்தில் நாம் தொடர்ந்து சென்று கொண்டேயிருப்போம். எப்போது நாம் வெறும் தேவைக்காகச் செல்கிறோமோ, அப்போது நம்மிடத்தில்...