Tagged: தேவ செய்தி

என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு

அனைவருக்கும் இயேசு உயிர்ப்பின் வாழ்த்துக்கள் திருப்பாடல் 118: 1 – 2, 16 – 17, 22 – 23 (24) கடவுளது பேரன்பு என்றென்றும் உள்ளது என்று திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார். ”என்றென்றும்” என்பதின் பொருள் என்ன? “எல்லாக்காலத்திலும்” என்று நாம் பொருள் கொடுக்கலாம். அதாவது, வறுமையோ, துன்பமோ, வாழ்வோ, தாழ்வோ எல்லா நேரத்திலும் ஆண்டவரின் அன்பு, நம்மிடத்தில் உள்ளது. குறிப்பாக, நாம் தவறு செய்தாலும், ஆண்டவர் நம்மை முழுமையாக அன்பு செய்கிறார். நாம் செய்த தவறை நினைத்து, வருந்துவாரே அன்றி, நம்மை மீட்பதற்கு முயற்சிகள் எடுப்பாரேயன்றி, அவர் நம்மை தண்டிக்க வேண்டும் என்று விரும்புகிறவர் கிடையாது. அதுதான் கடவுளின் பேரன்பு என்று, திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார். கடவுளின் அன்பிற்கு ஈடு இணையே இல்லை. எனவே தான், அவருக்கு நன்றி செலுத்துங்கள் என்று ஆசிரியர் கூறுகிறார். நாம் செய்த தவறுகளுக்கு ஏற்ப, கடவுள் நமக்கு தண்டனை கொடுப்பவர் என்றால், நாம்...

பேதுருவின் உயிர்ப்பு அனுபவம்

இயேசு தனது சீடர் ஒவ்வொருவரின் மீதும் எந்த அளவுக்கு அன்பும் பாசமும் வைத்திருந்தார் என்பது, இந்த உயிர்ப்பு நிகழ்ச்சியில் தெளிவாகிறது. இயேசு இறந்தபோது ஓய்வுநாள் நெருங்கிவிட்டதால் அவசர, அவசரமாக அவரது உடலை அடக்கம் செய்தனர். எனவே, வழக்கமாக செய்யும் சடங்குமுறைகளை முழுமையாக அவர்களால் செய்ய முடியவில்லை. செய்ய வேண்டிய சடங்குமுறைகளை செய்துமுடிப்பதற்காக வெகுவிரைவாகவே, ஓய்வுநாள் முடிந்தவுடன் கல்லறைக்குச் செல்கிறார்கள். ஏறக்குறைய எல்லார் மனதிலும் ஒருவிதமான கலக்கமும், திகிலும் நிறைந்திருக்கிறது. எல்லாமே முடிந்துவிட்ட மனநிலையில் அவர்கள் இருக்கிறார்கள். இரண்டொரு நாட்களில் அவர்களின் வாழ்வே மாறிவிடும் என்று அவர்களால் நம்பவே முடியவில்லை. அப்படியிருக்கிற சூழ்நிலையில் தான், இயேசு உயிர்த்துவிட்டார் என்கிற செய்தி, சீடர்களுக்குத் தரப்படுகிறது. இந்த செய்தி அனைவருக்கும் சொல்ல முடியாத மகிழச்சியைத் தந்திருந்தாலும், பேதுருவுக்கு அது மிக மகிழ்ச்சியான அனுபவமாக இருந்திருக்கும். ஏனென்றால் வெண்தொங்கலாடை அணிந்த இளைஞர் பெண்களிடம், ”பேதுருவிடமும், மற்றச்சீடரிடமும் உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவிற்குப் போய்க்கொண்டிருக்கிறார் என்பதைச் சொல்லுங்கள்” என்ற...

தந்தையே! உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்

திருப்பாடல் 31: 1, 5, 11 – 12, 14 – 15, 16, 24 ”தந்தை” என்கிற வார்த்தை ஆழமான அன்பை வெளிப்படுத்தக்கூடிய வார்த்தை. பொதுவாக, நாம் எல்லாருமே ”அம்மா” என்று அழைப்பதற்கு அதிக ஆவல் கொண்டிருப்போம். ஏனென்றால், தாயன்பு ஒரு பிள்ளையை புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது. நாம் தவறு செய்தாலும், நமக்காகப் பரிந்து பேசுகிறவள் தாயாகத்தான் இருப்பாள். அது குழந்தையை மேலும் மேலும் தவறு செய்ய தூண்டுவதல்ல, மாறாக, தன்னுடைய குழந்தையின் மீது அவள் வைத்திருக்கிற மாசுமருவற்ற அன்பை வெளிப்படுத்துவதாக அமைகிறது. இந்த உலகத்தில் இருக்கிற எல்லாருமே, நிச்சயம் தாயிடத்தில் அதிக உரிமையோடு இருப்பதைப் பார்க்கலாம். அது கோபமாக இருந்தாலும் சரி, மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி. தாயிடத்தில் உரிமையோடு வெளிப்படுத்தலாம். ஆனால், ஒரு குடும்பத்தில் தந்தையுடனான நெருக்கம் சற்று இடைவெளி உள்ளது போல தோன்றும். ஒரு குடும்பத்தில்,கண்டிப்பு என்றால் அது தந்தையைச் சார்ந்தது. பிள்ளை எப்படி வளர வேண்டும்?...

பழிச்சொல் என் இதயத்தைப் பிளந்துவிட்டது

திருப்பாடல் 69: 7 – 9, 20 – 21, 30, 32 – 33 மனிதர் மேல் நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவர் மீது நம்பிக்கை வைப்பது எவ்வளவோ நலம் என்று இறைவார்த்தை கூறுகிறது. அந்த இறைவார்த்தையை உண்மையாக்குவதுதான் இன்றைய திருப்பாடல். மனிதரை நம்பியதால் ஏற்பட்ட பல்வேறு சிரமங்களை ஆசிரியர் வெளிப்படுத்துகிறார். தாவீது அரசர் மக்களுக்கு பல நன்மைகளைச் செய்தவர். தாவீது அரசர் காலத்தில் தான், இஸ்ரயேல் அரசு வேற்றுநாட்டினர் பொறாமைப்படக்கூடிய அளவுக்கு மிகப்பெரிய அரசாக வளர்ந்தது. அந்த அளவுக்கு, ஆண்டவர் தாவீது வழியாக இஸ்ரயேல் மக்களை உயர்த்தினார். இஸ்ரயேல் மக்களும் பெருமைப்படக்கூடிய அளவுக்கு, வேற்றுநாட்டார் மத்தியில், தாவீது அவர்கள ஆட்சி செய்தார். ஆனால், மக்கள் தாவீதைப்பழித்துப்பேசினர். மன உளைச்சலை உண்டாக்கினர். அதைத்தான் இங்கே வெளிப்படுத்துகிறார். தாவீது தன்னை நீதிமானாகக் காட்டிக்கொள்ளவில்லை. தான் தவறே செய்யவில்லை என்றும் கூறவில்லை. கடவுள் முன்னிலையில் தன்னை பாவி என்று காட்டிக்கொள்கிறார். தன்னுடைய பாவங்களை அவர்...

பொல்லார் கையினின்று என்னை விடுவித்தருளும்

திருப்பாடல் 71: 1 – 2, 3 – 4, 5 – 6, 17 பொல்லார் யார்? தீங்கு செய்யக்கூடியவர்களே பொல்லார். தீங்கு செய்யக்கூடிய மனிதர்களிடமிருந்து விடுவித்தருள வேண்டும் என, திருப்பாடல் ஆசிரியர் வேண்டுகிறார். யாரெல்லாம் சுயநலத்தோடு சிந்திக்கிறார்களோ அவர்களே தீங்கு செய்யக்கூடியவர்கள். அவர்கள் வெறுமனே உடலுக்கு மட்டும் தீங்கு செய்யக்கூடியவர்கள் அல்ல. மாறாக, அவர்கள் ஆன்மாவிற்கும் ஊறு விளைவிக்கக்கூடியவர்கள். அவர்களின் சுயநலத்திலிருந்தும், தீங்கு செய்யக்கூடிய எண்ணத்திலுமிருந்து தன்னைக் காத்தருள கோரிக்கை வைக்கிறார். ஏன் கடவுளிடம் கோரிக்கை வைக்கிறார்? கடவுள் மட்டும் தான், அரணாகவும், கோட்டையாகவும் இருந்து தன்னை காக்க முடியும் என்று, ஆசிரியர் நம்புகிறார். மனிதன் பலவீனன். அவன் நல்லவனாக வாழ வேண்டும் என்று விரும்பினாலும், நினைத்தாலும் இந்த உலகம் அவனை சும்மா விட்டுவிடாது. ஒருவன் நல்லவனாக வாழ விரும்பினால், அவன் சந்திக்கக்கூடிய சவால்கள் இந்த உலகத்தில் நம்ப முடியாதவையாக இருக்கும். அந்த அளவுக்கு சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும்....