Tagged: தேவ செய்தி

எச்சரிக்கை: யாரையும் பாவத்தில் தள்ள வேண்டாம்

லூக்கா 17:1-6 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நாம் இருக்கும் இடங்களில் குற்றங்கள், வன்முறைகள், பாவங்கள் பெருகிக்கொண்டு வருகின்றன. எங்குப் பார்த்தாலும் பாவம் செய்யும் கும்பல் குவிந்துக்கொண்டு இருக்கின்றது. யார் காரணம் இதற்கு? அவர்களே கற்றுக்கொண்டார்களா? இல்லை. பிறர் கற்றுக்கொடுத்தார்கள். நண்பர்களிடமிருந்து, பணிசெய்யுமிடங்களிலிருந்து, உறவினர்களிடமிருந்து கற்றுக்கொண்டதுதான் அது. இப்படி பிறருக்கு தவறான பண்புகளை கற்றுக்கொடுப்போரை இன்றைய நற்செய்தி வாசகம் எச்சரிக்கிறது. பிறரை பாவத்தில் தள்ளி விடுவோரை வன்மையாக கண்டிக்கிறது. நம்மால் யாரும் கெட்டுப்போகாத வாழ்க்கையை நாம் நடத்த வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? இரண்டு காரியங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 1. பாவச்சோதனை கொடுக்க கூடாது பலர் தங்களோடு இருக்கும் நண்பர்களுக்கு பாவச்சோதனையை வழங்குகிறார்கள....

உண்மையான விசுவாசம்

லூக்கா நற்செய்தியாளரைப் பொறுத்தவரையில், இயேசு சதுசேயர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடிய ஒரே இடமாக, இந்த வாக்குவாதம் அமைகிறது. சதுசேயர்கள் தாங்கள் என்ன செய்தோம், எதை நம்புகிறோம்? என்று அறியப்படுவதைவிட, எதை நம்பவில்லை என்பதன் அடிப்படையில், இந்த நற்செய்தியில் அறியப்படுகிறார்கள். சதுசேயர்கள் எதற்காக உயிர்த்தெழுதலை நம்பவில்லை? எதனால் அவர்கள் உயிர்த்தெழுதலை நம்பாதவர்களாக இருந்தனர்? இந்த கேள்விகளுக்கு பதில் கண்டுபிடித்தபின், இந்த வாசகம் நமக்குத்தரும் செய்தியைப் பார்ப்போம். அடிப்படையில் சதுசேயர்கள் “தோரா” என்று சொல்லப்படுகின்ற, முதல் ஐந்து புத்தகங்களை மட்டுமே நம்பினார்கள். ஆனால், பரிசேயர்கள் மற்ற புத்தகங்களையும் கடவுளால் ஏவப்பட்ட நூல்களாக நம்பினார்கள். முதல் ஐந்து புத்தகங்களில் உயிர்த்தெழுதல் பற்றிய வார்த்தைகள் இல்லை. இந்த உயிர்த்தெழுதல் பற்றிய எண்ணங்கள், சிந்தனைகள் தாமதமாகத் தோன்றியவை. எனவே, அவைகளைப் பற்றிய குறிப்பை நாம், தொடக்க புத்தகங்களில் பார்க்க முடியாது. இந்த வேறுபாடு தான், சதுசேயர்களையும், பரிசேயர்களையும் பிரிப்பதாக அமைந்தது. இதுதான் இவர்களை, ஒருவர் மற்றவர்க்கு எதிராக வேறுபடுத்திக் காட்டுவதாக...

உங்களை நம்ப முடியுமா?

லூக்கா 16:9-15 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். மனிதர்கள் பல விதங்களில் தங்களுடைய உண்மை நிலையை இழந்து வருகின்றனர். பல விதங்களில் பல வேடங்களை அணிகின்றனர். யாரையும் நம்ப முடியவில்லை என்பதுதான் பலரின் கூற்று. இது கிறிஸ்தவர்களுக்கு அழகல்ல. உண்மையை எடுத்துரைப்பதே என் பணி என்ற நமது ஆண்டவரின் பிள்ளைகளாகிய நாம் உண்மையுள்ளவர்களாக வாழ வேண்டும், நம்பிக்கைக்குரியவர்களாக சாட்சியம் பகர வேண்டும் என்பதே இன்றைய வாசகத்தின் அழைப்பு. நம்பிக்கைக்குரியவர்களாக மாற இரண்டு ஆசைகளை தவிர்க்க வேண்டும். 1. பணம் பணத்தின் மீது ஆசை கொண்டவர்கள் பெரும்பாலும் உண்மையுள்ளவர்களாக, நம்பக்கூடியவர்களாக இருப்பதில்லை. பணம் அவர்களை நடிக்க சொல்கிறது. பொய் சொல்ல வைக்கிறது. அவர்களின் பேச்சில் சுத்தம் இருப்பதில்லை. ஆளுக்கு...

செல்வத்தின் பயன்பாடு

செல்வத்தை எப்படி சரியான முறையில் கையாள வேண்டும் என்பதை, லூக்கா நற்செய்தியாளர் தன்னுடைய நற்செய்தியில் எழுதுகிறார். செல்வம் என்பது ஆசீர்வாதமாகவும் இருக்கலாம். அதேவேளையில் நமக்கு சாபமாகவும் மாறலாம். செல்வத்தை நாம் எப்படி கையாளுகிறோம் என்பதைப் பொறுத்துதான், நமது செல்வம் நமக்கு ஆசீர்வாதமா? அல்லது சாபமா? என்பதை நாம் முடிவு செய்யலாம். செல்வத்தை நமது சுயநலத்திற்காக, நம்மை பலப்படுத்துவதற்காக பயன்படுத்தினால், அது நமக்கு சாபம். மாறாக, செல்வத்தை மற்றவர்கள் பயன்பெறக்கூடிய வகையில் பயன்படுத்தினால், அது மிகப்பெரிய ஆசீர்வாதம். செல்வத்தை எப்படி பயன்படுத்தக்கூடாது என்பதை, அறிவற்ற செல்வந்தன் உவமை 12 வது அதிகாரத்திலும், ஏழை இலாசர் உவமை 16 வது அதிகாரத்திலும் நாம் பார்க்கலாம். செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை நல்ல சமாரியன் உவமை 10 வது அதிகாரத்திலும், சக்கேயு நிகழ்ச்சி 19 வது அதிகாரத்திலும் நாம் பார்க்கலாம். இந்த இரண்டு வெவ்வேறான தலைப்புகளுக்கு நடுவில் சற்று புரிந்து கொள்ள கடினமான பகுதிதான்,...

தேடு! கண்டுபிடி! கொண்டாடு!

லூக்கா 15:1-10 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். பரிசுத்த குழந்தையாய் வந்த நாம் வளர வளர பரிசுத்த தன்மையில் இருந்து விலகிவிட்டோம். அதனால் நல்ல பல குணங்கள், செயல்பாடுகள் நம்மை விட்டு விலகி விட்டன. காணாமல் போய்விட்டன. நல்ல குணங்கள் நம்மைவிட்டு காணாமல் போனதால் நாம் பெயரிழந்து நிற்கிறோம். இன்றைய வாசகம் உங்களிடமிருந்து காணமல்போன நல்ல குணங்களை தேடுங்கள்! கண்டுபிடியுங்கள்! கண்டுபிடித்து அதை அனைவரோடும் கொண்டாடுங்கள் என்கிறது. இரண்டு விதங்களில் நாம் அதை செய்யலாம். 1. கண்டுபிடி உங்கள் கையில் ஒரு பேப்பரும், பேனாவும் எடுங்கள். எழுத தயாராகுங்கள். நான் வைத்திருந்த நல்ல குணங்கள் என்னென்ன? இப்போது நான் எதையெல்லாம் தொலைத்திருக்கிறேன்? அனைத்தையும் பொறுமையாக இருந்து கண்டுபிடிக்க...