Tagged: தேவ செய்தி

துன்பங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்தும் கருவிகள்

யூதர்கள் தங்களை தூய இனத்தவராக கருதினர். அவர்கள் வேறு இனத்தவரிடம் பெண் கொடுப்பதுமில்லை. எடுப்பதுமில்லை. அவர்களோடு எந்த உறவும் வைப்பதில்லை. அப்படி எடுத்தால் அவர்கள் தூய யூத இனத்திலிருந்து விலக்கி வைக்கப்படுவார்கள். எடுத்துக்காட்டு. சமாரியர்கள். கானானியர்களுக்கும், யூதர்களுக்கும் தொடக்கத்தில் இருந்தே பகைமை உணர்வு இருந்து வந்தது. இயேசுவினுடைய பணி பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால், அவர் தன்னுடைய பணிவாழ்வின் எல்லையை குறுகிய வட்டத்தில் உறுதிப்படுத்த வேண்டும். ஆனால், தன்னுடைய பணிவாழ்வின் எல்லையை குறுகிய வட்டத்தில் உறுதிப்படுத்த வேண்டும். ஆனால், இங்கேயோ ஒரு புற இனத்துப்பெண் அவரிடத்திலே உதவி கேட்கிறாள். மறுக்கவும் முடியாது. எனவே, உதவுவதற்கு முன்னதாக அவளுடைய விசுவாசத்தை உறுதிப்படுத்த இயேசு முயற்சி எடுக்கிறார். அதனுடைய வெளிப்பாடு தான் இந்த உரையாடல். நம்முடைய வாழ்விலும் துன்பங்கள் வருகிறபோது, கடவுளைக்கடிந்து கொள்ளாமல், கடவுள் எதையாவது உணர்த்த விரும்புகிறாரா? என்று நம் வாழ்வை சுய ஆய்வு செய்து கொள்ள அழைக்கப்படுகிறோம். நமது வாழ்வில் நடப்பவை...

பயப்பட வேண்டாம்

பயம் என்பது இந்த மானிட வாழ்வின் அன்றாட நிகழ்வுகளுள் ஒன்று. நாம் பலவற்றிற்கு பயப்படுகிறோம். இன்றைய நற்செய்தி வாசகத்தின் சிந்தனையாக இந்த பயத்தை எடுத்துக்கொள்வோம். இதனை நாம் இரண்டு விதங்களில் சிந்திக்கலாம். எவற்றிற்கு பயப்பட வேண்டும்? எவற்றிற்கு பயப்படக்கூடாது? வாழ்வின் சவால்களுக்கு, வாழ்க்கையில் சந்திக்கும் சங்கடங்களுக்கு, வாழ்வின் தொல்லைகளுக்கு நாம் பயப்படக்கூடாது. பயப்படத் தேவையில்லை. மாறாக, நேர்மையற்ற செயல்பாடுகளில் நாம் ஈடுபடும்போது, பொய்மைக்கு துணைபோகிற போது, நாம் பயப்பட வேண்டும். நமது வாழ்க்கை இதற்கு முற்றிலும் முரணானதாக இருக்கிறது என்றால், அது மிகையாகாது. காரணம், நாம் சவால்களை, சங்கடங்களைக் கண்டு பயப்படுகிறோம். நேர்மையற்ற காரியங்களுக்கு துணைபோவதற்கு நாம் பயப்படுவது கிடையாது. இன்றைய நற்செய்தியிலும் இதே தவறுதான் நடக்கிறது. சீடர்கள் இயேசுவோடு இருந்திருக்கிறார்கள். பல பேய்களை இயேசு ஓட்டுவதை, கண்கூடாக கண்டிருக்கிறார்கள். புதுமைகளை அவர்களும் செய்திருக்கிறார்கள். ஆனாலும், அவர்கள் பயப்படுகிறார்கள். இயேசுவைக் கண்டே பயப்படுகிறார்கள். நேர்மையான காரியங்களில் நாம் ஈடுபடுகிறபோது, நிச்சயம் பல...

இயேசுவின் தனிமை

இயேசு படகிலேறி தனிமையான ஓரிடத்திற்குச் செல்கிறார். இப்போதுதான் அவரது உறவினர் திருமுழுக்கு யோவான் கொல்லப்பட்டிருக்கிறார். அவரது இறப்பு இயேசுவுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அந்த இறப்பு அவருக்குள்ளாக நிச்சயம் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியிருக்கும். ஏனென்றால், திருமுழுக்கு யோவான் எந்த அளவுக்கு நேர்மையானவர் என்பதை, இயேசு அறியாதவரல்ல. அவருக்கு நேர்ந்த கதி, நிச்சயம் தனக்கும் நேரும் என்பதை இயேசு உணர்ந்திருப்பார். அந்த உணர்வு அவருக்குள்ளாக பல கேள்விகளை உண்டுபண்ணியிருக்கும். இயேசு மக்களிடமிருந்து தனிமையான இடத்திற்குச் சென்றதற்கு மூன்று காரணங்கள் கொடுக்கப்படுகிறது. அவரின் பணிவாழ்வில் அவரது உடலுக்கு ஓய்வு தேவையாயிருந்தது. எப்படியும் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதற்காக அவர் சென்றிருக்கலாம். யோவான் கொலை செய்யப்பட்டிருக்கிற சூழலில் தனது உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம் என்று இயேசு நினைத்திருக்கலாம். யோவானின் இறப்பு, அவரது சிலுவை மரணத்தை நிச்சயம் நினைவுபடுத்தியிருக்கும். அந்த கலக்கம், கவலை, கண்ணீர், இயேசுவுக்கு தளர்ச்சியை கொடுத்திருக்க வேண்டும். எனவே, அவர் உடல் அளவிலும், உள்ளத்து அளவிலும், ஆன்ம...

இறைவனுக்கு பிரமாணிக்கமாய் இருப்போம்

திருச்சட்டத்தை கடவுள் மோசே வழியாக இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுத்தார். மோசே இஸ்ரயேல் மக்களால் பெரிதும் மதிக்கக்கூடியவர். எனவே தான் மத்தேயு நற்செய்தியாளர், இயேசுவை புதிய மோசேயாக ஒப்பிட்டு, தனது நற்செய்தியை எழுதுகிறார். அதேபோல், பழைய ஏற்பாட்டை நிறைவேற்ற வந்தவராகவும் சித்தரிக்கிறார். இஸ்ரயேல் மக்கள் மதிக்கக்கூடிய மற்றுமொரு மிகப்பெரிய மனிதர் எலியா. இறைவரக்கினர்களுள் மிகச்சிறந்த இறைவாக்கினராக, இஸ்ராயேல் மக்களால் கருதப்படுகிறவர். இவர்கள் இருவரும் இயேசு தனது சாவை முதல்முறையாக முன்னறிவித்தவுடன், இயேசுவோடு உரையாடுகிறார்கள். இந்த இரண்டு பெரிய இறைவாக்கினர்களோடு தந்தையாம கடவுளும் பூரிப்படைகிறார். இந்த இரண்டுபேரும் இங்கே தோன்றுவது ஒரு சிறந்த பொருளை நமக்குத்தருகிறது. அதாவது, திருச்சட்டத்தையும், இறைவாக்கினர்கள் முன்னறிவித்ததையும் இயேசு நிறைவேற்றுகிறவராக விளங்குகிறார் என்பதுதான் அது, மோசே திருச்சட்டத்தையும், எலியா இறைவாக்கினரையும் இங்கே பிரதிபலிக்கிறார்கள். கடவுள் வெறுமனே வார்த்தைகளைச்சொல்கிறவர் அலல, மாறாக, தன்னுடைய வாக்குறுதிகளுக்கு பிரமாணிக்கமாய் இருக்கிறவர் என்பதையே இது காட்டுகிறது. நமது கடவுள் வாக்குறுதி மாறாதவர், சொன்னதைச் செய்து முடிப்பவர்....

நன்மை செய்வதே வாழ்க்கை

”ஓய்வுநாளில் குணப்படுத்துவது முறையா? இல்லையா?” – என்பது கடினமான கேள்வி. பதில் சொல்ல முடியாத கேள்வியல்ல. ஆனால், பதில் சொல்ல தயங்கக்கூடிய கேள்வி. அப்படிப்பட்ட கேள்வியை இயேசு கேட்கிறார். நிச்சயம், பரிசேயர்களின் உள்ளத்தில், அதற்கான பதில் உடனே வந்திருக்கும். ”முறையல்ல” என்பதாகத்தான், அவர்களுடைய பதில் இருந்திருக்கும். ஆனாலும், சொல்லத் தயங்குகிறார்கள். ஏன்? அவர்களைப் பொறுத்தவரையில் அது சரியான பதிலாக இருந்தாலும், அவர்களின் பதில் மக்கள் மத்தியில் வெறுப்பைக் கொடுக்கும் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர். எனவே தான், அமைதியாக இருந்தனர். சாதாரண மக்களுக்கு தெரிந்த மனிதநேயம் கூட பரிசேயர்களுக்கு தெரியாதது வேதனையிலும் வேதனை. அவர்கள் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசினார்கள். சாதாரண பாமர மக்கள், மனிதநேயத்தைக் காப்பாற்றுவதுதான், சிறந்த ஒன்றாக இருக்கும் என எண்ணுகிறபோது, படித்த, அறிவாற்றலோடு விளங்குகிற பரிசேயர்கள், அதைப்பற்றிய சிந்தனையே இல்லாமல் இருப்பது, நிச்சயம் எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று. அதிகாரத்தில் இருக்கிறவர்களும், ஆணவத்தில் இருக்கிறவர்களும் இத்தகைய மனநிலையோடு தான் இருக்கிறார்கள்....