Tagged: தேவ செய்தி

ஆள்வதும் ஆளப்படுவதும்

மாற்கு 12: 1 – 12 பேராயம் புல்டன்ஷின் இவ்வாறு கூறுவார் “கோபத்தை நாம் ஆண்டால் சமூகத்தின் தீமைகள் மட்டிலான சாட்டையடியாகவும் பிறரைத் திருத்துவதற்கான வாய்ப்பாகவும் மாறுகிறது. கோபத்தால் நாம் ஆளப்பட்டால் அது உறவிற்கு ஊறு விளைவிக்கக்கூடியதாக மாறுகிறது. பயத்தை நாம் ஆண்டால் பாவங்கள் மற்றும் தவறான காரியங்களிலிருந்து நாம் ஒதுங்கியிருக்க அது உதவுகிறது. பயத்தினால் நாம் ஆளப்பட்டால் எல்லாவற்றையும் கண்டு பயந்து, மிரண்டு முயற்சி எடுக்காமல் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் வாழும் வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டு விடுகிறோம். அன்பை நாம் ஆண்டால் அது நல்ல உறவுகளைக் கட்டியெழுப்ப உதவுகிறது. உற்சாகப்படுத்த வேண்டிய நேரத்தில் மற்றவர்களை உற்சாகப்படுத்தி திருத்த வேண்டிய நேரத்தில் மற்றவர்களை திருத்தி நாமும் பிறரை வாழ வளர உதவுகின்றது என்று கூறுவார். இன்றைய உவமையில் வரும் பணியாளர் முதல் வகையான ஆளுமையைப் பெறுகின்றார். அதுதான் அவரை இன்னும் அதிகமான ஆசைக்கு இழுத்துச் செல்கின்றது. சிந்தித்து பார்த்தோமென்றால் தோட்டத்தின் உரிமையை பெறக்கூடிய...

இறைவன் நம்மோடு இருக்கிறார்

திருத்தூதர் பணி 18: 9 – 18 கடவுளுடைய பணியை நாம் செய்கிறபோது, எதற்கும் அஞ்சத்தேவையில்லை. இறைவன் நம்மோடு இருக்கிறார் என்கிற ஆழமான செய்தியை, இன்றைய வாசகம் நமக்குத் தருகிறது. கடவுளின் பணி என்ன? நன்மை செய்வது கடவுளின் பணி. ஏனென்றால், கடவுள் நன்மையே உருவானவர். அப்படி நன்மை செய்கிறபோது, நிச்சயம் தீமையின் மொத்த உருவமாக இருக்கிற அலகை, நமக்கு பல சோதனைகளைத் தருவதற்கு தனக்கு சாதகமாக இருக்கிறவர்களை வைத்து, நம்மை பயமுறுத்தும். அப்படிப்பட்ட தருணத்தில், ஆண்டவர் நம்மோடு இருப்பதாக நமக்கு வாக்குறுதி கொடுக்கிறார். பவுல் கொரிந்து நகரில் ஆண்டவருடைய வார்த்தையை அறிவித்தபோது, அவருக்கு பலவிதமான நெருக்கடிகள் யூதர்களிடமிருந்து வரத் தொடங்கியது. அதற்கு முன்னரே, ஆண்டவர் காட்சியில் பவுலுக்கு தோன்றி, உறுதியாகவும், துணிவோடும் இருக்குமாறு பணிக்கிறார். கடவுளைப் பணியைச் செய்வது என்பது சாதாரண காரியம் அல்ல. பலவிதமான போராட்டங்களும், நெருக்கடிகளும் நிறைந்த வாழ்வுதான், கிறிஸ்துவுக்காக வாழும் வாழ்வு. இயேசு இந்த உலகத்தில்...

அர்ப்பண வாழ்வு

திருத்தூதர் பணி 17: 15, 22 – 18: 1 திருத்தூதர் பவுல் முதன்முறையாக ஏதேன்ஸ் நகருக்குள் நுழைகிறார். கிறிஸ்தவ மறைப்பரப்பு பணியாளர்களிலேயே இவர் தான், முதலாவதாக இந்த நகரத்திற்குள் நுழைகிறார் என்று கூட சொல்லலாம். இந்த முதல் பயணம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது என்று நாம் சொல்லிவிட முடியாது. ஆனால், ஒரு சிலர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதை நாம்பார்க்கிறோம். ”சிலர் நம்பிக்கை கொண்டு அவர்களுடன் சேர்ந்து கொண்டனர்” (17: 34). ஏதேன்ஸ் மிகப் பிரபலமான நகரம் என்பது நாம் அறிந்ததே. பலத்திற்கும், அறிவாற்றலுக்கும் பெயர் போனது. மிகப்பெரிய அறிவாளிகளும், அரசர்களும் இங்கிருந்து வந்திருக்க வேண்டும். அல்லது ஏதேன்ஸ் தொடர்புடையவர்களாக இருந்திருக்க வேண்டும். கிறிஸ்து பிறப்பிற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர், எகிப்திய காலனியாக இருந்து வந்தது. “மினர்வா“ என்கிற கிரேக்க கடவுளின் பெயரால், இது ஏதேன்ஸ் என்கிற பெயர் பெற்றது. பவுல் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அவர்களுக்கு, அவர்களுடைய பிண்ணனியிலே அறிவிக்கிறார்....

இறைவனின் திருவுளம்

திருத்தூதர் பணிகள் 16: 22 – 34 கடவுளுடைய வழிகள் அற்புதமானவை. நாம் நம்ப முடியாதவை. பல நேரங்களில், நம்முடைய மனித பார்வையில் ஏற்றுக்கொள்ள முடியாதவை. ஆனால், காலம் கனிகிறபோது, நாம் கடவுளின் அன்பை உணர்ந்து மிகவும் வியப்படைகிறோம். கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம். அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொருநாளும், நம்முடைய வாழ்வில் நடக்கிற நிகழ்வுகளை எண்ணிப்பார்த்து, ஏன்? ஏன்? என்று, பல ”ஏன்”களை கடவுளிடம் கேட்டு சளிப்படைந்திருக்கிறோம். பதில் அறியாது திணறியிருக்கிறோம். ஆனால், ஒரு கட்டத்தில், அதற்கான பதில் நமக்கு வழங்கப்படுகிறபோது, இறைவனின் அன்பை எண்ணிப்பார்த்து, நாம் நடந்து கொண்ட விதத்திற்கு வருத்தப்படுகிறோம். இன்றைய வாசகத்தில், கடவுளின் வழிகள், நாம் ஆச்சரியப்படக்கூடிய இருப்பதை நாம் புரிந்து கொள்ளலாம். பவுலும் அவரோடு இருந்த சீடர்களும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். சிறையில் இருக்கிறவர்கள் வாய்ப்பு கிடைக்கிறபோது, நிச்சயம் தப்பிப்பதற்கு முயற்சி எடுக்கிறவர்களாகத்தான் இருப்பர். பவுலுக்கும், சீடர்களுக்கும் இயற்கையே அப்படிப்பட்ட வாய்ப்பைக் கொடுத்தும் அவர்கள் தப்ப நினைக்கவில்லை. அவர்களின்...

பவுலடியாரின் நம்பிக்கை வாழ்வு

திருத்தூதர் பணி 14: 19 – 28 தொடங்கியிருக்கிற பணியில், உறுதி கொண்ட கொள்கையில் பிடிப்போடு இருக்க வேண்டும் என்கிற வார்த்தைகளுக்கு முன்னோடியாக திகழக்கூடியவராக, பவுலடியார் இருப்பதை, இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. கிறிஸ்துவைப் பற்றி பல இடங்களுக்குச் சென்று அறிவித்து வந்த, பவுலடியாரின் போதனைகளுக்கு மக்கள் நடுவில் ஆதரவும் இருந்தது. எதிர்ப்பும் இருந்தது. எதிர்ப்பு என்பது சாதாரணமானதாக இல்லை. அவரை கொலை செய்ய செல்லும் அளவுக்கு இருந்தது. இன்றைய வாசகம் அப்படிப்பட்ட ஒரு நிகழ்வைத்தான் நமக்கு படம்பிடித்துக் காட்டுகிறது. அந்தியோக்கியாவிலிருந்தும், இக்கோனியாவிலிருந்தும் யூதர்கள் வந்து மக்களைத் தூண்டிவிட்டு, பவுல் மேல் கல் எறிந்தார்கள். அவர் இறந்துவிட்டார் என்றும் அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அவர்கள் நினைத்தது போல பவுல் இறக்கவில்லை. இந்த நிகழ்ச்சி நம்மில் ஒருவருக்கு நடந்திருந்தால், நம்முடைய அடுத்த சிந்தனை என்னவாக இருக்கும்? இனிமேல் இந்த பணி எதற்கு என்று, சோர்ந்துவிடுவோம் அல்லது சற்று உடல் தேறுகிறவரையில் ஓய்வு...