Tagged: Daily manna

அடையாளம் அவசியமா வேணுமா?

லூக்கா 11:29-32 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். ஆண்டவரை அடையாளத்திற்காக, அதிசயத்திற்காக மட்டும் நாம் தேடினால் ஏமாற்றம் தான் அதிகமாக வரும். அப்போது தான் நம் நம்பிக்கையில் இருள் படா்ந்து நிற்கும். அற்புதத்திற்காக தேடாமல் மனமாற்றம் பெறுவதற்காக தேடினால் அவரின் கட்டளைகளைக் கண்டிப்பாக நாம் கடைப்பிடிப்போம். ஆண்டவரிடம் அதிசயம், அற்புதம் கிடைக்கும் என எதிர்பார்ப்பவர்களிடம் இரண்டு தவறான பண்புகள் இருப்பதை இன்றைய நற்செய்தி வாசகம் அடிக்கோடிட்டு காட்டுகிறது. 1. அவநம்பிக்கை ஒருசிலர் ஆண்டவா் அதிசயம் செய்தால் தான் அவரை நம்புவேன். அவர் அதிசயம் செய்யவில்லை என்றால் ஆலயம் வரமாட்டேன். அவரை பார்க்கமாட்டேன். அவருக்கும் எனக்கும் தொடர்பில்லை என்ற எண்ணம் கொண்டிருப்பது மிகவும் தவறானது. இப்படிப்பட்டவர்களுக்கு நம்பிக்கையும் இருப்பதில்லை....

இயேசுவை தொடா்ந்து பின்பற்ற முடிகிறதா?

மாற்கு 10:17-30 இறையேசுவில் இனியவா்களே! பொதுக்காலம் 28ம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். சகோ. மோகன் சி. லாசரஸ் 1954 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாலுமாவடி என்னும் சிறு கிராமத்தில் பிறந்தார். முதலில் இவர் இந்து மதத்தின் பாரம்பரியத்திலும், நம்பிக்கையிலும் வளர்க்கப்பட்டார். அந்த சமயத்தில் இயேசுவை ஒரு மதத்தின் தலைவராக மட்டும் அறிந்திருந்தார். அவரது 14வது வயதில் நோய்வாய்ப்பட்டு இதயம் வீங்கி, முழு உடலும் செயலிழந்து கஷ்டப்பட்டார். அவரது குடும்பத்தினரும, நண்பர்களும் நம்பிக்கையற்ற நிலையில் இருந்தபோது தனது தாயார் கேட்டுக்கொண்டதின் நிமித்தம் திரு. சாமுவேல் என்ற குடும்ப நண்பர் ஜெபித்தபோது, ஒரு தெய்வீக வல்லமை அவரைத் தொட்டது. அவர் இயேசுவின் வல்லமையினால் பரிபூரண சுகம்பெற்று தன் படுக்கையை விட்டு எழுந்திருந்தார்....

பெற்றோருக்கு பெருமை சேர்த்ததுண்டா?

லூக்கா 11:27-28 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம் என்பது உண்மையே. தாயும், தந்தையும் தான் நம்மை இத்தரணி காண செய்தவர்கள். அவர்களே நம் முதல் தெய்வம். பெற்றோர் நம்மை சிறுவயது முதல் பெரியவனாகும் வரை தங்களின் அரவணைப்பில் வளர்த்து ஆளாக்குகின்றனர். பேச கற்றுத் தருகின்றனர். நடக்கக் கற்றுத் தருகின்றனர். மொத்தத்தில் நமக்கு முதல் ஆசான் நம் அன்னை, தந்தையே. இதற்கான நன்றி கடனை செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. என்ன நன்றிக்கடன்? நம் வாழ்வால், செயலால் அவர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும். ஆண்டவா் இயேசு பெற்றோருக்கு பெருமை சேர்த்ததுபோல நீங்களும் பெருமை சேருங்கள் என்ற உற்சாக வார்த்தைகளோடு வருகிறது இன்றைய...

எனக்கு நான் பகைவனா?

லூக்கா 11:15-26 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நாம் அடுத்தவரோடு நட்புறவில் அன்புறவில் வாழ்வதற்கு முன் நம்மோடு நட்புறவில் அன்புறவில் வாழ வேண்டும். நான் என்னோடு நட்புறவில் அன்புறவில் வாழவில்லை என்றால் வளர்ச்சி என்பது இருக்காது. வருத்தம் என்பது வந்து சோ்ந்துக்கொண்டே இருக்கும். நான் எனக்கு பகைவனாக இருக்கும்போது என்ன நடக்கும் என்பதை எடுத்து வைக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். 1. அரசு கவிழும் நான் நல்ல பாதையில் நடக்கவில்லை என்றால் என் அரசு கவிழும். இங்கு அரசு என்பது என் வாழ்க்கை. தீமையின் ஆட்சி எனக்குள்ளே நடக்கும் போது என் அரசை சரியாக என்னால் நடத்த முடியாது. ஆகவே நானே எனக்கு பகைவனாக மாறுகிறேன். என்...

விடாமல் விடாப்பிடியாக விரட்டு…

லூக்கா 11:5-13 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். எதையும் பெற வேண்டும் என்றால் தொடங்கிய முயற்சியை விடாமல் விடாப்பிடியாகத் தொடா்ந்து செய்யும் போது தான் வெற்றி என்பது கிடைக்கும். இறைவனிடம் இருந்து நாம் நம்முடைய வரங்களை பெற வேண்டும் என்றாலும் தொடர்ந்து விடாமல் விடாப்பிடியாக கேட்க வேண்டும். அதுதான் வரங்களை வாரி வழங்குகிறது. ஆகவே இன்றைய நாள் நாம் தொடங்குகிற முயற்சி, செயல் எல்லாம் தொடா்ந்து விடாமல் விறுவிறுப்பாக போகட்டும் என்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். அதை இரண்டு விதத்தில் நாம் ஆர்வமாக செய்யலாம். 1. முடியும் எதையும் செய்ய நம்மால் முடியும் என்ற உயா்ந்த எண்ணம் இருந்தாலே எல்லாவற்றையும் சிறப்பாக செய்ய முடிகிறது. எதையும் பின்வாங்காமல்...