Tagged: Daily manna

உப்பாக .. ஒளியாக.

உப்பு, உவர்ப்பு தன்மையும்; ஒளி, ஒளிர்விக்கும் தன்மையும் கொண்டது. தன்னுடைய குணத்தை செயல்படுத்துவதில் உப்பும் ஒளியும் ஒன்றுக்கொன்று ஈடு இணையானது. உப்பு, இருந்த இடத்தில் இருந்துகொண்டு, அது எவ்வளவு கடினமான இடமாக இருந்தாலும் தன்னைக் கரைத்து கசியவைத்து, தன் உவர்ப்புத் தன்மையை உட்புகுத்திவிடும். அதுபோல ஒளியும் தன் ஒளிக் கதிரை ஊடகங்கள் வழியாக ஒளி ஊடுறுவல்,ஒளி விலகல், ஒளி முறிவு, ஒளிச் சிதரல், ஒளி பிரதிபலித்தல் இப்படி எப்படியாவது தன் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். நீங்கள் உப்பு, நீங்கள் ஒளி. உங்கள் தாக்கத்தை நீங்கள் வாழும் சமுதாயத்தில் ஏற்படுத்துங்கள். உப்பைப்போல ஒளியைப்போல தன் நிலையில் திருப்தியடைய வேண்டும். ஆகா நான் உவர்ப்பாக அல்லவா இருக்கிறேன்; அடடா நான் வெப்பமாக அல்லவா இருக்கிறேன் என்று விரக்தியோ வேதனையோ அடையக் கூடாது. பாகற்காய் கசப்பாக இருப்பதில்தான் அதன் பெருமை. மாம்பழம் இனிப்பாக இருப்பதுதான் அதற்குச் சிறப்பு. இருப்பதில் திருப்தியடைந்து, நம்மிடம் இருக்கும் நம் தன்மையை எல்லோருக்கும்...

இறைவனின் திருவுளம்

திருத்தூதர் பணி 11: 21 – 26, 13: 1 – 3 ஸ்தேவான் கல்லெறிந்து கொல்லப்பட்ட பின்பு, கிறிஸ்தவர்களுக்கு எதிரான சித்ரவதைகள் அதிகமாயின. திருத்தூதர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் யூதேயா மற்றும் சமாரியா பகுதிகளுக்கு தப்பியோடினர் (8: 1). ஆங்காங்கு சிதறுண்டவர்கள் அமைதியாக இல்லை. மாறாக, தாங்கள் சென்ற இடங்களிலேயே நற்செய்தியை அறிவித்து வந்தனர்(8: 4). குறிப்பாக, பிலிப் அன்னகர் ஒருவருக்கு நற்செய்தியை விளக்கிக்கூறுவதைப் பார்க்கிறோம்(8: 5 – 40). சவுலின் மனமாற்றம்(9ம்அதிகாரம்) மற்றும் புறவினத்து மக்களுக்கான பேதுருவின் நற்செய்திக்குப்பிறகு(10ம் அதிகாரம்), மீண்டும் எருசலேம் நோக்கி அனைவருடைய பார்வையும் திரும்புகிறது. எருசலேமில் வாழ்ந்த யூத கிறிஸ்தவர்களுக்கு, புறவினத்து மக்களுக்கான தன்னுடைய நற்செய்தியையும், அவர்களின் மனமாற்றத்தையும் எடுத்துரைக்கிறார்(11: 18). ஸ்தேவானை முன்னிட்டு உண்டான துன்புறுத்தலால் மக்கள் பெனிசியா, சைப்பிரசு, அந்தியோக்கியா வரை சிதறிப்போயினர். (11: 19). அவர்கள் தாங்கள் சென்ற இடங்களில் நற்செய்தியை அறிவித்து வந்தனர். அவர்களது நற்செய்தியின் பொருட்டு, பெருந்தொகையான...

போற்றவும் தூற்றவும் கடந்து பணியில் நிலைப்போம்

இயேசு தம் வாழ்நாளில் எந்த அளவுக்குப் பாராட்டும் புகழ்ச்சியும் வணக்கமும் பெற்றாரோ, அந்த அளவுக்கு இகழ்ச்சியும், புரிந்துணர்வின்மையும், அவதூறும் பெற்றுக்கொண்டார் என்பது உண்மை. அந்த உண்மையெ மாற்கு அச்சமின்றி எழுதிவைத்திருக்கிறார். என்ன காரணம்? 1. நற்செய்தி அறிவிப்பாளரின், இறைவாக்கினரின், பேராளியின் பணியில் எதிர்ப்புகளும், ஏளன விமர்சனங்களும் எழத்தான் செய்யும். அதையெல்லாம் தூசு எனப் பறந்கள்ளிவிட்டு பணியைச் தொடரவேண்டும். யாராவது உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால், எங்கள் கால்களில் ஒட்டியுள்ள உங்கள் ஊர்த் தூசியையும் உங்களுக்கு எதிராக உதறிவிடுறோம் (லூக் 10:11) என்று சொல்லித் தம் பணியைச் தொடரச் சீடரைப் பணித்தார் அல்லவா! அந்த மனநிலையை இயேசுவும் கொண்டிருந்தார் என்று காட்ட. 2. பச்சை மரத்துக்கோ இவ்வாறு செய்கின்றார்கள் என்றால், பட்ட மரத்துக்கு என்னதால் செய்யமாட்டார்கள்? (லூக்கப 23:31) என இயேசுவே உரைக்கவில்லையா? எனவே நம் வாழ்வில் நாம் சந்திக்கின்ற அவதூறுகள் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம் என்று நமக்குச் சுட்டிக்காட்ட. எனவே யாராவது நம்மைப்...

மரியாளின் மாசற்ற இதயப்பெருவிழா

தொடக்கத்தில் மரியாளின் விண்ணேற்பு விழாவிலிருந்து, எட்டாம் நாள் இந்த விழா கொண்டாடப்பட்டது. ஆனால், இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்கு பிறகு, விழாவின் நாள் மாற்றப்பட்டது. சங்கத்தில் நடந்த வழிபாட்டு மறுசீரமைப்பிற்குப் பின் , இயேசுவின் திரு இதயப்பெருவிழாவிற்கு அடுத்த சனிக்கிழமை இது கொண்டாடப்படுகிறது. இந்த பக்திமுயற்சியை பரப்பிட முயற்சி எடுத்தவர் ஜாண் யூட்ஸ் என்பவர். இவர்தான் இயேசுவின் திரு இதயப்பக்தியையும் பரப்பிட அனைத்து முயற்சிகளையும் எடுத்தவர். கி.பி 1860 ல் மரியாளின் மாசற்ற இதயத்திற்கான வணக்கத்தை ஏற்படுத்தினார். அன்னைமரியாள் மீது மக்கள் கொண்டிருந்த பக்தி, அவரது பரிந்துரையின் மூலமாக பெற்றுக்கொண்ட பல்வேறு நலன்கள், இவற்றின் மூலமாக இந்த பக்திமுயற்சி வெகு எளிதாக அனைத்து இடங்களுக்கும் பரவியது. திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ் 1944 ம் ஆண்டு, இந்த திருவிழாவை உலகம் முழுவதும் கொண்டாடும்படியாக அறிமுகப்படுத்தினார். மீட்பின் வரலாற்றில் மிகப்பெரும் பங்காற்றுவதற்கு, தனது வாழ்வையே தியாகம் செய்தவர்தான் அன்னை மரியாள். நம் அனைவருக்கும் மீட்பு கிடைப்பதற்கு...

இறைவன் நம்மீது காட்டும் அன்பு

ஓசேயா 11: 1, 3 – 4, 8 – 9 முற்காலத்தில் பாரசீகம் மற்றும் கிரேக்க நாடுகள் அவ்வப்போது, கடுமையான போர்களில், ஒருவருக்கு எதிராக ஈடுபட்டனர். எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், கிரேக்க வீரர்களே எப்போதும் வெற்றி பெற்றனர். இதுஎப்படி சாத்தியம்? பாரசீக வீரர்களில் பெரும்பாலானவர்கள் அடிமைகள். அந்த போரில் ஈடுபடும்படி கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டனர். வேறு வழியில்லாமல் அந்த போரில் அவர்கள் ஈடுபட்டனர். ஆனால், கிரேக்க வீரர்களோ தங்கள் நாட்டிற்காக, தங்கள் நாட்டு மக்களை காப்பாற்றுகிறோம் என்கிற, உணர்வோடு போரிட்டனர். எனவே தான், எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், அவர்கள் வெற்றி பெற்றனர். தங்கள் தாய்நாட்டின் மீது கொண்டிருந்த பாசம், அந்த போரில் எப்படியும் வெற்றி பெற்று தங்கள் நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தை அவர்களுக்குள் ஏற்படுத்தியது. இந்த உவமையை நாம் இஸ்ரயேல் மக்களுக்கும், கடவுளுக்கும் இடையேயான உறவிற்கு பொருத்திப் பார்க்கலாம். கடவுள் தன்னை இஸ்ரயேல் மக்களோடு அன்புறவில்...