Tagged: Daily manna

சொல்லுமில்லை, பேச்சுமில்லை

திருப்பாடல் 19: 1 – 2, 3 – 4 இயற்கையின் சிறப்பை, கடவுளின் கைவண்ணத்தை திருப்பாடல் ஆசிரியர் புகழ்ந்து பாடுகிறார். மனிதர்கள் அதிகமாக பேசுகிறார்கள். தங்களை எப்போதும் உயர்வாகவே பேசுகிறார்கள். அவர்கள் தங்களுடைய வார்த்தைகளுக்கு அதிகமான முக்கியத்துவத்தைக் கொடுக்கிறார்கள். அவர்களுடைய செயல்பாடுகளை அவர்களின் பேச்சோடு ஒப்பிட்டுப் பார்க்கிறபோது, சொற்கள் தான் அதிகமாக இருக்கிறது, செயல்பாடுகள் சொல்லக்கூடிய அளவில் இல்லை. திருப்பாடல் ஆசிரியர் இயற்கையிடமிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய பாடமாக நமக்கு மிகப்பெரிய செய்தியைத் தருகிறார். இயற்கைக்கு சொல்லுமில்லை, பேச்சுமில்லை. ஆனால், தங்களுடைய செயல்பாடுகளால் அவை கடவுளின் மாட்சிமையை பறைசாற்றுகின்றன. கடவுளுக்கு தங்களது நன்றியுணர்வை எடுத்துரைக்கின்றன. கடவுளைப் பற்றிப்பிடித்துக் கொண்டு, கடவுள் தங்களுக்கு கட்டளையிட்டவாறே பணிகளைச் செய்து முடிக்கின்றன. தாங்கள் செய்ய வேண்டிய பணிகளை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்து முடிக்கின்றன. அவற்றைச் செய்து முடிப்பதில் மகிழ்ச்சி கொள்கின்றன. நம்முடைய வாழ்வில், நாம் பேசுகிற வார்த்தைகளைக் குறைத்துக்கொண்டு நன்றிக்குரியவர்களாக வாழ்வோம். நம்முடைய செயல்பாடுகள் நம்முடைய...

இயேசுவின் துணிவு

கடவுளின் பணியாளர்களிடம் பகைமை பாராட்டுவதும், அவர்களை எதிரிகளாக பாவிப்பதும் இன்றைக்கு நேற்றல்ல, நூற்றாண்டுகளுக்கு முன்னரே இது தொடர்ந்து வருகிறது. கடவுளின் பணியாளர்களை மிரட்டுவதும், அவர்களை அவமானப்படுத்துவதும் தொடக்க காலத்திலிருந்தே, வரலாற்றில் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. அப்படி எதிர்ப்புக்கள் வருகிறபோது, அதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? என்பதற்கு இயேசு சிறந்த எடுத்துக்காட்டு. பரிசேயர்கள் சிலர், இயேசுவின் மீது நல்லெண்ணமும், அன்பும் கொண்டவர்கள் தங்களுக்குக் கிடைத்த தகவலைக்கொண்டு, இயேவிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். அவருக்கு எதிராக தீட்டப்பட்டிருக்கிற சதித்திட்டங்களை, அவரிடத்தில் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்டதும், இயேசு பயந்துவிடவில்லை. ஓடிவிடவும் இல்லை. துணிவோடு எதிர்க்கிறார். தவறை, தவறு என்று சுட்டிக்காட்டும் வலிமை, வல்லமை இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். எதிர்கொள்கிற பிரச்சனையில் வெற்றி, தோல்வி பற்றி கவலையில்லை. இறுதிவரை நிலைத்து நிற்க வேண்டும். நியாயத்திற்காக, நீதிக்காக நிற்க வேண்டும். அதுதான், இயேசுவின் வாழ்வு நமக்குக் கற்றுத்தரும் பாடம். வாழ்க்கையில் சவால்களை துணிவோடு சந்திக்க, இயேசுவின் வாழ்க்கை...

நிமிர்ந்து கடவுளைப் போற்று…

லூக்கா 13:10-17 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். திருப்பாடல் 103:2 இவ்வாறு சொல்கிறது, “என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே!” கடவுள் நாம் கருவான நாள் முதல் இந்நாள் வரை பல கனிவான செயல்களால் நம்மை கண்ணின் கருவிழிபோல காத்து வருகின்றார். அவரை நாம் போற்ற வேண்டும், கடவுளை எப்படி போற்ற வேண்டும் என்பதை தீய ஆவியிலிருந்து நலம் பெற்ற நபர் இன்றைய நற்செய்தியில் நமக்கு கற்றுத்தருகிறார். நிமிர்ந்து பார்த்து ஆண்டவருக்கு நன்றி சொல்ல வேண்டும். நிமிர்ந்துப் பார்த்து அவரைப் போற்ற வேண்டும். கடவுளைப் போற்ற இரண்டு வழிமுறைகள் சிறந்த வழிமுறைகளாக தென்படுகின்றன. 1. சத்தமாக ஜெபிப்பது முன்னர் சத்தமாக ஜெபங்களை...

கடிகாரத்தைப் பார்! ஓடுவது முள் அல்ல உன் வாழ்க்கை

லூக்கா 12:54-59 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். “ஒரு பவுண்ட் தேனை சேகரிக்க, தேனீ இருபது லட்சம் மலர்களைத் தேடிச்செல்கிறது”. வாழ்க்கையை நேசிப்பவர்கள், நேரத்தை நிச்சயமாக நேசிப்பார்கள். ஏனெனில் வாழ்க்கை நேரத்தால் ஆனது. நேரத்தின் மதிப்பு தெரியுமா? அப்படியானால் வாழ்க்கையின் மதிப்பும் தெரியும். இன்றைய நற்செய்தி வாசகம் காலத்தின் மதிப்பை நமக்குக் கற்றுத் தருகிறது. ஆகவே கேளுங்க.. கேளுங்க நற்செய்தி வாசகத்தை நல்லா கேளுங்க. மாறுங்க இன்றே மாறுங்க.. காலத்தை சரியாக பயன்படுத்தும்போது இரண்டு சாகசங்களை நாம் செய்ய முடிகிறது. 1. சமாதானம் செய்ய முடிகிறது எதிரியோடு சண்டை என்றால் சரியாக நேரத்தை பயன்படுத்தும் போது அங்கே சமாதானம் அறுவடை செய்யப்படுகிறது. எல்லா பகைவர்களையும் இந்த சரியான...

அக்டோபர் மாத அதிர்ச்சி…

லூக்கா 12:49-53 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். மண்ணுலகில் தீமூட்டவே வந்தேன் என்ற வார்த்தையோடு இன்றைய நற்செய்தி வாசகம் ஆரம்பமாகிறது். ஆரம்பமே அதிரடி அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த வார்த்தைதான் அக்டோபர் மாத்திற்கான அதிரடி அதிர்ச்சியாகும். தீமூட்ட இந்த வார்த்தை எதிர்மறையானது அல்ல. மாறாக நேர்மறையானதும் நம்மை நேராக்க கூடியதும் இந்த வார்த்தைதான். எப்படி? இந்த நெருப்பு அல்லது தீ என்ற வார்த்தை இயேசுவைக் குறிக்கிறது. இயேசு என்ற நெருப்பிடம் நாம் நெருங்கி வரும்போது பல வல்ல செயல்கள் நடக்கின்றன. அவற்றுள் மிக முக்கியமான இரண்டு. 1. எரிக்கிறது நெருப்பின் மிக முக்கியமான பணி எரி்ப்பது. அசுத்தத்தை எரித்து அழகை அளிப்பது. இயேசு என்ற நெருப்பு நமக்குள் இருக்கும்...