Tagged: Daily manna

கொடுப்பதை இறையாசீராக எண்ணுவோம்

யூதர்களுக்கு என்று ஒரே ஒரு ஆலயம் தான். அதுதான் யெருசலேம் தேவாலயம். மற்றநாட்களில் செபிப்பதற்கும், இறைவார்த்தையைக் கேட்பதற்கும் அவர்கள் செபக்கூடங்களைப் பயன்படுத்தினர். யெருசலேம் ஆலயத்தை நிர்வகிப்பதற்கு ஏராளமான பணம் தேவைப்பட்டது. ஏனெனில், ஒவ்வொருநாளும் காலையிலும், மாலையிலும் இளம்செம்மறி ஆடு பலியிடப்பட வேண்டும். பலிப்பொருளுக்கு ஏராளமான மாவும், எண்ணெயும் தேவைப்பட்டது. சாம்பிராணியும், குருக்களுக்கான ஆடம்பர உடைக்கும் செலவு அதிகமாக இருந்தது. இவற்றிற்கெல்லாம் பணம் வேண்டும். இவற்றிற்கெல்லாம் பணம் வேண்டும். எனவேதான், விடுதலைப்பயணம் 30: 13 கூறுவது போல, 20 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் ஒவ்வொருவரும், வருடத்திற்கு ஒருமுறை 2 திராக்மா, கோவில் வரியாக செலுத்த வேண்டும். இது இரண்டு நாள் கூலிக்கு இணையான கிரேக்க வெள்ளி நாணயம். ஒவ்வொரு ஆண்டும், ஆதர் மாதத்தில்(நமக்கு மார்ச் மாதம்), பாலஸ்தீன நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், கோவில் கட்டுவதற்கென நினைவூட்டும் அறிவிப்பு சொல்லப்படும். 15 வது நாளில் கோவில் வரி கட்டுவதற்கென ஒவ்வொரு ஊரிலும் அலுவலகங்கள் திறக்கப்படும்....

கவலைகளைத் தவிர்த்து அவரில் நம்பிக்கை வைப்போம்

”சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்” என்று திருப்பாடல் 23: 4 சொல்கிறது. கடவுள் மீது முழுமையான நம்பிக்கை வைத்து வாழ்கிறவர்களின் வாழ்க்கை மட்டும்தான் நிறைவுள்ள வாழ்வாக இருக்க முடியும். துன்பங்கள், துயரங்கள், கவலைகள் இவையனைத்தும் வாழ்வின் அங்கம். இதுதான் வாழ்க்கை. அந்த துன்பங்களை எதிர்கொள்வதற்கான ஆற்றலைக் கடவுள் நமக்கு தருகிறார். துன்பங்களை நாம் எதிர்கொள்ள வேண்டுமென்றால், நம்முடைய ஆற்றலில், திறமையில் நம்பிக்கை வைக்காமல், கடவுளின் வல்லமையில் நம்பிக்கை வைக்க வேண்டும். கடவுளின் வல்லமையில் நம்பிக்கையில் வைத்தவர்கள் ஒருபோதும் கைவிடப்பட மாட்டார்கள் என்பது இஸ்ரயேல் மக்களின் வாழ்விலிருந்து நாம் அறிந்துகொள்ளக்கூடிய மிகப்பெரிய பாடமாக இருக்கிறது. இதையே புனிதர்களின் வாழ்வும் நமக்கு பறைசாற்றுகிறது. ஒவ்வொரு புனிதர்களுமே, துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், அந்த துன்பங்களுக்கு நடுவிலும் அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்தார்கள். காரணம், அவர்கள் கடவுள் மீது வைத்திருந்த ஆழமான நம்பிக்கை. ”துணிவோடிருங்கள்” என்ற...

நம்பிக்கையினால் வாழ்வு !

கி.மு. 600 ஆம் ஆண்டையொட்டி யூதா நாட்டில் வாழ்ந்த இறைவாக்கினர்தான் அபக்கூக்கு. வடக்கிலிருந்து பாபிலோனியர்கள் படையெடுத்து வந்து தாக்கும் ஆபத்து எப்போதும் சூழ்ந்திருந்தது. யூதாவிலோ நாட்டின் ஒற்றுமையும், நீதியும் குலைந்து, வலியோர் எளியோரை ஒடுக்கிக்கொண்டிருந்தனர். இத்தகைய சூழலில்தான் அபக்கூக்கு இறைவாக்குப் பணியில் ஈடுபடுகிறார். கயவர்களை ஏன் இறைவன் தண்டிக்காமல் விட்டுவைக்கிறார்? பொல்லாதவர்கள் நேர்மையாளர்களை விழுங்கும்போது இறைவன் ஏன் மௌனமாய் இருக்கிறார்? என்னும் கேள்விகளை அபக்கூக்கு எழுப்பி, அவற்றுக்கு விடை காண முயல்கிறார். பன்னெடுங்காலமாக மானிட இனத்தைத் தட்டி எழுப்பும் கேள்வி அல்லவா இது! ஏன் இந்த உலகில் தீமை? ஏன் தீயவர்கள் தழைக்கிறார்கள், நல்லவர்கள் துன்புறுகிறார்கள்? இக்கேள்விக்கு விடை காண முயலும் இறைவாக்கினருக்கு ஆண்டவர் தரும் பதில்: நம்பிக்கையோடிருங்கள். எனவேதான், மிகப் பிரபலமான இந்த வார்த்தைகளோடு இன்றைய முதல் வாசகம் நிறைவுக்கு வருகிறது: “நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர்”. மன்றாடுவோம்: நம்பிக்கையின் நாயகனே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நேர்மையுடையவர்கள் தம் நம்பிக்கையினால்...

வாழ்வு என்னும் கொடையைப் போற்றுவோம்

இழப்பீடு என்பது இழப்பிற்கு சமமான ஒன்றைக் கொடுப்பதாகும். நாம் ஏதாவது பொருளை இழந்து விட்டால், அல்லது மழை, வெள்ளத்தில் நமது பொருட்களை இழந்துவிட்டால், அரசாங்கம் நமக்கு இழப்பீடு தருகிறது. அரசாங்கம் தரக்கூடிய இழப்பீடு நூறில் ஒரு பங்குக்கு கூட சமமாகாது என்பது வேறு கதை. ஆனால், இழப்பீடு வழங்குகிறது. அதேபோலத்தான், விபத்திற்கென்று இழப்பீடு, மருத்துவ இழப்பீடு என்று, இதில் பல வகைகள் அடங்கியிருக்கிறது. ஆக, ஒன்றிற்கு ஈடாக, அல்லது ஈடுபடுத்தும்விதமாகக் கொடுக்கப்படுவதுதான் இழப்பீடு என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இன்றைய நற்செய்தியில் வாழ்விற்கு ஈடாக எதை நாம் கொடுக்க முடியும்? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. பொருட்களுக்கு இழப்பீடாக பணத்தைக் கொடுத்துவிடலாம். ஆனால், இழப்பீடு தர முடியாத ஒன்று இருக்கிறது என்றால், அது நிச்சயம் வாழ்வு தான். பொன் கோடி கொடுத்தாலும், பதவி, புகழ், அந்தஸ்து பெற்றாலும், நமது வாழ்வை இழந்துவிட்டால், அவ்வளவுதான். இந்த உலகத்தில் ஒன்றுமே இல்லை. எனவே, வாழ்வை பாதுகாப்போடு,...

இயேசு காட்டு புதிய வாழ்வியல் நெறிமுறை

இயேசு தான் வாழ்ந்த காலத்திலே ஒரு புதிய வாழ்க்கை முறையைக் கொண்டு வருகிறார். இதுவரை உலகம் கருதியவற்றிலிருந்து, அவர் கொண்டு வந்திருந்த வாழ்க்கை முறை முற்றிலும் மாறுபட்டு இருந்ததால், யூதர்களால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மாறாக, அது கேலி செய்யப்பட்டது. அந்த புதிய வாழ்க்கை முறைதான் இயேசுவின் சாவுக்கும் காரணமாக அமைந்தது. இயேசு உயிரோடு வாழ்ந்தது வரை, அவருடைய புதிய வாழ்க்கை முறை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இயேசுவிடமிருந்து வல்லமையைப் பெற்றுக்கொண்ட நோயாளிகளும், அவருடைய குணப்படுத்துகின்ற ஆற்றலை வியந்து பார்த்தவர்களும், அவருடைய போதனையை வேறுபாடாகத்தான் பார்த்தனர். இயேசுவின் புதிய வாழ்க்கை முறை தத்துவத்தை அவர்கள் அப்படிப் பார்த்ததற்கும், காரணம் இல்லாமல் இல்லை. அவர்கள் வாழ்ந்த சூழல் அப்படித்தான் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்திருந்தது. இயேசு மகிமை என்பதை சிலுவையின் வழியாகப் பார்த்தார். மக்களோ அடுத்தவரைப் போரில் வெல்வதாகவும், அதிகாரத்தைக் கைப்பற்றுவதாகவும் பார்த்தனர். உயிர்விடுதலை மக்களுக்கு வாழ்வு தரும் கொடையாக, மிகப்பெரிய தியாகமாக இயேசு பார்த்தார். மக்களோ அதை கோழைத்தனமாகப்...