Tagged: Pongal wishes

இனிய பொங்கல் விழா நல்வாழ்த்துக்கள்

அன்பார்ந்த  இணையதள வாசகர் ஒவ்வொருவருக்கும் எங்கள் அன்பின் இனிய பொங்கல் விழா நல்வாழ்த்துக்கள். ஆண்டவர் மோசேயிடம் கூறியது என்னவென்றால் நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது; நான் உங்களுக்கு கொடுக்கும் நாட்டில் நீங்கள் வந்து வெள்ளாண்மை வைத்து அதை அறுவடை செய்யும் பொழுது அறுவடையின் முதல் விளைச்சலான ஒரு கதிர்க்கட்டினைக் குருவிடம் கொண்டுவர வேண்டும்.உங்கள் சார்பாக ஏற்கத்தக்கதாக குரு அந்த தானியக் கதிர்க்கட்டினை ஆண்டவரின் திருமுன் ஆரத்திபளியாகவும்,மிருதுவான மாவை எண்ணெயில் பிசைந்து ஆண்டவர் விரும்பும் நறுமணமிக்க எரிபலியாகவும்,செலுத்துங்கள், என்று லேவியர் 23ம் அதிகாரத்தில் 9லிருந்து 14 வரை உள்ள வசனங்களில் வாசிக்கிறோம். இந்த 23ம் அதிகாரம் பாஸ்கா, பெந்தகோஸ்தே, கூடாரப்பெருவிழா,  புத்தாண்டுவிழா, பாவக்கழுவாய் நாள் ஆகிய சமயப் பெருவிழாக்கள் பற்றி கூறுகிறது.இந்த விழாக்களுக்கு மக்களைக் கடவுள் அழைத்து அவர்களை திருப்பேரவையாக ஓன்று சேர்க்கிறார். பாஸ்கா, என்றால் இஸ்ரவேலர் ஆடுமாடு மேய்ப்பவர்கள் என்ற முறையில் ஓர் ஆட்டை பலியாக்கும் பெருவிழாவாகவும், வாற்கோதுமை அறுவடையின் தொடக்கவிழாவாகவும், நம் நாட்டில் இப்பொழுது நாம் கொண்டாடும் பொங்கல் விழாவைப் போன்ற ஓர் உழவர் திருவிழா...