Tagged: today’s verse in tamil

பரிந்து பேசுகிற நம் தந்தை

கடவுளுக்கு மிகவும் பிரியமான அன்பான செல்வங்களே!!!      இன்று நீங்கள் எனக்காக பரிந்து பேச யாருமில்லையே! என்று கவலைப்படுகிறீர்களா? நான் என்ன செய்தாலும் அதில் குறை, குற்றம்,என்று சொல்கிறார்களே என்று கலங்கித் தவிக்கிறீர்களா?      உங்களுக்காக பரிந்து பேசுகிற ஒருவர் உண்டு, என்பதை நீங்கள் யாவரும்  தெரிந்து கொள்ள வேண்டும், என்று விரும்புகிறேன். அவரே நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து. 1 யோவான் 2 :1 மற்றும் 2 என்ற வசனத்தை வாசித்து பார்ப்போமானால் நன்கு விளங்கும்.     அதுமட்டுமல்ல, நாம் அறிந்தோ,அறியாமலோ, செய்யும் பாவங்களை நமக்கு மன்னித்து விண்ணுலகின் தந்தையிடம் பரிந்து பேசி நமக்கு எல்லா கவலைகளிலும் இருந்து விடுதலை வாங்கித் தருகிறார்.அவரை ஏற்றுக்கொண்டு அவரையே நம்புவீர்களா? பிள்ளைகளே, தந்தையரே, தாய்மார்களே, வாலிப சகோதரரே,  சகோதரிகளே, சிறுவர்களே, நீங்கள் யாவரும் கடவுளின் கடவுளின் வார்த்தையில் நிலைத்திருங்கள். 1 யோவான் 2 :12லிருந்து 17 வரை உள்ள வார்த்தைகளை தியானியுங்கள். உலகின் மீதும் அதில் உள்ளவை மீதும் அன்பு...