Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

சாமுவேல் - முதல் நூல்

அதிகாரம் 30

அமலேக்கியரோடு போர்
1 மூன்றாம் நாள் தாவீது அவர் தம் ஆள்களும் சிக்லாவை அடைவதற்குள் அமலேக்கியர் நெகேபு: சிக்லாகு ஆகிய பகுதிகளைக் கொள்ளையடித்தனர். சிக்லாவைத் தாக்கி தீக்கிரையாக்கினார்.2 அங்கிருந்த பெண்கள் சிறியோர் பெரியோர் அனைவரையும் சிறைப்பிடித்து, ஒருவரையும் கொன்றுவிடாமல், அவர்களை கூட்டிக் கொண்டு தங்கள் வழியே சென்றனர்.3 தாவீதும் அவர்தம் ஆள்களும் நகருக்கு வந்த போது அது நெருப்பினால் அழிக்கப்பட்டிருப்பதையும், தங்கள் மனைவியர், புதல்வர் மற்றும் புதல்வியர் சிறைப்பட்டிருப்பதையும் அறிந்தார்.4 அப்பொழுது தாவீது அவருடன் வந்த மக்களும் வலிமை உள்ள மட்டும் ஓலமிட்டு அழுதனர்.5 தாவீதின் இருமனைவியரான இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாமும், கர்மேலைச் சார்ந்த நாபாலின் கைம் பெண்ணான அபிகாயிலும்கூடச் சிறைக்கப்பட்டிருந்தனர்.6 தாவீது மிகவும் மன வருத்தமடைந்தார்: வீரர் அனைவரும் தங்கள் புதல்வர் புதல்வியர் பொருட்டு மிகவும் துயருற்றதால் அவரைக் கல்லால் எறிய வேண்டும் எனப் பேசிக் கொண்டனர். ஆனால் தாவீது கடவுளாகிய ஆண்டவரின் வலிமைப் பெற்றிருந்தார்.7 பின்பு தாவீது, அகிமலக்கின் மகன் அபயத்தாரிடம் ஏபோதை என்னிடம் கொண்டுவாரும்! என்று கூறவே அபியத்தார்ஏபோதைக் தாவீதிடம் கொண்டு வந்தார்.8 அப்பொழுது தாவீது, நான் கொள்ளைக் கூட்டத்தாரைப் பின் தொடரட்டுமா? நான் வெற்றி கொள்வேனா? என்று ஆண்டவரிடம் வினவினார். அதற்கு அவர் பின்தொடர்! நீ வெற்றியடைவது உறுதி! என்று பதிலளித்தார்.9 ஆதலால் தாவீது அவருடன் இருந்த அறுநூறு பேரும் புறப்பட்டு, பெசோர் என்ற ஓடைக்கு வந்தார். களைப்படைந்தோர் அங்கேயே தங்கிவிட்டனர்.10 எனவே தாவீது அவர்களை நானூறு பேரோடு அவர்களை பின்தொடர்ந்தார்: களைப்படைந்த இருநூறு பேர் பெசோர் ஓடையை கடக்க இயலாமல் அங்கேயே தங்கிவிட்டார்.11 வயல் nவிளயில் ஓர் எகிப்தியனை கண்டு, அவனைத் தாவீதிடம் அழைத்து வந்தனர்: உண்பதற்கு அப்பமும் குடிப்பதற்கும் தண்ணீரும் கொடுத்தார்.12 மேலும் அவர்கள் அத்திப்பழ அடையின் ஒருத் துண்டையும், வற்றலான திராட்சைப்பழ அடைகள் இரண்டையும் அவனுக்கு கொடுத்தார். அவன் இதை சாப்பிட்டப்பின் புத்துயிர் பெற்றான். ஏனெனில் அவன் இரவு பகல் மூன்று நேரமும் உண்ணாமலும், தண்ணீர் குடிக்காமலும் இருந்தான்.13 தாவீது அவனை நோக்கி, நீ யாரைச் சேர்ந்தவன்? எங்கிருந்து வருகிறாய்? என்று கேட்டார். அதற்கு அவன், நான் ஒர் எகிப்திய இளைஞன்: ஓர் அமலேக்கிய மனிதன் பணியாள்: நான் நோயுற்றதால் மூன்று நாள்களுக்கு என் தலைவர் என்னை விட்டுச் சென்றார்.14 நாங்கள் கிரேத்தியரின் தென்பகுதியையும், யூதாவின் தென்பகுதியையும் காலேபின் தென்பகுதியையும் கொள்ளையடித்துச், சிக்லாவைத் தீக்கிரையாக்கியிருக்கிறோம் என்று பதிலளித்தான்.15 தாவீது அவனிடம் அக்கொள்ளைக் கூட்டத்தாரிடம் என்னை அழைத்துச் செல்வாயா? என்று கேட்க என்னைக் கொல்லவோ அல்லது என்னை என் தலைவனிடம் ஒப்புவிக்கவோமாட்டீர் என்று ஆண்டவர் பெயரால் என்னிடம் ஆணையிட்டுக் கூறுங்கள்: அப்பொழுது அக்கூட்டத்தாரிடம் உங்களை அழைத்துச் செல்வேன் என்றான்.16 அவ்வாறே அவன் தாவீதை அழைத்துச் சென்ற போது, இதோ, தாங்கள் பெலிஸ்தியர் நாட்டினின்றும் யூதா நாட்டினின்றும் கொண்டு வந்த கொள்ளைப் பொருள்களை முன்னிட்டு அவர்கள் வெளியில் கும்பல் கும்பலாய் உண்டு குடித்து, நடனமாடிக் கொண்டிருந்தனர்.17 தாவீது அன்று காலை தொடங்கி மறுநாள் வரை அவர்களோடு போரிட்டார்: ஒட்டகங்கள் மீது ஏறிய நானூறு வீரர்களைத்தவிர அவர்களுள் ஒருவனும் தப்பவில்லை.18 அமலேக்கியர் கொண்டு சென்ற எல்லாவற்றையும், தாவீது மீட்டதுடன், தம் மனைவியர் இருவரையும் விடுவித்தார்.19 அவர்கள் சிறைப்பிடித்த ஒருவருள் சிறுவரோ முதியவரோ புதல்வரோ புதல்வியரோ எவரும் விடுபடாமல் அவர் மீட்டார். கொள்ளைப் பொருள்கள் அனைத்தையும் தாவீது மீட்டுக கொண்டு வந்தார்.20 ஆடு மாடுகள் எல்லாவற்றiயும் தாவீது கைப்பற்றினார். அந்தக் கால்நடைகளைத் தாவீதுக்குமுன் ஓட்டிவந்த மக்கள் இது தாவீதின் கொள்ளைப் பொருள் என்றார்.21 பின்பு களைப்பு மிகுதியினால் தாவீதைப் பின்தொடராமல் பெசோர் ஓடை அருகே தங்கிவிட்ட இருநூறு பேரிடம் தாவீது வந்தார்: அப்போது தாவீது அவரிடம் இருந்த மக்களையும் சந்திக்க எதிர் கொண்டு வந்தார். தாவீது மக்களை நெருங்கிபோது அவர்களுக்கு நல்வாழ்த்துக் கூறினார்.22 ஆனால் தாவீதோடு சென்றவர்களில் இருந்த தீயவர் மற்றும் கயவர் எல்லாரும், அவர்கள் நம்முடன் வராததால் நாம் மீட்டுக் கொண்டு வந்த கொள்ளைப் பொருள்களை ஒன்றும் அளிக்க மாட்டோம்: அவர்களுள் ஒவ்வொருவரும் தம் மனைவியையும் பிள்ளைகளையும் மட்டும் அழைத்துச் செல்லட்டும் என்றார்.23 அதற்கு தாவீது என் சகோதரர்களே, ஆண்டவர் நமக்கு அளித்துள்ளவற்றிலிருந்து இப்படியெல்லாம் நீங்கள் செய்யக்கூடாது:24 இதன் பொருட்டு நீங்கள் சொல்வதைக் யார் கேட்பார்கள்? ஏனெனில் போரிடச் செல்வோரின் பங்கு எவ்வளவோ அதே அளவு நான் போர் பொருள்களை காத்தவரின் பங்கும் இருக்கும் என்றார்.25 இந்த முறையை இன்று வரை உள்ளதுபோல், இஸ்ரயேலர் பின்பற்றும்படி தாவீது நியமக் கட்டளையுமாக ஏற்படுத்தினார்.26 தாவீது சிக்லாகுக்கு வந்த போது கொள்ளைப் பொருள்களின் ஒரு பகுதியை யூதாவின் பெரியோர்களான தம் நண்பர்களுக்கு அனுப்பிவைத்துக் கூறியது: இதோஆண்டவரின் எதிரிகளிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களுள் ஒரு பகுதியை உங்களுக்கு என் அன்பளிப்பாய் அனுப்புகிறேன் என்றார்.27 பின்வரும் தம் நண்பர்களுக்கு அவர் அனுப்பினார்: பெத்தேல், இராமோத்தின் தென்பகுதி, யாத்திர் ஆகியவற்றில் இருந்தார்.28 அரோயேர், சிப்மேத்து, எசுத்தமோகு ஆகியவற்றில் இருந்தோர்.29 இராக்கால், எரகுமவேலரின் நகர்கள், கேனயரின் நகர்கள் ஆகியவற்றில் இருந்தோர்:30 ஓர்மா, பொராசான், அத்தாகு ஆகியவற்றில் இருந்தோர்:31 எபிரோனில் தாவீதும் அவர் தம் ஆள்களும் நடமாடிய எல்லா இடங்களில் இருந்தோர்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!