ஏன் இப்படி இருக்கீங்க? இது வேண்டாம்!!!

லூக்கா 7:31-35

இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

வாழ்க்கையில் ஒருசிலரை நாம் புரிந்துக்கொள்வதே மிகக் கடினம். அவர்களோடு பயணிப்பதே மிகவும் சிரமம். அப்படிப்பட்டவர்கள் நம் அருகில் இருந்துவிட்டால் நாம் அவ்வளவுதான். யார் அவர்கள்? என்பதை நற்செய்தி வாசகம் வெளிப்படையாக எடுத்துயம்புகிறது.

எல்லாவற்றிலும் தவறு கண்டுபிடிப்பவர்கள் தான் அவர்கள். இப்படிப்பட்டவர்கள் இருக்குமிடம் இருக்கின்ற இன்பத்தையும் இழந்துவிடும், ஆண்டவர் இயேசுவை கூட இன்பமாய் இருக்க விடாமல் இவர்களின் வார்ததைகள் தடுத்திருக்கின்றன. இவர்கள் கண்டிப்பாக மாறனும். இந்த நிலை வேண்டாம் என அவர்களை இன்றைய வழிபாடு வளமையான மாற்றத்திற்கு வரவேற்கிறது. இரண்டு விதமான அழைப்புக்கள்.

1. உயர் எண்ணத்திற்கு வருக!
எதற்கெடுத்தாலும் தவறு கண்டுபிடிக்கும் மனநிலை கொண்டவர்கள் உயர் எண்ணத்திற்கு வர வேண்டும். உயர் எண்ணம் தான் எல்லாரையும் உயர்வாக பார்க்க வேண்டும் என கற்றுத்தரும். உயர் எண்ணம் கொண்டவர்கள் தவறு கண்டுபிடிக்க மிகவும் தயங்குவார்கள்.

2. உற்சாகப்படுத்த வருக!
அடுத்தவரிடம் தவறு கண்டுபிடிப்பவர்கள் உற்சாகம் என்ற ஊக்கமருந்தை அருந்த வேண்டும். அந்த உற்சாக மருந்தை நாம் பிறருக்கு இலவசமாக வழங்க வேண்டும். போதும் போதும் என்று சொல்லும அளவுக்கு அள்ளி அள்ளி வழங்க வேண்டும். இந்த மருந்து அடுத்தவரிடம் உள்ள தவறுகளை பெரிதுப்படுத்தாது. மாறாக ஏற்றுக்கொள்ள வழிவகை செய்யும்.

மனதில் கேட்க…
1. நான் தவறு கண்டுபிடிப்பது மிகவும் தவறுதானே? மாற்றனும் அல்லவா?
2. பிறரை உயர்வான எண்ணத்தோடு நான் தினமும் பார்க்கனும் அல்லவா?

மனதில் பதிக்க…
கடவுள் படைத்தது அனைத்தும் நல்லதே.
நன்றி உணர்வுடன் ஏற்றுக் கொண்டால் எதையும் விலக்க வேண்டியதில்லை. (1திமொ 4:4)

~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.