சீடத்துவ வாழ்க்கை

இயேசுவைப்பின்பற்ற விரும்பும் சீடர்கள் அவர்களுடைய வாழ்வில் எதைப்பற்றிக்கொண்டு வாழக்கூடாது என்பதை, இன்றைய நற்செய்த மூலமாக நமக்கு அறிவிக்கிறார். 1. பாதுகாப்பு. இந்த உலகத்தில் வாழக்கூடிய மக்கள் அனைவருமே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். பாதுகாப்பிற்கு ஒரு வீடு, ஒரு குடும்பம், ஒரு வேலை என்று, வாழ்வை பாதுகாப்போது எண்ண நினைக்கிறவர்கள், இந்த உலகத்தில் வாழ்கிற மக்கள். ஆனால் இயேசு இதனைக் கடந்து நிற்கிறார். தனக்கென்று, எந்த ஒரு பாதுகாப்பான வேலையும் தேவை இல்லை, என்று கடவுளின் பராமரிப்பில் முழுமையான நம்பிக்கை வைக்கிறார்.

2. எதிர்ப்பு. உலகத்தில் வாழக்கூடிய மனிதர்கள் விழுமியங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. ஏனென்றால் எதிர்ப்பசை் சம்பாதிக்க பயப்படுகிறார்கள். தங்களுக்கு எந்த பிரச்சனையும் வராத இடத்தில், பாதுகாப்பாக இருப்பதற்கு ஆசைப்படுகிறார்கள். இதனைச் சொன்னால், எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டி வரும், எனவே, இதனை எதிர்க்க வேண்டியதில்லை. நமக்கு ஏன் வீண் பொல்லாப்பு? என்று, யாரையும் பகைத்துக்கொள்ள விரும்புவது கிடையாது. இயேசு அப்படி வாழவில்லை. உண்மையை உரக்கச் சொல்கிறார். துணிந்து சொல்கிறார். அதற்கு எத்தகைய எதிர்ப்பையும் ஏற்றுக்கொள்கிறார். 3. அடுத்தவரின் பார்வை. மற்றவர் என்ன நினைக்கிறார்கள்? என்னை எப்படிப்பார்க்கிறார்கள்? நான் செய்வதை, சரியென்று ஏற்றுக்கொள்கிறார்களா? என்று, அடுத்தவரை மையப்படுத்தியே நமது வாழ்க்கை அமைந்து இருக்கிறது. ஆனால், இயேசு அடுத்தவர்க்காக வாழவில்லை. தனக்காக, தனது மனச்சாட்சியின்படி வாழ்ந்தார்.

இயேசுவின் சீடர்களாக இருக்கிற நாம், அவரைப்பின்பற்ற வாழ விரும்புகிற நாம், இயேசுவின் இந்த பண்புகளை நமது வாழ்வின் விழுமியங்களாக உயர்த்திப்பிடிப்போம். அப்போது, நமது வாழ்வும், இயேசுவின் வாழ்வைப்போல, மக்களுக்கு பயன்தரும் வாழ்வாக அமையும் என்பதில், மாற்றுக்கருத்தில்லை.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.