பழிவாங்கல்

பெரிய ஏரோது, தனக்குப் பிறகு தான் ஆண்ட நிலப்பரப்பை, தனது மூன்று மகன்களுக்கும் பிரித்துக்கொடுத்தான். யூதேயா, சமாரியா மற்றும் இதுமேயா பகுதிகளுக்கு ஆர்க்கிலாஸ் பொறுப்பாகவும், கலிலேயா, பெரீயா பகுதிகளுக்கு ஏரோது அந்திபாசும் மற்றும் யோர்தானின் கிழக்குப்பகுதிகளுக்கு உட்பட்ட பரப்பிற்கு பிலிப்பும் பொறுப்பாக நியமிக்கப்பட்டார்கள். இதில், ஆர்க்கேலாஸ், நிர்வாத்திறமை இல்லாதவனாக இருந்தான். உடனே, உரோமையர்கள் அவரைப் பதவியில் இருந்து எறிந்துவிட்டு, உரோமை ஆளுநரைப் பொறுப்பாக நியமித்தனர். அந்த உரோமை ஆளுநர் தான் பிலாத்து.

பிலாத்து, ஒரு பெரிய தண்ணீர் தொட்டி ஒன்று கட்ட வேண்டும், என்று முடிவு செய்கிறான். அதற்கு நிறைய பணம் தேவை. அதை யெருசலேம் தேவாலயத்திலிருந்து எடுக்க முடிவு செய்கிறான். ஏனென்றால், யெருசலேம் ஆலயம் அவனுடைய கட்டுப்பாட்டிற்குள் கீழாக வரக்கூடிய பகுதி. பிலாத்துவின் இந்த முயற்சிக்கு, யூதர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். ஏனென்றால், யெருசலேம் தேவாலயத்தில் செலுத்தப்படும் காணிக்கை கடவுளுடையது, கடவுளுக்கு உரியது. அதை வேறு யாரும் எடுத்து, வேறு எதற்காகவும் பயன்படுத்த மாட்டோம், என்பதில் உறுதியாக இருக்கின்றனர். அதிலும், கலிலேயாவில் வாழ்ந்த யூதர்கள் துணிச்சல்மிக்கவர்கள். பிலாத்துவின் இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்தார்கள். எனவே, அவர்களைக் கொல்ல, பிலாத்து தருணம் பார்த்துக்கொண்டிருந்தான். வாய்ப்பு கிடைத்ததும் கொன்றுவிட்டான்.

பழிவாங்குகின்ற மனப்பாங்கு, மனித சமுதாயத்தின் தொடக்கத்திலிருந்தே, தோன்றி வந்திருக்கிறது. இன்றைக்கு அது மிகப்பெரிய விருட்சமாக வளர்ந்து, பல மனிதர்களின் முடிவுக்கு காரணமாக இருந்திருக்கிறது. பிலாத்துவும் இதற்கு எடுத்துக்காட்டு. தனது தவறை நியாயப்படுத்துவதும், தனது கருத்தியலை நியாயப்படுத்துவதின் வெளிப்பாடுதான், இந்த பழிவாங்கல். அது கிறிஸ்வத்திற்கு எதிரான செயல். நம் உள்ளத்தில் இருக்கக்கூடிய பழிவாங்குதல் குணத்தை அறவே அகற்றுவோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.