Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா - 10 (அக்டோபர் - 2015 )
வேதாகமப் பகுதி : இணைச்சட்டம் 18 லிருந்து 34 வரை

1. மறைவானவை யாருக்கும் வெளிப்படுத்தப்பட்டவை யாருக்கும் உரியது என்று வாசிக்கிறோம்?
கடவுளாகிய ஆண்டவருக்கும்,நமக்கும் நம் பிள்ளைகளுக்கும்.
கடவுளுக்கும், மனிதருக்கும்
ஆண்டவருக்கும், பிள்ளைகளுக்கும்

2. ஒரே சாட்சியின் வாக்கு மூலத்தை முன்னிட்டு எவரும் கொலை செய்யப்படக்கூடாது, பின் எத்தனை சாட்சி வேண்டும்?
2 சாட்சி
3 சாட்சி
2 or 3 சாட்சி

3. கன்னிமைக்காணவில்லை என்று பொய்யாக அவதூறு சொல்லும் மனிதனிடம் நகரத்தலைவர் எத்தனை வெள்ளிக்காசு தண்டம் விதிப்பார்?
50 வெள்ளிக்காசுகள்
100 வெள்ளிக்காசுகள்
10 வெள்ளிக்காசுகள்

4. பழிவாங்குவதும்,கைம்மாறு அளிப்பதும் எனக்கு உரியன என்று எந்த அதிகாரத்தில் வாசிக்கிறோம்?
32:35
28:45
30:19

5. வேசித்தனத்தால் பிறந்தவன் எத்தனை தலைமுறை வரைக்கும் ஆண்டவரின் திருப்பேரவைக்குள் நுழையலாகாது?
3 தலைமுறை
10 தலைமுறை
எக்காலத்திலும் நுழையலாகாது

6. ஆண்டவர் நூனின் மகனாகிய யோசுவாவுக்குக் கட்டளையிட்டுக் கூறியது என்ன?
வலிமை பெறு, துணிவுகொள்
நான் உன் கூடவே வருவேன்
உன்னை விட்டு விலகமாட்டேன்

7. வேற்றினத்தாரின் அருவருப்பான வழக்கங்கள் குறித்த எச்சரிக்கை எது?
ஆண்டவருக்கு அஞ்சி நடப்பது
கீழ்படியாமை
குறி சொல்லி,நாள் பார்த்து ,சகுனங்களை நம்பி மந்திரவாதிகளை ஏவிவிடுதல்

8. யோசுவாவின்மேல் மோசே தம் கைகளை வைத்ததால் அவர் எதனால் நிரப்பப்பட்டார்?
தூய ஆவியால்
ஞானத்தின் ஆவியால்
ஆண்டவரின் அருளன்பால்

9. இஸ்ரயேல் மக்கள் யோர்தானைக் கடந்தபின் ஆசி வழங்குமாறு எந்த மலையின் நின்றனர்?
கெரிசீம்
ஏபால்
நெபோ

10. சாவுக்கு ஏதுவான பாவம் செய்த மனிதனை ஏன் மரத்தில் தொங்கவிட வேண்டும்?
கீழ்படியாதவன்
தீட்டுப்படுத்தப்பட்டவன்.
அவன் கடவுளால் சபிக்கப்பட்டவன்

11. கடவுளாகிய ஆண்டவர் கட்டளை இடும் கட்டளைகள் யாவும் எங்கே இருக்கிறது?
உன் வாயில், உன் இதயத்தில் உள்ளது
கடல் கடந்து சென்று கொண்டுவரும்படி உள்ளது
அது விண்ணில் இருக்கிறது

12. இஸ்ரயேல் மக்கள் போரிடத் தொடங்குமுன், குருக்கள் முன்வந்து வீரர்களிடம் என்ன சொல்ல வேண்டும்?
நீங்கள் கவலைப்படவேண்டாம்
உங்கள் இதயம் சோர்ந்து போகவேண்டாம்.
உங்கள் ஆண்டவரே போரிடுவார்

13. ஆண்டவரின் அன்புக்கு உரியவன், பாதுகாப்புடன் வாழ்பவன், அவன் யார்?
யூதா
யோசேப்பு
பென்யமீன்

14. நாம் மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திற்கும் ஆசி வழங்கவும்,தம் நன்மைகளின் கருவூலமாகிய _____________ ஆண்டவர் உனக்காகத் திறப்பார்
வானத்தை
மழைநீரை
புதையலை

15. இஸ்ரயேலில் " மிதியடி கழற்றப்பட்டவனின் வீடு என்றழைக்கப்படும் " என்று பெயர் பெற்றவன் யார்?
தன் அண்ணன் பெயரை இஸ்ரேலில் நிலை நிறுத்த விரும்பாதவன்
தன் அண்ணன் மனைவியாகிய அண்ணியை ஏற்காதவன்
தன் சகோதரனின் வீட்டைக் கட்டாதவன்




Free counters!