Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா 105 - September 2023
வேதாகமப் பகுதி : 1 யோவான் (1 John)

1. தங்கள் கைகளினால் தொட்டது எது என யோவான் கூறுகிறார்?
அப்பம்
இரசமாக மாறிய தண்ணீர்
ஜீவ வார்த்தை
மேற்கூறிய அனைத்தும்
மேற்கூறிய எதுவும் இல்லை

2. நம் பாவத்தை சுத்திகரிப்பது எது என யோவான் கூறுகிறார்?
இயேசு கிறிஸ்துவின் இரத்தம்
தண்ணீர் ஞானஸ்நானம்
கடவுளின் வார்த்தை
மேற்கூறிய அனைத்தும்
மேற்கூறிய எதுவும் இல்லை

3. நாம் பாவம் செய்தால் செய்ய வேண்யெது என்ன ?
சாத்தான் மேல் குற்நம் சாட்டுதல்
பாவங்களை அறிக்கையிடுதல்
திருத்பவும் பாவம் செய்தல்
மேற்கூறிய அனைத்தும்
மேற்கூறிய எதுவும் இல்லை

4. நாம் பாவம் செய்யும் போது இயேசு நமக்காக செய்வது என்ன?
பிதாவிடம் பரிந்து பேசுகிறார்
குற்ற உணர்வு கொள்கிறார்
கடவுளின் வார்த்தை
மேற்கூறிய அனைத்தும்
மேற்கூறிய எதுவும் இல்லை

5. நாம் இப்பொழுது யாராக இருக்கிறோம் என யோவான் கூறுகிறார்?
கிறிஸ்தவர்கள்
தேவனுடைய பிள்ளைகள்
முதன்மை குருக்கள்
பரிசுத்த குலம்
தனித்தன்மை வாய்ந்தவர்கள்

6. யோவான் பாவத்தை எவ்வாறு வரையறுக்கிறார்?
நேர்மையற்ற செயல்கள்
தேவனுடைய முத்திரை தரிக்கப்படாதிருத்தல்
நியாயப் பிரமாணத்தை மீறுதல்
மேற்கூறிய அனைத்தும்
மேற்கூறிய எதுவும் இல்லை

7. திரும்பவும் பிறந்தவன் யார் என யோவான் கூறுகிறார்?
நம்பிக்கையில் ஒன்றித்திருப்பவன்
பாவம் செய்யாதவன்
மகிழ்ச்சியாயிருப்பவன்
கூக்குரலிடுபவன்
மேற்கூறிய எதுவும் இல்லை

8. சகோதர சிநேகமின்மையை குறிக்க யோவான் சுட்டிக்காட்டும் பழைய ஏற்பாட்டு பாத்திரம் யார்?
காயீன்
ஏசா
இஸ்மவேல்
நாபால்
மேற்கூறிய எதுவும் இல்லை

9. நாம் எப்படி அன்பு கூர வேண்டும்; என யோவான் கூறுகிறார்?
வார்த்தையினாலும் நாவினாலும்
கிரியையினாலும் உண்மையினாலும்
ஆவியினாலும் உண்மையினாலும்
மேற்கூறிய அனைத்தும்
மேற்கூறிய எதுவும் இல்லை

10. நாம் ஏன் அனைத்து ஆவிகளையும் நம்பாமல் அந்த ஆவி தேவனிடத்திலிருந்து வந்ததா என ஆராய வேண்டும்?
சாத்தான் கொல்லவும் அழிக்கவும் வகை தேடுவதால்
அநேகங்கள்ள தீர்க்கத்தரிசிகள் உலகில் தோன்றியிருப்பதால்
ஞானத்தின் ஆவி நமக்கு அருளப்பட்டிருப்பதால்
மேற்கூறிய அனைத்தும்
மேற்கூறிய எதுவும் இல்லை

11. உலகிலிருக்கிறவரிலும் பெரியது யார் /எது?
வான தூதர்கள்
உங்களிலிருப்பவர்
புனிதர்கள்
மேற்கூறிய அனைத்தும்
மேற்கூறிய எதுவும் இல்லை

12. தேவனுடைய கட்டளைகள் எத்தகையவை என யோவான் கூறுகிறார்?
பாரமானவைகள்
உண்மையானவைகள்
நிலையானவைகள்
மேற்கூறிய அனைத்தும்
மேற்கூறிய எதுவும் இல்லை

13. உலகத்தை ஜெயிக்கிற ஜெயம் எது?
விசுவாசம்
உண்மை
அன்பு
மேற்கூறிய அனைத்தும்
மேற்கூறிய எதுவும் இல்லை

14. உலகில் சாட்சி பகரும் மூன்று காரணிகள்; எவை?
தந்தை, வார்த்தை, பரிசுத்த ஆவி
ஆவி, தண்ணீர், இரத்தம்
மோசே, எலியா, இயேசு
மேற்கூறிய அனைத்தும்
மேற்கூறிய எதுவும் இல்லை

15. நாம் எதற்கு விலகி நம்மை காத்துக்கொள்ள வேண்டும்?
தகாத உறவுகள்
விக்கிரகங்கள் 
பொய்யர்கள்
அவிசுவாசிகள்
மேற்கூறிய எதுவும் இல்லை 





Free counters!