Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா - 13 (ஜனவரி- 2016 )
வேதாகமப் பகுதி : நீதித் தலைவர்கள் 1 to 12 வரை

1. கிதியோன் மிதியானியரை தோற்கடிக்க எத்தனை பேர் மூலம் ஆண்டவர் விடுவிப்பதாக கூறினார் ?
10,000 பேர்களைக்கொண்டு
22,000 பேர்களைக்கொண்டு
300 பேர்களைக்கொண்டு

2. நான் செய்தவாறே, கடவுள் எனக்குச் செய்துள்ளார் என்று சொன்னது யார்?
அதோனிபெசக்
ஒத்னியேல்
கூசான்

3. செபுலோனைச் சார்ந்த ஏலோன் எத்தனை ஆண்டுகள் இஸ்ரயேலில் நீதித் தலைவராக விளங்கினார் ?
7 ஆண்டுகள்
10 ஆண்டுகள்
8 ஆண்டுகள்

4. "பொக்கிம்" என ஒரு நகரத்திற்கு பெயரிடப்பட்டதன் காரணம் என்ன?
ஆண்டவரின் தூதர் சொல்லிய வார்த்தையை கேட்டு இஸ்ரயேல் மக்கள் அழுததால்
நான் அவர்களை உங்கள் முன்னிலையிலிருந்து துரத்திவிடமாட்டேன் என்று தூதர் சொன்னதால்
அவர்கள் தெய்வங்கள் உங்களுக்கு கன்னியாக இருப்பார்கள் என்பதால்

5. அப்பா, நீங்கள் ஆண்டவருக்கு வாக்கு கொடுத்துவிட்டதால் உங்கள் வாக்கின்படியே எனக்கு செய்யுங்கள், இது யாருடைய கூற்று?
தோலா
யாயிர்
இப்தாவின் புதல்வி

6. இஸ்ரயேல் மக்கள் மோவாபின் மன்னன் எக்லோனுக்கு எத்தனை ஆண்டுகள் அடிமைப்பட்டிருந்தனர் ?
18 ஆண்டுகள்
20 ஆண்டுகள்
40 ஆண்டுகள்

7. கிலயாதைச் சார்ந்த இப்தா வலிமை மிக்க போர் வீரர். ஆனால் இவர் ஒரு ------------------- மகன்.
இறைவாக்கினர்
விபச்சாரியின்
விலைமாதின்br>

8. " உமக்காக கடவுளின் செய்தி ஒன்று என்னிடம் உள்ளது " இது யாருடைய கூற்று?
சம்கார்
ஏகூது
எக்லோன்

9. அபிமெலக்கு இஸ்ரயேல் மக்கள் மீது எத்தனை ஆண்டு ஆட்சி செய்தான்?
3 ஆண்டுகள்
5 ஆண்டுகள்
3 மாதம்

10. சீசராவை கொன்றது யார்?
பாராக்
எபேர்
யாவேல்

11. நான் உங்களை ஆளமாட்டேன்,என் மகனும் ஆளமாட்டான் ,பின்னே யார் ஆள்வார் ?
ஆண்டவரே
கடவுள்
மிதியானியர்

12. பெண் கழுதைகள் மீது விரைந்து செல்வோரே!விலைமிகு கம்பளத்தில் வீற்றிருப்பவரே! பாடி மகிழுங்கள், என்று பாடியது யார்?
தெபோரா
தெபோரா & பாராக்கு
பாராக்கு

13. கிதியோன் ஒரு பலிபீடம் கட்டி " நலம் நல்கும் ஆண்டவர் " என அழைத்தார். அந்த பலிபீடம் எந்த ஊரில் உள்ளது?
யோர்தான்
ஒபிரா
தமாத்தா

14. 'மேரோசைச் சபியுங்கள்' இது யார் சொன்னது?
ஆண்டவரின் தூதர்
ஆண்டவர்
கடவுள்

15. "வலிமை மிக்க வீரனே ! ஆண்டவர் உன்னோடு இருக்கிறார்" யார் அந்த வீரன்?
எருபாகால்
கிதியோன்
அபயேசர்




Free counters!