Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா - 17 (மே - 2016 )
வேதாகமப் பகுதி : 1சாமுவேல் 11-19 வரை

1. யாபேசு மக்களிடம் அம்மோனியன் நாகாசு என்ன கூறினான்?
கிலயாதிலுள்ள அனைவரையும் தாக்குவேன்
கிலயாதிலுள்ள பயிர்களை நாசமாக்குவேன்
கிலயாதிலுள்ள பெண்கள் அனைவரையும் மனைவியாக்குவேன்
ஒவ்வொருவரின் வலக் கண்ணும் பிடுங்கப்படும்

2. கோதுமை அறுவடையன்று இடியும் மழையும் ஏன் அனுப்பினார்?
ஏனெனில் அவர்கள் சிலை வழிபாடு செய்தனர்
ஏனெனில் அவர்கள் கடவுளின் பேழையை திரும்ப அளிக்காததால்
ஓர் அரசனைக் கேட்டது, ஆண்டவர் கண்முன் செய்த மாபெரும் குற்றம்
அவர்கள் வருந்த வேண்டும் என்பதற்காக

3. ஆண்டவருக்கு எதிராக புரியும் குற்றம் என்று சாமுவேல் எதை கருதினார்?
விபச்சாரம்
இஸ்ராயேலுக்காக மன்றாடுவதை நிறுத்துவது
சிலை வழிபாடு
பொய் பேசுவது

4. சாமுவேல் கில்காலுக்கு வராததால் சவுல் என்ன செய்தார்?
வேறொரு மனிதனை போதகராக நியமித்தான்
யோர்தானில் ஒரு பலிபீடத்தைக் கட்டினான்
சாமுவேலைக் கண்டுபிடிக்க ஒரு தூதனை அனுப்பினான்
எரிபலிக்கு ஏற்பாடு செய்தான்

5. சவுல் எதைக்கொண்டு தாவீதை கொலைச் செய்ய முயற்சித்தான்?
அம்பினால்
ஈட்டியால்
கோலியாத்தின் வாளால்
விஷ உணவினால்

6. பெலிஸ்தியர் அனைவரிடமும் நடுக்கம் ஏன் ஏற்பட்டது?
பெருங்கல் மழை
கடவுளின் தூதர்கள்
ஆண்டவரால் ஏற்பட்ட நடுக்கம்
இடி

7. சவுல் தேனை உண்டதால் யாரை கொலை செய்ய திட்டமிட்டான்?
அபிசாய்
அசாகேல்
யோனத்தான்
யோவாப்

8. சவுலின் படைத்தலைவன் யார்?
அபிசாய்
அப்னேர்
அசாகேல்
யோவாப்

9. பெலிஸ்தியரின் நூறு நுனித்தோல்களை கொண்டுவந்தால் போதும் என்று சவுல் ஏன் தாவீதிடம் கூறினான்?
அவனை சோதனை செய்வதற்காக
அவனை மருமகனாக ஏற்றுக்கொள்வதற்காக
பெலிஸ்தியரிடம் வெற்றிக்கொள்வதற்காக
தாவீது பெலிஸ்தியர் கையில் அகப்பட்டு மடியவேண்டும் என்பதற்காக

10. சவுல் யார் மேல் பழி சுமத்தினான்?
மனைவி
யோனத்தான்
பிசாசு
மக்கள்

11. பலியைவிட சிறந்தது எது?
நேர்மையை நிலைநாட்டுவது
உண்மையை பேசுவது
கீழ்ப்படிதல்
நேசிப்பது

12. எது சூனியத்திற்கு நிகரான பாவம்?
விபச்சாரம்
சிலை வழிபாடு
கலகம்
திருட்டு

13. ஆண்டவர் ஒரு மனிதனை எவ்வாறு பார்க்கின்றார்?
முகத்தை
அகத்தை
அவன் உயரத்தை
புத்திசாலித்தனம்

14. தாவீதை சவுல் தம் வீட்டிற்கு ஏன் அழைத்தார்?
யோனத்தானின் நண்பனாக இருக்க
அவரை பாதுக்காக்க
யாழை மீட்ட
அவருக்கு பணிவிடை புரிய

15. கோலியாத்தின் தலையை தாவீது எவ்வாறு கொய்தான்?
கூர்மையான கத்தி கொண்டு
கோலியாத்தின் வாளால்
தம் பையில் உள்ள கல்லால்
தம் கைகளால்




Free counters!