Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா - 2 (பெப்ரவரி 2015)
வேதாகமப் பகுதி : தொடக்கநூல் (ஆதியாகமம்) : 21 முதல் 40ம் அதிகாரம் வரை

1.ரெபேக்கா ஈசாக்கை கண்டவுடன் என்ன செய்தாள்?
ஈசாக்கை பணிந்துக்கொண்டாள்.
தம் முக்காட்டை எடுத்து தம்மை மூடிக்கொண்டாள்.
தான் யாரென்று ஈசாக்குக்கு அறிமுகப்படுத்திக்கொண்டாள்.

2. தன் மகனுக்கு எதிரான வார்த்தை ஆபிரகாமுக்கு மிகுந்த வேதனையாயிருந்தது. யார் அந்த மகன்?
சிம்ரான்
ஈசாக்கு
இஸ்மயேல்

3. என் தலைவரே! என் வார்த்தையைக் கேளும்.இது யாருடைய கூற்று?
ஆபிரகாம்
இத்தியர்
எப்ரோன்

4. உமது முகத்தை காண்பது கடவுளின் முகத்தை காண்பதுபோல் உள்ளது என்று யார் யாரிடம் சொன்னது?
யாக்கோபு ஏசாவிடம்
ஏசா ஈசாக்கிடம்
ராகேல் யாக்கோபிடம்

5. "பெயேர்செபா" என்று அழைக்கப்பட்டதின் காரணம் என்ன?
அந்த இடத்தில் ஆணையிட்டுக்கொண்டதால்
இந்த கிணற்றை தோண்டியது நான்தான் என்பதற்கு சான்றாக
உடன்படிக்கை செய்துகொண்டதால்

6. யாக்கோபு ராகேலிடம் "நான் என்ன கடவுளா"? என ஏன் சினம் கொண்டார்?
நீர் எனக்கு பிள்ளைகளைத் தாரும். இல்லையேல் செத்துப்போவேன் என்றதால்
லேயாள்மேல் பொறாமை கொண்டதால்
என் பணிப்பெண் உடன் கூடி வாழ் என்றதால்

7. நீ கடவுளுக்கு அஞ்சுபவன் என்று இப்போது அறிந்துக்கொண்டேன். இது யார் யாரிடம் கூரியது?
கடவுள் ஆபிரகாமிடம்
ஆபிரகாம் தன் வேலைக்காரரிடம்
ஆண்டவரின் தூதர் ஆபிரகாமிடம்

8. யோசேப்பு தான் கண்ட கனவை தன் தந்தைக்கும்,சகோதரர்களுக்கும் சொல்லிய பொழுது அவர்கள் என்ன சொன்னார்கள்?
உன் கனவுப்படி உன்னை வணங்குவோம்
பொறாமை கொண்டனர்
தங்கள் மனதில் வைத்துக்கொண்டனர்

9. இஸ்மயேல் எத்தனை வருஷம் உயிர் வாழ்ந்தார்?
137 வருஷம்
127 வருஷம்
135 வருஷம்

10. லேயாள் தூதாயிம் கனிகளை ஈடாகக் கொடுத்து யாரை வாங்கினாள் ?
தன் மகனை
வேலைக்காரியை
தன் கணவனை

11. அவள் என்னைக்காட்டிலும் நேர்மையானவள்.அவள் யார்?
தீனா
தாமார்
லேயாள்

12. கனவுக்கு பொருள் [அர்த்தம்] சொல்வது யாருக்குரியது?
கடவுள்
யோசேப்பு
பார்வோன்

13. கடவுளோடும்,மனிதரோடும் போராடி வெற்றிக்கொண்டவர் பெயர் என்ன?
இஸ்ரயேல்
யாக்கோபு
ஆடவர்

14. யாக்கோபு ராகேல் மீது வைத்திருந்த அன்பின் மிகுதியால் கூடுதலாக எத்தனை ஆண்டுகள் சில நாட்களாக எண்ணினார்?
7 ஆண்டுகள்
14 ஆண்டுகள்
10 ஆண்டுகள்

15. உனக்குரிய சாபம் என்மேல் விழட்டும் என்று யார் யாரிடம் கூறியது?
ஈசாக்கு ஏசாவிடம்
ராகேல் யாக்கோபிடம்
ரெபேக்கா யாக்கோபிடம்




Free counters!